வெள்ளி, 7 ஏப்ரல், 2017

தவக்காலம் ஐந்தாம் வாரம் சனி (8-4-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 11:45-56

45 மரியாவிடம் வந்திருந்த யூதர் இயேசு செய்வதைக் கண்டு அவரை நம்பினர்.
46 ஆனால் அவர்களுள் சிலர் பரிசேயரிடம் சென்று இயேசு செய்வதைத் தெரிவித்தனர்.
47 தலைமைக் குருக்களும் பரிசேயரும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி, 'இந்த ஆள் பல அரும் அடையாளங்களைச் செய்து கொண்டிருக்கிறானே, என்ன செய்யலாம்?
48 இவனை இப்படியே விட்டுவிட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும் நம் இனத்தையும் அழித்து விடுவார்களே!' என்று பேசிக் கொண்டனர்.
49 கயபா என்பவர் அவர்களுள் ஒருவர். அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்தார். அவர் அவர்களிடம், 'உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை.
50 இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை' என்று சொன்னார்.
51 இதை அவர் தாமாகச் சொல்லவில்லை. அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்ததால், இயேசு தம் இனத்திற்காவும்,
52 தம் இனத்திற்காக மட்டுமின்றி, சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் நோக்குடன் அவர்களுக்காகவும் இறக்கப்போகிறார் என்று இறைவாக்காகச் சொன்னார்.
53 ஆகவே, அன்றிலிருந்தே அவர்கள் இயேசுவைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டினார்கள்.
54 அது முதல் இயேசு யூதரிடையே வெளிப்படையாக நடமாடவில்லை. அவர் அவ்விடத்தினின்று அகன்று பாலை நிலத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குப் போனார்; அங்கு எப்ராயிம் என்னும் ஊரில் தம் சீடருடன் தங்கியிருந்தார்.
55 யூதர்களுடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. விழாவுக்குமுன் தங்கள் தூய்மைச் சடங்குகளை நிறைவேற்றப் பலர் நாட்டுப் புறங்களிலிருந்து எருசலேமுக்குச் சென்றனர்.
56 அங்கே அவர்கள் இயேசுவைத் தேடினார்கள். 'அவர் திருவிழாவுக்கு வரவே மாட்டாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' என்று கோவிலில் நின்றுகொண்டிருந்தவர்கள் தங்களிடையே பேசிக் கொண்டார்கள்.

சிந்தனை : 

தவக்காலம் ஐந்தாம் வாரம் வெள்ளி (7-4-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 10:31-42

31 அவர்மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர்.
32 இயேசு அவர்களைப் பார்த்து, 'தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள் முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்?' என்று கேட்டார்.
33 யூதர்கள் மறுமொழியாக, 'நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதானாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்' என்றார்கள்.
34 இயேசு அவர்களைப் பார்த்து, ''நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்' என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா?
35 கடவுளுடைய வார்த்தையைப் பெற்றக் கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது.
36 அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை 'இறை மகன்' என்று சொல்லிக் கொண்டதற்காக 'இறைவனைப் பழித்துரைக்கிறாய்' என நீங்கள் எப்படிச் சொல்லலாம்?
37 நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்ப வேண்டாம்.
38 ஆனால் நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்' என்றார்.
39 இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்.
40 யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு இயேசு மீண்டும் சென்று அங்குத் தங்கினார்.
41 பலர் அவரிடம் வந்தனர். அவர்கள், 'யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை; ஆனால் அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று' எனப் பேசிக்கொண்டனர்.
42 அங்கே பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

சிந்தனை : 

புதன், 5 ஏப்ரல், 2017

தவக்காலம் ஐந்தாம் வாரம் வியாழன் (6-4-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 8:51-59

