சனி, 5 ஏப்ரல், 2025

Maybe a prodigal daughter ?

 

We are nearing the conclusion of the Lenten season. Next Sunday marks Palm Sunday, and following that, we will commence the Easter Triduum.

After reflecting on the parable of the prodigal sons—yes, sons, not son, because it's not just the younger one who was lost outside the home, but also, significantly, the elder one who was lost within the home, close to the father—today we turn our focus to a daughter of the same merciful father.

Even some of the biblical scholars argue that this gospel passage that we have just heard from the John’s gospel, could have very well fit inside the luke’s gospel, for its message of mercy, forgiveness, and the attention to the last of the society like this woman character.

The woman is caught in adultery. And the jews are bringing her to Jesus. They are asking him his opinion on the Moses’s law of stoning her to death.

The fact that stoning is the demanded punishment indicates that this woman is in the initial phase of marriage. In Israel, marriage occurred in two stages. The first, when the girl was twelve and the boy eighteen, was called the betrothal phase. A year later, cohabitation would begin, and this second phase was the wedding.

If a woman committed adultery during the first phase, the betrothal, she would be stoned. If, on the other hand, the adultery occurred during the second phase, she would be strangled. The demand for this girl, this young girl, to be stoned indicates that she is between twelve and thirteen years old.

According to the law, the eye witness should be the one who throws the first stone. And as soon as Jesus says, ‘anyone who has no sin, may throw the first stone’ no one remains there. Everyone goes away. Maybe there was no witness there for her act of adultery. And it is not important for them. For the trap is not for her, but for him. After all, according to them, she is only a girl, and she is in her early teenage. He is the prey and for that the young lady is made use of.

In front of this cruelty, Jesus does not utter a word. He is speechless and frozen. He is writing something on the ground with his fingers.

Anyone without sin among everyone there, and everyone here, was and is only one, that is Jesus himself. And if at all, anyone can throw a stone on her, it was Jesus. But he is writing a new law. A law of forgiveness and a law of mercy and a law that gives hope to the sinners, all of us, to come back and restart a life of children, leaving away the life of the prodigal children.  

Pope Francis's recent catechesis on the conversion of Zacchaeus helps us understand this moment between Jesus and the young girl. In both cases, an encounter between mercy and misery is experienced. 

"It is the joy of feeling seen, recognized, and above all forgiven. The gaze of Jesus is not one of reproach, but of mercy. It is that mercy which we sometimes find hard to accept, especially when God forgives those whom we think do not deserve it. We murmur because we want to set limits to God's love." 

Brothers and sisters, this is the heart of the Gospel: an invitation to live according to the law of mercy that surpasses that of condemnation. May we bring this mercy into the world, witnessing in our lives the forgiveness and hope we have received. Amen.

 

 

 

 

புதன், 13 நவம்பர், 2024

புனித கன்னி மரியாள் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட திருவிழா (The Presentation of Blessed Virgin Mary in the temple)

இன்று நவம்பர் மாதம் 21 ஆம் நாள். இந்த நாளைத் திரு அவையானது புனிதக் கன்னி மரியாள் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றது.

விவிலியத்தில் நற்செய்தி நூல்களிலோ, அல்லது பவுலடியார் கடிதங்களிலோ அல்லது வேறு எந்த நூலிலோ இந்த விழாவினைக் குறித்த குறிப்புகள் எதுவும் இல்லை. ஆனால் ஆறாம் நூற்றாண்டில் இருந்தே, இவ்விழா கிழக்குத் திரு அவைகளில் கொண்டாடப்பட்டதாக திரு அவை வரலாறு கூறுகின்றது. அப்படி என்றால் இவ்விழாவிற்கான அடிப்படை என்ன என்று பார்ப்போம்.   

புதிய ஏற்பாட்டு நூல்களில் குறிப்புகள் இல்லை என்றாலும் கூட  யிழஉசலிhயட வநஒவ என்று சொல்லப்படும் திருமுறை பட்டியலைச் சேராத நூல்களான யாக்கோபு நற்செய்தி மற்றும் மரியாளின் பிறப்பு நற்செய்தி என்ற நூல்களில் அன்னை மரியாள் எருசலேம் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்வானது குறிப்பிடப்பட்டுள்ளது.

மரியாவின் பெற்றோராகிய புனித சுவக்கின் மற்றும் புனித அன்னா இருவரும் முதிர் வயது வரை குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தனர் ஆயினும் நம்பிக்கையோடு இறைவனிடம் மன்றாடி வந்தனர். வானதூதர் வழியாக மரியாளின் பிறப்பு இவர்களுக்கு அறிவிக்கப்பட்டது மரியாளும் பிறந்தார். இதற்கு நன்றியாக குழந்தை மரியாவை எருசலேம் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு அவரை கடவுளுக்கு காணிக்கை ஆக்கினார்கள். அதன் பிறகு மரியாள் தனது 12-வது வயது வரை ஆலயத்தில் இருந்தார் என்று யாக்கோபு எழுதியுள்ளார்.

மரியாளின் மூன்றாம் வயதில் இந்த நிகழ்வு நடந்ததாகவும் மரியாள் ஆலயத்திலேயே கல்வி கற்றதாகவும் இறைவனின் அன்னையாகும் நிலைக்கு அவர் அங்கு தன்னை தயாரித்ததாகவும் மரியாவின் பிறப்பு நற்செய்தி என்ற புத்தகத்தில்  குறிப்பிடப் பட்டுள்ளது.

