சனி, 1 நவம்பர், 2014

ஞானம்! (Wisdom)

ஒவ்வொரு மொளனங்களும்
ஏதோவொன்றை பேசிக்கொண்டுதானிருக்கின்றன

ஒவ்வொரு கலகங்களும்
அமைதியையே முன்னிறுத்துகின்றன

ஆலய மணிகளுக்குப் பின்னும்
பாவங்கள் ஓலமிடுகின்றன

அறியாமை என்று விரல் நீட்டும் போது
அது நம்மையே குறிக்கலாம்

பன்மையைக் கற்றுக் கொள்வதே
ஞானம்!