51 'என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்.
52 யூதர்கள் அவரிடம், 'நீ பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஆபிரகாம் இறந்தார். இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் என் வார்த்தையைக் கடைப் பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே!
53 எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?' என்றார்கள்.
54 இயேசு மறுமொழியாக, 'நானே என்னைப் பெருமைப்படுத்தினால், அது எனக்குப் பெருமை இல்லை. என்னைப் பெருமைப்படுத்துபவர் என் தந்தையே. அவரையே நீங்கள் உங்கள் தந்தை என்றும் சொல்கிறீர்கள்.
55 ஆனால் அவரை உங்களுக்குத் தெரியாது. எனக்குத் தெரியும். எனக்கு அவரைத் தெரியாது என நான் சொன்னால் உங்களைப்போல நானும் பொய்யனாவேன். அவரை எனக்குத் தெரியும். அவருடைய வார்த்தையையும் நான் கடைபிடிக்கிறேன்.
56 உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்; அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார்' என்றார்.
57 யூதர்கள் அவரை நோக்கி, 'உனக்கு இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லை; நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா?' என்று கேட்டார்கள்
58 இயேசு அவர்களிடம், 'ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்.
59 இதைக் கேட்ட அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்.

சிந்தனை: 

தவக்காலம் ஐந்தாம் வாரம் புதன் (5-4-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 8:31-42

31 இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, 'என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்;
32 உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்' என்றார்.
33 யூதர்கள் அவரைப் பார்த்து, 'உங்களுக்கு விடுதலை கிடைக்கும'; என நீர் எப்படிச் சொல்லலாம்? நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே!' என்றார்கள்.
34 அதற்கு இயேசு, 'பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
35 வீட்டில் அடிமைக்கு நிலையான இடம் இல்லை. மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு.
36 மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள்.
37 நீங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வார்த்தை உங்கள் உள்ளத்தில் இடம் பெறாததால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள்.
38 நான் என் தந்தையிடம் கண்டதைச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் தந்தையிடமிருந்து கேட்டதைச் செய்கிறீர்கள்' என்றார்.
39 அவர்கள் அவரைப் பார்த்து, 'ஆபிரகாமே எங்கள் தந்தை' என்றார்கள். இயேசு அவர்களிடம், 'நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால் அவரைப் போலச் செயல்படுவீர்கள்.
40 ஆனால் கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை நீங்கள் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே!
41 நீங்கள் உங்கள் தந்தையைப் போலச் செயல்படுகிறீர்கள்' என்றார். அவர்கள், 'நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல. எங்களுக்கு ஒரே தந்தை உண்டு. கடவுளே அவர்' என்றார்கள்.
42 இயேசு அவர்களிடம் கூறியது 'கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை. அவரே என்னை அனுப்பினார்.

சிந்தனை : 
  இன்றைய நற்செய்தியில் இயேசு ஆண்டவர் 'உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்' என்கிறார். இதே யோவான் நற்செய்தி 14:6 இல் 'வழியும், உண்மையும், வாழ்வும் நானே' என்கிறார். எனவே இன்று இயேசு கூறும் வார்த்தையை 'இயேசு உங்களுக்கு விடுதலை அளிப்பார்' என்றும் புரிந்து கொள்ளலாம். இயேசு கூறும் உண்மை என்பது ஒரு மதிப்பீடு மட்டுமல்ல. அது ஒரு ஆள். அவரே இயேசு.
   'உண்மையா? அது என்ன?' (யோவான் 18:38) என்று பிலாத்து இயேசுவிடம் கேட்குமிடத்திலும், நாம் நினைவுகூறவேண்டியது இதுதான். பிலாத்துவின் கேள்விக்கு இயேசு பதிலளிக்கவே இல்லை. உண்மையா அது யார்? என்று கேட்டிருந்தால் இயேசு நிச்சயம் பதில் கூறியிருப்பார்.
   ஆக நம் வாழ்வில் நாம் பற்றிக்கொள்ள வேண்டிய உண்மையாக இருப்பவர் நம் ஆண்டவர் இயேசு மட்டுமே. அவரை நாம் நெருங்கும் போது உண்மையை நெருங்குகிறோம். பாவம் என்னும் பொய்மை நம்மை விட்டு அகன்று விடுதலை உணர்வைப் பெறுகின்றோம்.
  இயேசு கூறும் இந்த பாவ அடிமைத்தனத்தை, யூதர்கள் புற அடிமைத்தனமாகப் புரிந்து கொள்கின்றனர். எனவேதான் நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்கிறார்கள். ஆயினும் அவர்களது அரசியல் வாழ்வில் எகிப்தியர் தொடங்கி, பாலஸ்தீனர்கள், பாரசீகர்கள், கிரோக்கர்கள் போன்றோருக்கும், இறுதியாக இயேசுவின் காலத்தில் உரோமையர்களுக்கும் அடிமைப்பட்டுக் கிடந்ததை மறுக்கிறார்கள். கடவுள் ஒருவரே யூதர்களின் அரசர் என்ற இறையியல் அடிப்படையில் அவர்கள் வேற்று நாட்டு அரசர்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அவர்களது அன்றாட வாழ்வில் அடிமைத்தனத்தின் சுமைகளை அனுபவிக்கத்தான் செய்தார்கள்.
  இந்தச் சூழ்நிலையில் இயேசுவும் அவர்களது பாவ அடிமைத்தனத்தைச் சுட்டிக்காட்டி, மனம் திருந்த விடுக்கும் அழைப்பு அவர்களுக்கு எரிச்சலூட்டியதில் வியப்பில்லைதான். இயேசுவைப் பொறுத்தமட்டில் பாவத்திலிருந்து விடுபடும் அகவிடுதலையே முதன்மையானதாகும். எல்லா மனிதர்களும் அகவிடுதலை அடையும் போது அங்கே அடக்கியாளவும், அடங்கிப்போகவும் யாரும் இருக்கப்போவதில்லை. இதுவே இயேசு காணவிரும்பிய இறையாட்சியின் தத்துவமாகும்.
  இந்தத் தவக்காலம் நமக்கு அளிக்கும் அருமையான வாய்ப்பினைப் பயன்படுத்தி இயேவில் நம்பிக்கை கொள்வோம். பாவ வாழ்வு நம்மில், நம் உறவுகளில் ஏற்படுத்தியிருக்கும் புண்களை, அவரது பரிசுத்த இரத்தத்தால் குணமாக்க முன்வருவோம். புத்துணர்சியோடு புதுவாழ்வைப் பெற்றுக்கொள்வோம். இயேசு என்னும் உண்மை நமக்கு விடுதலை அளிப்பதாக!

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

தவக்காலம் ஐந்தாம் வாரம் செவ்வாய் (4-4-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 8:21-30

21 இயேசு மீண்டும் அவர்களிடம், 'நான் போன பின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்' என்றார்.
22 யூதர்கள், 'நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது' என்று சொல்கிறாரே, ஒருவேளை தற்கொலை செய்து கொள்ளப் போகிறாரோ?' என்று பேசிக்கொண்டார்கள்.
23 இயேசு அவர்களிடம், 'நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்; நான் மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால் நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல.
24 ஆகவேதான் நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள் என்று உங்களிடம் சொன்னேன். ';இருக்கிறவர் நானே' என்பதை நீங்கள் நம்பாவிடில் நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள்' என்றார்.
25 அவர்கள், 'நீர் யார்?' என்று அவரிடம் கேட்டார்கள். அவர், 'நான் யாரென்று தொடக்கத்திலிருந்தே சொல்லி வந்துள்ளேன்.
26 உங்களைப் பற்றிப் பேசுவதற்கும் தீர்ப்பிடுவதற்கும் பல உண்டு. ஆனால் என்னை அனுப்பியவர் உண்மையானவர். நானும் அவரிடமிருந்து கேட்டவற்றையே உலகுக்கு எடுத்துரைக்கிறேன்' என்றார்.
27 தந்தையைப்பற்றியே அவர் பேசினார் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.
28 இயேசு அவர்களிடம், 'நீங்கள் மானிட மகனை உயர்த்திய பின்பு, 'இருக்கிறவர் நானே'; நானாக எதையும் செய்வதில்லை. மாறாகத் தந்தை கற்றுத் தந்ததையே நான் எடுத்துரைக்கிறேன் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
29 என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்' என்றார்.
30 அவர் இவற்றைச் சொன்னபோது பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

சிந்தனை :