பைசான்டைன் பேரரசர் முதலாம் ஜஸ்டின் கிபி 543 ஆம் ஆண்டு எருசலேம் ஆலயத்திற்கு அருகில் ஒரு ஆலயத்தை எழுப்பி அதை புனித கன்னி மரியாளுக்கு அர்ப்பணித்தார். அது முதல் இவ்விழா கிழக்கு திரு அவையில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக ஒன்பதாம் நூற்றாண்டு முதலே மேற்கு திருஅவையிலும், குறிப்பாக இத்தாலியின் தெற்கு பகுதிகளில் கொண்டாடப்பட்டதோடு, 1585 ஆம் ஆண்டு திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்டஸ் இவ்விழாவை உரோமை திருவழிபாட்டு நாள்காட்டில் சேர்த்தார்.

அன்னை மரியாள் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்ட விழாவின் வரலாற்றினை பார்த்தோம். விவிலியத்தில் நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்றாலும் அன்னை மரியாளின் சீடத்துவ வாழ்வும், பணியும் அவரது அர்ப்பணத்திற்கு வெள்ளிடை மலை போல சான்று பகர்கின்றன. 

பெரும்பாலும் நமது தாத்தா பாட்டிகளின் பிறந்தநாள் யாருக்கும் தெரிவதில்லை. ஆயினும் அவர்கள் கொடுத்த அன்பையும், தியாகத்தையும் நாம் என்றும் நினைவு கூறுகிறோம் அல்லவா. திருச்சபையின் மரபார்ந்த விழாக்கள் விலியத்தில் எழுதப்படவில்லை என்றாலும், அவை சுட்டிக் காட்டும் வாழ்வியல் மதிப்பீடுகள் உன்னதமானவையே. 

அன்னை மரியாள் கோவிலில் காணிக்கையாக ஒப்பு கொடுக்கப்பட்ட விழாவை கொண்டாடும் நாம் அன்றாட வாழ்வில் செய்ய வேண்டியவை என்ன என்று பார்ப்போம்.

1. இன்றைய நாளினை உலக அடைபட்ட துறவு வாழ்வு தினமாக திருச்சபை கொண்டாடுகின்றது. வாழ்நாள் முழுவதும் இறைவனோடு ஒன்றித்த தியான வாழ்வால் திருச்சபைக்கு ஜெப ஆற்றல் சேர்க்கின்ற துறவியரை நாமும் பின்பற்றலாம். அன்னை மரியாள் அனைத்தையும் தன் இதயத்தில் தியானித்து வந்தாள் என்று விவிலியம் சொல்கிறது. அன்றாடம் நம்மை அலைக்கழிக்கும் காரியங்கள் ஏராளம் ஏராளம். செய்கின்ற தொழில் சார்ந்து வருகின்ற அழுத்தங்கள் போதாது என்று அலைபேசி, அரசியல், சினிமா போன்ற காரியங்களில் நம்மை நாமே சிதற விடுகின்றோம். நமக்குள் இருக்கும் உள்ளம் என்னும் ஆலயத்தை தரிசிக்க மறந்து விடுகின்றோம். ஆகவே அவ்வப்போது புறம் சார்ந்த அனைத்தையும் அடைத்து விட்டு, உள்ளம் என்றும் கோவிலுக்குள் சென்று, அமைதியில் உறையும் இறையை தரிசிப்போம். இறை தரும் இளைப்பாறுதலை சுவைப்போம். வழிகாட்டுதல்களைக் கேட்போம். காபி பிரேக் போல அமைதி பிரேக் இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமாகிறது.

2. இரண்டாவது அன்னை மரியாளின் 'ஆம்' நமதாகட்டும். இது எங்கனம் ஆகும் என்று கப்ரியல் வான தூதரிடம் கேட்ட அன்னை 'இறைவனால் ஆகாதது ஏதுமில்லை' என்று அவர் சொல்ல கேட்டதும் 'ஆம்! நான் ஆண்டவரின் அடிமை! உன் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்று பதிலளித்தார். அதன் பிறகு அவரது வாழ்வு முழுவதும் இல்லை என்பதே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இறை விருப்பத்தை நிறைவேற்றினார். சிறியதும் பெரியதுமாக அன்றாடம் நாம் எத்தனையோ முடிவுகளை எடுக்கின்றோம். அவற்றில் இறை விருப்பத்தை நாம் நிறைவேற்றுகின்றோமா என்று சிந்திப்போம். மனிதர்களைப் பிரிக்கும், வெறுக்கும், தீய சூழல் நம்மை அணுக அனுமதியாது தாழ்ச்சியும், அன்பும், உதவி செய்யும் பண்பும் கொண்டவர்களாக வாழ நமக்கு நாமே நினைவூட்டுவோம்.

3. அன்னை மரியாளின் நம்பிக்கை நமதாகட்டும். நமது குடும்ப சூழலிலும் நண்பர்கள் வட்டத்திலும் இணைந்து ஜெபிக்கின்ற பண்பினை ஊக்குவிக்கபவர்களாக மாறுவது முக்கியம். மரபார்ந்த முறையில் மனப்பாடமாக ஒப்புவிப்பது மட்டுமே ஜெபம் அல்ல. அது இளைய தலைமுறையினரை விலகிப் போக செய்து விடும். ஆகவே படைப்பூக்கும் நிறைந்த ஜெபங்களை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். அருகாமையில் இருக்கும் ஆன்மீக இடங்களுக்கு நடைபயணமாக செல்லலாம். குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கின்ற ஒவ்வொரு உறுப்பினரின் நற்பண்புகளை குறிப்பிட்டு அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்லலாம். 

