புதன், 9 நவம்பர், 2011

என் அடையாளங்களை
நான் வெறுக்கிறேன்
அவை என்னைச் சுட்டுவதில்லை
என்றோ எவனோ
கட்டியக் கதைகளை
யாரைக் கேட்டு சூட்டுகிறீர்கள்
என் மீது!
இந்தியனாம்! தமிழனாம்!
சத்தியமாய் நான் விரும்பவில்லை
கேவலம்! குமட்டுகிறது

இந்த நாட்டில் ஓட்டு போடுவதற்கம்
தற்கொலை செய்வதற்கும்
எந்த வேறுபாடும் இல்லை!
என் தலைமையின் செயல்பாடுகள்
என் மீது எச்சிலை உமிழ்கின்றன
நான் போடும் ஓட்டுக்கள்
இதற்கான என் அனுமதிப் பத்திரங்கள்

நீ பிச்சை கேள்
போடுகிறேன்
பிழைத்துக்கொள்
அறிவற்ற உனக்கு
மிக மிகக் கேவலமான உனக்கு
ஏழைகளின் எச்சிலுக்கம் விலைபெறாத உனக்கு
எதற்கு ஓட்டு

பார்ப்பன நாய் குரைத்து விளையாட
கேட்கிறது என் எலும்புகளை
பல்லை இளித்துக்கொண்டு
பல்லக்குத் தூக்கும்
அறியாமைக் கூட்டத்துக்கு
ஒரு பெயர் தமிழனாம்
அதில் நானும் ஒருவனாம்

பெரும்பான்மை முட்டாள்களால்
போதி மரத்தில் விறகு வெட்டும்
ஒருத்தி தலைவியாகிறாள்
அவள் எனக்கும் தலைவியாம்?
தலைவலி...

ஐந்து ஆண்டுகளுக்கேனும்
இப்பகுதிக்குப் புதியப் பெயரிடுவோம்
நரகம் என்று...


                                                                                                  கோபம் தொடரும்.
                                                                                                                      நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக