திங்கள், 14 நவம்பர், 2011

தீமை எரிக்க...வாழ்க்கை விளக்க

எதையோ ஒன்றை
சுட்டுவதாய்
உன் விழிச்சுடர்!
சுடுபடு பொருள் அறியேன்...
தெளிந்த உன் கண்களே
என்னைக் குழப்புகின்றன

எந்த சூட்சுமத்திலும்
பிடிபடவில்லை
உன் அடையாளம்
ஆணோ, பெண்ணோ
அறுதியிட இயலாது
நீயே நிற்கிறாய்
ஏதோ ஒன்றின் அடையாளமாய்!

உலக உலையில்
வெந்து தணிந்த முதுமை
உரித்துபோட்ட பாம்பின் சட்டையாக
வாழ்வு என்னும் புதிர் வட்டத்திலிருந்து
உன்னைக் களற்றி விட்டது யாரோ?
உன் குருதியை உறிஞ்சிய
மழைக்காலத்து அட்டைப் பூச்சிகள்
மகனோ? மகளோ?

இன்னும் என்ன
புனிதம் கிடக்கிறதென
தொப்பியில் காட்டுகிறாய்
பச்சைக்கொடி
கண்தானம் செய்வாயோ?
தசைதானம் செய்வாயோ?

மின்னும் விளக்கென
வீர விழிகள்
உனக்குப் பின்னும் தேவை
தீமை எரிக்க
வாழ்க்கை விளக்க
பார்வை கொடு பூமிக்கு
தாயே! தந்தையே!

புதன், 9 நவம்பர், 2011

என் அடையாளங்களை
நான் வெறுக்கிறேன்
அவை என்னைச் சுட்டுவதில்லை
என்றோ எவனோ
கட்டியக் கதைகளை
யாரைக் கேட்டு சூட்டுகிறீர்கள்
என் மீது!
இந்தியனாம்! தமிழனாம்!
சத்தியமாய் நான் விரும்பவில்லை
கேவலம்! குமட்டுகிறது

இந்த நாட்டில் ஓட்டு போடுவதற்கம்
தற்கொலை செய்வதற்கும்
எந்த வேறுபாடும் இல்லை!
என் தலைமையின் செயல்பாடுகள்
என் மீது எச்சிலை உமிழ்கின்றன
நான் போடும் ஓட்டுக்கள்
இதற்கான என் அனுமதிப் பத்திரங்கள்

நீ பிச்சை கேள்
போடுகிறேன்
பிழைத்துக்கொள்
அறிவற்ற உனக்கு
மிக மிகக் கேவலமான உனக்கு
ஏழைகளின் எச்சிலுக்கம் விலைபெறாத உனக்கு
எதற்கு ஓட்டு

பார்ப்பன நாய் குரைத்து விளையாட
கேட்கிறது என் எலும்புகளை
பல்லை இளித்துக்கொண்டு
பல்லக்குத் தூக்கும்
அறியாமைக் கூட்டத்துக்கு
ஒரு பெயர் தமிழனாம்
அதில் நானும் ஒருவனாம்

பெரும்பான்மை முட்டாள்களால்
போதி மரத்தில் விறகு வெட்டும்
ஒருத்தி தலைவியாகிறாள்
அவள் எனக்கும் தலைவியாம்?
தலைவலி...

ஐந்து ஆண்டுகளுக்கேனும்
இப்பகுதிக்குப் புதியப் பெயரிடுவோம்
நரகம் என்று...


                                                                                                  கோபம் தொடரும்.
                                                                                                                      நன்றி.

வெள்ளி, 4 நவம்பர், 2011

OUR TAMILNADU

தமிழகத்தை சில காலம் ஒரு சிறுக்கியும்,
இன்னும் பிற காலங்களில் ஒரு பொறுக்கியும்
ஆட்சி செய்கின்றனர். என் கருத்து சரிதானா?
உங்கள் கருத்து என்ன?