4. நம்மைச் சுற்றிலும் நற்செய்தி மதிப்பீடுகளை வளர்த்தெடுப்பது. மனித உறவுகளிலும் செய்யும் தொழிலிலும் உண்மை நேர்மை நீதி உணர்வு கொண்டிருத்தல். மனசாட்சி என்னும் வெளிச்சத்தை மங்க விடாது பேணுதல். அடையும் வெற்றியில் தாழ்ச்சியோடு இருத்தல், வீழ்ச்சி அடைந்தோரை தீர்ப்பிடாது இரக்கம் காட்டுதல், கரம் கொடுத்து உதவுதல், சினத்தைப் பேணாது, பெருந்தன்மையோடு மன்னித்து கடந்து செல்லுதல்

5. நம்பிக்கை வளர்ச்சிக்கான பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுதல். வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதெல்லாம் விவிலிய வகுப்புகள் இறையியல் வகுப்புகளில் கலந்து கொள்ளுதல், விவிலிய வாசிப்பு, இறையியல் புத்தகங்கள் வாசிப்பு போன்றவற்றை அன்றாட பழக்கமாக்குதல். கற்பு, ஏழ்மை , கீழ்ப்படிதல் என்னும் வார்த்தை பாடுகள் நம்மை சிறைப் பிடிப்பவை அல்ல நமக்கு சிறகுகள் தருபவை என்பதை உணர்ந்து, அர்ப்பண வாழ்வுக்காக இளையோரை உற்சாகப்படுத்துதல், துறவற பயிற்சி இல்லங்களுக்கு ஆன்மீக, பொருளாதார உதவிகளை தாராளமாகச் செய்தல். 

6. அன்னையின் கரம் பிடித்து நடத்தல்: ஜெபமாலை, உத்தரியம், திரு உருவம் பதித்த மோதிரம் அல்லது கை காப்பு என்று ஏதாவது ஒன்றின் மூலமாக அன்னை மரியாளின் உடன் இருப்பை நாம் எப்போதும் உணர வேண்டும். ஏனென்றால் அவர் தான் நமக்கு வாழ்க்கை என்னும் நெடுஞ்சாலையில் நாம் காணும் ளுழுளு என்னும் ஆபத்து கால உதவி. உண்மையான சீடர் நம்பிக்கை சோதிக்கப்படும் போதும், புடம் போடப்படும் போதும் உறுதியாக இறைவனின் நம்பிக்கை கொள்பவர். அதற்குரிய முதல் எடுத்துக்காட்டு மட்டுமல்ல. நமக்கான வழிகாட்டியும் கூட. 

அனைவருக்கும் அன்னை மரியாள் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட திருவிழா வாழ்த்துக்களையும் ஜெபங்களையும் உரித்தாக்கி கொள்கிறேன்! நன்றி


சனி, 9 நவம்பர், 2024

Ricordi di Matera: Amicizia, Fede e Fraternità


Quando ripenso agli anni trascorsi a Roma per il mio licenza in diritto canonico, tra il 2014 e il 2017, il mio cuore si riempie di gratitudine per il calore e l’accoglienza che ho trovato a Matera. Durante le vacanze di Natale, Pasqua e l’estate, passavo quel tempo presso la parrocchia di Nostra Signora Addolorata, dove mi sentivo sempre accolto e amato dalla comunità parrocchiale e dal parroco, Don Michele.

Don Michele mi ha trattato come un fratello, nonostante le nostre differenze di nazionalità: io indiano, lui italiano. Il suo affetto sincero è stato per me una benedizione, specialmente in un momento difficile della mia vita. Dopo essere tornato dalla missione in Indonesia, ho attraversato un periodo di incertezza e difficoltà, ma Don Michele mi ha aperto le porte della sua parrocchia e del suo cuore. Mi ha dato rifugio per quattro mesi, fino a quando ho potuto tornare alla mia comunità religiosa a San Ferdinando di Puglia.

Durante quel tempo, la generosità della gente di Matera ha continuato a stupirmi. I collaboratori parrocchiali e i giovani mi hanno fatto sentire davvero a casa, facendomi scoprire le bellezze della città e accompagnandomi in momenti di gioia e fraternità. Mi portavano a visitare i Sassi di Matera, mi accompagnavano nei ristoranti locali e passeggiavamo insieme per la città. Ho avuto anche l’opportunità di partecipare a visite domiciliari, incontrare gli anziani e i malati: esperienze che mi hanno insegnato il valore della prossimità e del servizio.

Ora che vivo a Roma come viceparroco e consigliere dell’Ordine della Madre di Dio, spesso mi tornano in mente quei giorni. Matera non è stata solo un rifugio, ma un luogo dove ho trovato una famiglia spirituale e amici veri. Mi hanno mostrato cosa significa essere Chiesa: una comunità che accoglie, sostiene e ama senza riserve.

Questi momenti rimangono con me, e li porto nel mio cuore come fonte di ispirazione per il mio servizio pastorale. Il calore della comunità di Matera mi ricorda ogni giorno che la forza della Chiesa si costruisce nelle relazioni e nella solidarietà. Spero di poter restituire, nel mio ministero, almeno un po’ di quell’amore ricevuto, continuando a servire con cuore aperto e disponibile.

Matera sarà sempre una parte importante della mia vita, un simbolo di fede, speranza e amore che mi accompagnerà sempre.

 

 

புதன், 23 அக்டோபர், 2024

இந்த ஏ.ஐ உலகில் நீங்கள் இன்னும் ஏன் கடவுள் நம்பிக்கையாளராக இருக்கிறீர்கள்?

இந்தக் கேள்வியை நீங்கள் எதிர்கொண்டதில்லையா? நான் எதிர்கொண்ட போது என்னில் எழுந்த சில சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அல்லது எனக்கே நினைவுபடுத்திக் கொள்ள உதவியாக இருக்கும் என்பதால் பதிவு செய்து வைக்கிறேன். 

அறிவியல் - பெயரிலேயே இருக்கின்றது. அனைத்தையும் அறிந்து கொள்ள முயற்சிக்கும். இன்று இல்லையென்றாலும் என்றேனும் ஒருநாள் எல்லா கேள்விகளுக்கும் விடை காணும். எல்லா நோய்களுக்கும் மருந்து தரும். முதுமையின் போதாமை களையும். மரணம் தவிர்க்கும். அல்லது குறைந்தபட்சம் தள்ளிப்போடும். 

ஒரு பெரிய குளம். அதில் ஒரு மணி நேரத்தில் ஒரு பூ பூக்கிறது. அடுத்த ஒரு மணி நேரத்தில் அது இரண்டு பூவாகிறது. பின்னர் ஒரு மணி நேரத்தில் அது நான்கு ஆகிறது. இப்படியே ஆறு மாதத்தில் பாதி குளம் பூக்களால் நிரம்பி விடுகிறது. முழுக்குளமும் பூவாக இன்னும் ஆறுமாதம் தேவைப்படாது தானே? அடுத்த ஒரு மணி நேரத்தில் முழுக்கிணறும் பூவாகப் போகிறது. அந்த ஒரு மணிநேரம் மிகவும் அற்புதமானது.

அப்படிப்பட்ட ஒரு மணி நேரத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுவரை மனிதக் குலம் இலட்சம் ஆண்டுகளில் கண்டடைந்த எல்லாவற்றையும் விட இந்த இருபது ஆண்டுகளில் எட்டியிருக்கும் தூரம் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இணையம் எல்லாவற்றையும் சாத்தியப்படுத்தியிருக்கிறது. இந்த மாற்றம் நடப்பதைக் காணும் ஒரு மகத்தான யுகத்தில் நாமும் இருக்கிறோம்.

வெற்றிலையில் மை போட்டுப் பார்த்து, காணாமல் போன மாட்டைக் கண்டுபிடித்துத் தரும் மந்திரக்காரர்கள் இன்னும் எங்கள் ஊர்ப்பகுதிகளில் இருக்கிறார்கள். அவர்களது பேரப்பிள்ளைகள் ஸ்பேஸ் எக்ஸ்-இன் 5000 மெட்ரிக் டன் எடைகொண்ட  120 மீட்டர் உயர ராக்கெட், விண்கலத்தை ஏவிவிட்டு பத்திரமாகத் திரும்பிவருவதைத் தங்கள் ஆண்ட்ராய்டு திறன்பேசியில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு தலைமுறைகளையும் நாம் சார்ந்திருக்கிறோம்.

அப்படியென்றால் ஆன்மீகம் என்னவாகும்? கடவுள் என்ன ஆவார்? ஒரு வேளை மரணிக்கா வாழ்வு அமைந்தால் மனிதன் மகிழ்ச்சி அடைந்து விடுவானா? வாழ்வின் அர்த்தம் தான் என்ன? இது போன்ற கேள்விகள் நிறைய பேரிடம் எழுவதைக் காண முடிகிறது. பெரிய வரலாற்று மாற்றங்கள் ஏதுமில்லாத காலத்திலேயே இத்தகையக் கேள்விகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

அறிவியல் வளர்ச்சி ஏதுமில்லாத இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, மாற்றங்கள் இயற்கையாக அமைந்தன. புறச் சூழலுக்கேற்றவாறு உயிரினங்கள் தங்களைத் தக்கவைத்துக்கொள்ள நிறைய கால அவகாசம் இருந்தது. அவற்றின் மரபணுக்களிலேயே  சில பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அவற்றைத்தான் பரிணாம வளர்ச்சி என்கிறோம்.

ஆனால் மனிதன் நெருப்பை, சக்கரத்தை, சட்டத்தை, வேளாண்மையை, வியபாரத்தை கண்டடைந்த வேகம் அவனது அகத்தின் ஆழத்தில் பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதற்குப் போதுமான கால அவகாசத்தைத் தரவில்லை. அந்த மரபணுவிற்கு இந்த உலகம் புதிது. இணையம் புதிது. ஏ.ஐ புதிது.

பிறந்தக் குழந்தை மறுகணமே தாயிடம் பாலருந்தும் ஞாபகத்தை தன் மரபணுவிலேயே சுமந்து கொண்டு வருகிறது. அது மட்டுமா? ஆதாம், ஏவாளிடம் இருந்த விலக்கப்பட்டக் கனிகளுக்கான வேட்கையையும் சுமந்துகொண்டே வருகிறது. காயின், ஆபேலிடம் இருந்த வெறுப்பையும் சுமந்துகொண்டே வருகிறது. சவுல், தாவீதிடம் இருந்த பொறாமை உணர்வையும் கொண்டிருக்கிறது.

அவனது மனம் ஏதேன் தோட்டத்திற்கு வெளியே எங்கோ அலைந்து கொண்டிருக்கிறது.  அங்கிருந்த தனிமையும், பிரிவும், புறக்கணிக்கப்பும், கையறு நிலையும், மரணபயமும் மனிதனை அலைக்கழித்துக் கொண்டுதான் இருக்கின்றது. 

இவற்றையெல்லாம் நீக்கி மீண்டும் மனிதனை ஏதேன் தோட்டத்திற்குள் கொண்டு செல்ல சாத்தியக் கூறுகள் இருப்பதாக அறிவியல் கட்டியம் கூறுகிறது. உலகில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் வாக்குறுதிகள் அளிக்கின்றன. ஆயினும் பெரும்பாலான மனிதர்கள் இவைகளை நம்புவதை விட, கடவுளை நம்புவதே மேல் என்னும் நிலையில் தான் இன்னும் இருக்கிறார்கள். 

அந்தக் கடவுள் நம்பிக்கையில் மனிதர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். தாங்கள் தனிமையில் இல்லை. கடவுள் எப்போதும் உடனிருக்கிறார். மரணம் முடிவு அல்ல. முடிவில்லா காலத்திற்கானத் தொடக்கம். இறந்து போனவர்கள் இறைவன் தரும் அமைதியில் இளைப்பாறுகிறார்கள் என்பது போன்றக் கருத்துக்கள் இழப்புகளையும், வலிகளையும் எதிர்கொள்ள உதவியாக இருக்கின்றன.

ஒருவர் நம்பலாம். நம்பாமல் இருக்கலாம். அது ஒருவரின் தனிப்பட்டத் தேர்வு. என்னிடம் இப்படி ஒரு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும் போது, நான் ஏன் நம்பிக்கையின்மையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? வெறுமைக்குள் விழ வேண்டும். எதுவுமின்மைக்குள் நான் எதைக் கண்டடையப் போகிறேன். ஆகவே நான் நம்புகிறேன். ஆதனால் இருக்கிறேன். அது மட்டுமல்ல. அதனால்தான் இருக்க விரும்புகிறேன்.

கடவுளின் அன்பை சிந்திக்கும் போது, எனக்கு கீழ் வரும் விவிலிய வார்த்தைகள் சடசடவென நினைவுக்கு வருகின்றன. வாசித்துப் பாருங்களேன். 

தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறவேன். உன்னைக் காக்கும் கடவுள் உறங்குவதும் இல்லை. கண் அயர்வதும் இல்லை. உன் பெயரை என் வலக்கரத்தில் பொறித்து வைத்திருக்கிறேன். மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது. என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது. தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.

இதுபோன்ற ஆயிரம் வார்த்தைகள் எனது அகத்தின் ஆழத்தில், அன்பின் ஊற்றுக்கண்களைத் திறந்துவிடுகின்றன. அறிவியலுக்காகவும், அரசியலுக்காகவும் என் அகத்தில் இருக்கும் கடவுள் தேடலை நான் கைவிடப்போவதில்லை. கல் எனக் கண்டால் கல். கடவுள் எனக் கண்டால் கடவுள். கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்பதால் நான் கடவுளைத் தேர்ந்தெடுக்கிறேன். நான் நம்பிக்கையைத் தேரந்தெடுக்கிறேன்.     

புதன், 21 ஆகஸ்ட், 2024

ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும்

'ஹாய் மாலினி, ஐ எம் கிருஸ்ணன், நா இத சொல்லியே ஆகணும், நீ அவ்ளோ அழகு, இங்க வேற யாரும் இவ்ளோ அழக பாத்திருக்க மாட்டாங்க. அண்ட் ஐ எம் இன் லவ் வித் யூ' என்ற வாரணம் ஆயிரம் திரைப்பட வசனம் மிகவும் பிரபலம். தேக்கி வைத்தக் காதலைக் கவிழ்த்துக் கொட்டிவிடத் துடிக்கும் இளம் மனம் அருமையாக வெளிப்படும் வசனம். 

இன்று நானும் அப்படி ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும் என்று உணர்கிறேன். நான் துறவியாக பயிற்சி பெற வீட்டை விட்டு வெளியேறும் போது எனது வயது பதினேழு. 25 வயது நிறைந்த பொழுதில் பயிற்சி நிறைவுற்று அருட்பணியாளர் ஆனேன். இப்போது 37 வயது ஆகிறது. இந்த இருபது ஆண்டுகளில் என்னை நேர்மறையாக பாதித்த ஆளுமைகள் யார் யாரென்று யோசித்துப் பார்த்தால் எனக்கே மிகவும் வினோதமாக இருக்கின்றது. 

நான் அறிந்த வரையில் என் முதல் முன் மாதிரி ஆன்மீகவாதி என்றால் அது காந்தியடிகள் தான். ஆவர் புறவுலகில் ஒரு பேராளுமை மிக்க மக்கள் தலைவராக இருந்தார். நாடு முழுவதும் பயணித்தார். உலக தலைவர்கள் முதல், உள்ளூர் விவசாயிகள் வரை அனைவரோடும் பழகினார். களைப்பறியாமல் உழைத்தார். செயல்பட்டுக்கொண்டே இருந்தார். ஆயினும் தனக்குள் ஒரு ஆன்மீகத்தை அன்றாடம் பேணினார். அவருக்கு புகழ்மிக்க அந்தப் புறவுலகைவிட, அந்த அகவுலகம் மிகவும் முக்கியமானதாகப் பட்டது. ஆதில் அவர் ஒரு வெளிப்படைத் தன்மையைப் பேணினார். பொது வாழ்வில் எல்லாம் அப்பட்டமாக இருக்க வேண்டும் என்று கருதினார். சுட்டாலும், எரித்தாலும் உண்மையின் ஒளியைக் கைவிடாத மகத்தான மனிதர் என்ற வகையில் அவர் ஒரு எட்டாக் கனியாக என்னைக் கவர்கிறார். மிக எளிய முறையில் கூட உங்களால் இந்த உலகை அசைத்துப் பார்க்க முடியும் என்ற அவரது மேற்கோள் மிகவும் பிடிக்கும்.

அடுத்ததாக நான் வியந்த, வியக்கும் பெரிய ஆளுமை கலைஞர் தான். கடவுள், ஆன்மீகம் போன்றவற்றில் நம்பிக்கையில்லாத, அந்தச் சமாச்சாரங்களை அவருக்கே உரிய நக்கல் சிரிப்போடு கடந்து செல்பவராகவும், கலாய்ப்பவராகவும் எனக்குத் தோன்றுகிறார். கலைஞர் எனக்கு வெறும் பிடித்த தலைவர் மட்டுமல்ல. நிச்சயமாக அது வேறு ஏதோவொன்று. ஒரு பெருங்காதல் போல அவரை நினைத்துக்கொள்கிறேன். காந்தியும், கலைஞரும் ஆன்மீகம், அரசியல், கொள்கைகள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றில் இரு வேறு துருவங்கள் என்றாலும், இருவருமே பொதுவாழ்வில் உச்சம் தொட்டவர்கள் என்பதே என்னைக் காந்திக்கு அடுத்ததாக (இணையாக அல்லது சில வேளைகளில் அதற்கும் மேலாக) கலைஞரைக் கருத வைக்கின்றது. உச்சம் என்று நான் கருதுவது அடைந்த பதவிகள் அல்ல. அதை எத்தனையே பொய்யான மனிதர்களும் அடைந்துவிடுகிறார்களே! ஆனால் அந்தப் பதவிகளை வைத்து எளிய மனிதர்கள் எழுந்து நடக்க, பெருங்கருணை மிக்கத் திட்டங்களைச் செயல்படுத்தினார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து, மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு நலவாரியம், (கண்ணியம் மிக்க அந்த வார்த்தைகளை வடிவமைத்தவர் கலைஞரே), போக்குவரத்துக் கழகம், சமத்துவபுரம், உழவர் சந்தை என்று எத்தனையோ எத்தனையோ திட்டங்கள். கலைஞர் என்ற பேராளுமை சமரசங்களும் கொண்டவர்தான் என்றாலும் நிச்சயம் சாதாரண ஆள் இல்லை. தொட்டத் துறைகள் அனைத்திலும் உச்சம் கண்டவர் என்பதால் அவரைப் பற்றியக் கதையாடல்கள் இன்னும் நூற்றாண்டுகளுக்கு நின்று ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதால் அவரைத் தீவிரமாக வெறுப்பவர்கள், முற்றிலும் நிராகரிக்க முயல்பவர்கள் எரிச்சலில் உழன்றுகொண்டுதான் இருக்கவேண்டும்.  

இப்பேராளுமைகள் தவிர்த்து இன்னும் நாம் கடந்து வந்துள்ள பயணத்தில் வியக்க வைக்கும் ஆளுமைகளாக ஒருசிலரைக் குறிப்பிடலாம். சுமகால எழுத்தாளர்கள் மனுஷ்ய புத்திரன், ப. ராகவன், சரவண கார்த்திக்கேயன், அண்ணன் ராஜராஜன் (திராவிட செயல்பாட்டாளர், சுயமுன்னேற்ற ஊக்குவிப்பாளர்) போன்ற ஒருசிலரைக் குறிப்பிட விரும்புகிறேன்.   

மனுஸ்யபுத்திரன் அவர்களின் நீராலானது கவிதைத் தொகுப்பு மிகவும் பிடித்தமானது. புலரியின் முத்தங்கள் படித்திருக்கிறேன். மேலும் அடைமழையென அவர் பொழியும் கவிதை மழைக்காகவே முகநூல் பக்கம் வந்து செல்கிறேன். ஒவ்வொரு அன்றாட நிகழ்வுகளையும் அவர் கவிதை மொழியில், உணர்வு மொழியில் வாசித்து நெக்குருக நிற்க பிடிக்கும். அவருக்கு கலைஞரைப் பிடிக்கும். விடாப்பிடியாக இந்த அழுக்கு உலகை கவிதைச் சமர் செய்து அழகுபடுத்தும் அவரது பிடிவாதம் பிடிக்கும். 'செம்ம ஆள் சார் நீங்க' என்று அவரைப் பார்த்துச் சொல்ல ஆசைப்படுகிறேன். 

அடுத்ததாக இன்று இதைச் சொல்லியே ஆகவேண்டும் என்ற உணர்வைக் கொடுத்த ஆச்சர்யப்படுத்தும் ஆளுமை எழுத்தாளர் பா.ராகவன் அவர்கள். அவரது பதினான்கு புத்தகங்கள் என் கிண்டில் நூலகத்தில் இருக்கின்றன. கடைசியாக முழுமையாகப் படித்து உட்கிரகித்த புத்தகம் மணிப்பூர் கலவரம். அதன் பிறகுதான் ஜெயமோகன் அவர்களின் கன்னி நிலம் படித்தேன். கன்னி நிலம் உண்மையை புனைவாகப் படைத்தது. மணிப்பூர் கலவரம் இன்றைய நிலவரத்தை வரலாற்று பார்வையில் ஆராய்ந்து. தகிக்கும் உண்மையின் தராசு சரியாது சொல்லியது. 

எழுத்தைக் கடந்தும் இம்மனிதர் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற வார்த்தைகளின் கட்டுமஸ்தான, உருண்டு திரண்ட வடிவம் தான் இவர். நேரம் தவறாமை, சொன்ன சொல் தவறாமை, தொடங்கிய காரியத்தை முடித்தே தீருதல், அனைத்திலும் முழுக் கவனம், பிழையின்மை, பிசிறின்மை, போன்றவற்றை வாழ முடியும் என்பதற்கு முன்மாதிரியாக திகழும் அற்புதமான கர்ம யோகி. சாக்கு போக்குகளும், சமரசங்களும் இன்றி வாழும் ஒரு 'பெர்ஃபெக்ட் ஆன ஆள்' என்பதால் விளையாட்டுத்தனங்களுக்கு இடம் கொடாது கண்டிப்பான ஆசிரியருக்குரிய மரியாதையோடு இவரைப் பிடிக்கும்.  

அவரது வாட்சப் சானலில் சமீபத்தில் அவர் எழுதிய ஜந்து நாவல் மற்றும் ஜென் கொலை வழக்கு தொடர்களை அன்றாடம் வாசித்தேன். எனக்குள் இருந்த புனைவு வாசகனை எங்குதான் தொலைத்தேன் என்று தெரியவில்லை. என்னால் வாசிக்க முடிந்ததே தவிர இன்னும் சிறுவயதில் என்னிடம் இருந்த வாசிப்பின்பத்தை இப்போது அனுபவிக்க முடியவில்லை. வாசிப்பிற்குப் பிறகு என்னில் எந்த தடத்தையும் விட்டுச் செல்லாது சென்றுவிட்ட உணர்வு. 

இப்படிப்பட்ட தருணத்தில் 'என்னிடம் நீங்கள் கேட்க நினைக்கும் எதை வேண்டுமானாலும் கேட்கலாம்... என் ஆர்வங்கள் அலையும் எது சார்ந்து நீங்கள் கேட்டாலும் நேர்மையாக பதில் சொல்வேன்.' என்று  தனது மின்னஞ்சல் முகவரியும் கொடுத்திருந்தார். பார்த்த உடனே ஒரு கேள்வியை அனுப்பிவிட்டேன். கொஞ்சம் யோசித்திருந்தாலும் தயங்கியிருப்பேன். காலையில் தற்செயலாக வாட்சப் சானலைத் திறந்தால் எனது கேள்வியும் அதற்கானப் பதிலும் பிரசுரமாகியிருந்தது. ஒரு நிமிடம் உறைந்துவிட்டேன். எத்தனைப் பணிகளுக்கு மத்தியில் இந்த மனிதர் நமக்காக நேரத்ததை தந்திருக்கிறார். யாரோவான எனக்கு அனுப்பிய இந்தப் பதிலைத்தான், அமெரிக்க அதிபர் கேள்வி கேட்டிருந்தாலும் தந்திருப்பார். அப்படிப்பட்ட ஒரு பதில். ஜோடனைகள் இல்லாத இந்த செயல் நேர்த்தியை வியக்கிறேன். மகத்தான ஆசிரியருக்கு எனது பணிவான வணக்கம், நன்றி மற்றும் அன்பு. 

கேள்வி: தங்கள் அ-புனைவு புத்தகங்கள் மிகவும் எளிதாகவும், ஆர்வமூட்டும் நடையிலும் இருப்பதாக உணர்கிறேன். ஆனால் படிக்கத் தொடங்கிய யதி முடிக்க முடியவில்லை. ஜந்து அன்றாடம் படித்தும் மனதில் பதியவில்லை. அல்லது புரியவில்லை.  நான் என்ன செய்ய வேண்டும்? ஆன்றனி பிரான்சிஸ், ரோம்

பதில்: புரிந்துகொள்ளக் கடினமான விவகாரங்களைப் பாமர வாசகர்களும் உணர்ந்து தெளிய வேண்டும் என்பதே நான் எழுதும் சர்வதேச அரசியல் நூல்களின் அடிப்படை நோக்கம். தமிழில் அந்த இயலைத் தொட்டுத் துலக்க அதிகம் பேர் இல்லை. அதனாலேயே தமிழ் வாசகர்கள் உலக நடப்பு அறியாமல் இருக்கக் கூடாதல்லவா? 

தவிர, non-fiction எழுதும்போது நான் ஒரு பத்திரிகையாளனாக மட்டுமே செயல்பட நினைப்பேன். சரியான தகவல்கள் - ஆதாரபூர்வமான தகவல்கள் - எளிய மொழி - நேரடியான வெளிப்பாடு. இவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவேன். அப்படித்தான் செய்ய வேண்டும்; அதுதான் அதற்கான ஒழுக்கம்.

ஆனால் நாவல் என்கிற கலை வடிவம் வேறு. கருத்து சொல்வது அதன் வேலையல்ல.  கதை சொல்வதும் அதன் நோக்கமல்ல. வாழ்க்கை எனக்கு அளித்த சில சந்தர்ப்பங்கள், அனுபவங்களை விலகி நின்று பரிசீலித்து, மதிப்பிடப் பார்க்கிறேன். முடிவே இல்லாத எனது குழப்பங்களையும் வினாக்களையும் அப்பட்டமாக எடுத்து வைத்து விடை தேடிச் செல்கிறேன்.  உண்மையும் பொய்யும் யதார்த்தமும் கனவும் நறுமணமும் துர்நாற்றமும் உக்கிரமும் மென்மையும் அழகும் அருவருப்பும் கண்ணீரும் புன்னகையும் கலந்து துலங்குகிற வாழ்வனுபவங்களை அப்படி அப்படியே - அதே விதமாகத்தானே எடுத்து வைக்க முடியும்? சிறிது மிகை புகுந்தாலும் அது அலங்கோலமாகிவிடும்.  எனவே எழுதப்படும் பொருளுக்கேற்பப் புனைவின் மொழி  உருமாற்றம் கொள்கிறது. 

முறுக்குப் பிழியும் அச்சு போல ஒரு மொழிநடையை உருவாக்கி வைத்துக்கொண்டு, ஏதாவதொரு கதையை உருவாக்கி அதில் போட்டுப் பிழிந்து எடுத்துக்கொண்டே இருக்கலாம். பொழுதுபோக்குக் கதைகளுக்கு அது உதவும். நாவல் வேறு வகை. அதை அப்படிச் செய்ய முடியாது. கூடாது. என்னுடைய ஒரு நாவலே இன்னொன்றைப் போல இராது. நாவலின் கருப் பொருளுக்கேற்ப மொழி தன் முகத்தை மாற்றிக்கொள்ளும். உத்திகளைக் கூடத் திட்டமிட்டுப் பயன்படுத்துவதில்லை. அந்தந்த நாவல், தனக்குத் தேவையானதைத் தானே தேடிக்கொள்ளும்.

உதாரணத்துக்கு, நீங்கள் படித்த ஜந்துவை எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வோர் அத்தியாயமும் தன்னளவில் ஒரு சிறுகதையைப் போன்ற நிறைவினைக் கொள்கிறது. ஆனால் மொத்தமாகப் படிக்கும்போது ஒரு வாரப் பத்திரிகை அலுவலகத்தில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று விலகி நின்று சுட்டிக்காட்டுகிறதல்லவா?

இது திட்டமிட்டுச் செய்ததல்ல. அப்படி அமைந்தது. பணியில் இருக்கும் ஒவ்வொரு நாளும் சிக்கலில்லாமல் கழிந்தால் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஒவ்வோர் ஊழியரும் அன்றைய பொழுது நிறைவாகக் கழிந்ததாக நினைக்கிறார்கள். ஒரு முழுமையை ஒரு நாளைக்குள் தரிசித்துவிட்ட நிம்மதியுடன் மறுநாள் யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள். ஆனால் இறுதிவரை யுத்தம்தான். அதில் சந்தேகமில்லை. அன்றன்றைய நாளின் நிறைவும் அடுத்த நாள் பற்றிய பதற்றமும் இறுதிவரை தொடரும் அமைப்பை வேறெப்படி வெளிப்படுத்த இயலும்? 

தவிர அது ஒரு நபரின் கதையல்ல. ஒரு நிறுவனத்தின் கதையும் அல்ல. பத்திரிகை படிக்கும் வாசகர்களுக்கு அதன் பின்னால் இருந்து இயங்கும் ஒரு சாராரின் அன்றாடங்களை, அதன் அவலங்களை, நிச்சயமின்மையை, வலிகளை, வேதனைகளைத் துலக்கிக் காட்டுவதன் வாயிலாக என் அனுபவங்கள் எனக்குப் பயிற்றுவித்தவற்றை மீள எடுத்துப் பார்த்து மதிப்பீடு செய்துவிட்டுக் கடந்து செல்கிறேன். அவ்வளவுதான்.

கட்டுரை நூல்களைப் படிப்பது போல நாவல் படிக்கக் கூடாது. நாமறியாத ஒரு புதிய உலகம், புதிய வாழ்க்கை - அது நமது வாழ்வோடு எந்தப் புள்ளியில் ஒன்றிணைகிறது என்கிற ஆர்வமே ஒரு வாசகரை நாவல்களுக்குள் வாழ வைக்கும். 

விடாமல் படித்துக்கொண்டே இருந்தீர்களென்றால் ஒருநாள் அதன் வாசல் உங்களுக்குத் திறந்தே தீரும். அப்போது அகப்படும் தரிசனம் மகத்தானதாக இருக்கும். வாழ்த்துகள்.