பல்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பல்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 அக்டோபர், 2020

யாவரும் கேளிர்!


கடந்த வாரம் புதன் கிழமை! ரோமிலிருந்து செரினோலா வந்து கொண்டிருந்தேன். மாடிப்பேருந்தின் மேல் பகுதியில் இடதுபுறம் ஒரு சன்னலோர இருக்கை எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மதியம் 4 மணிக்கு பேருந்து திபுர்த்தினா நிலையத்திலிருந்து ஆமை தன் வீட்டைச் சுமந்துகொண்டு செல்வது போல அசைந்து நகரத் தொடங்கியது. கொரோனா காலம் என்பதால் பயணிகள் அமர வேண்டிய இருக்கையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் வெண்ணிற உறையிட்டிருந்தார்கள். பக்கத்து இருக்கையைக் காலியாக விட்டிருந்தார்கள். 

பேருந்து அவ்வப்போது பெருமூச்சு விட்டுக்கொண்டு முன்னோக்கி விரைந்துகொண்டிருந்தது. அப்பொழுதுதான் கவனித்தேன். எனது முன் இருக்கையில் ஒரு நபர் தொடர்ந்து இருமிக்கொண்டிருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட உறையிடப்பட்ட இருக்கையில் அமராமல் சன்னலோரத்தில் சாய்ந்து கொண்டு, இருமும் போது மட்டும் அந்த இடுக்கில் முகத்தை என் பக்கம் திருப்பிக்கொள்வார். பார்ப்பதற்கு பங்களாதேசி போலிருந்தார். அவரிடம் மெதுவாக "ஸ்கூசி, ஸ்கூசி" (மன்னிக்கவும்! மன்னிக்கவும்) என்று பவ்யமாகக் கூப்பிட்டு, வலது பக்கத்தில் உறையிடப்பட்ட இருக்கையில் இருக்குமாறு கூறினேன். முதலில் நான் சொல்வது காதில் விழாதது போல அப்படியே இருந்தார். பிறகு வேகமாக ஒரு யூ-டர்ன் போட்டுத் திரும்பி, "உன் வேலையைப் பார்த்துக்கொண்டு இரு" என்றார். "இல்லை தாங்கள் செய்வது தவறு! நடத்துனர் பார்த்தால் திட்டுவார்" என்றேன். அவர் கண்டுகொள்ளவே இல்லை. 

கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் கூட விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் அது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று என்னுள் ஒரு சினம் எழுந்தது. நடத்துனரிடம் சென்று முறையிடப்போவதாச் சொன்னேன். யாரிடமும் சொல் என்னும் தொனியில் ஒரு சூயிங்கத்தைச் "சவுக், சவுக்"கென்று சவைத்துக்கொண்டே ஒரு ஏளனப்பார்வை பார்த்தார். எழுந்து சென்று படியிறங்கி, கீழே ஓட்டுநரிடம் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்த நடத்துனரை இடைமறித்து விவரத்தை சொன்னேன். அவரும் வந்தார். அந்த நபரிடம் கடுமையானக் குரலில் இருக்கையை மாற்றி அமருமாரு கூறினார். அதற்கு அவர், "நீங்கள்தான் எனக்கு கட்டளையிட வேண்டும்! அவனல்ல!" என்று திரும்பத் திரும்பக் கூறினார். நடத்துனர் கடுப்பாகி "அவர் செய்தது மிகச்சரி. நீ உடனடியாக இருக்கையை மாற்று! அல்லது இறக்கிவிடப்படுவாய்" என்றார். 

வேறுவழியில்லாமல் இடம் மாறி அமர்ந்துவிட்டு, "இப்ப உனக்கு மகிழ்ச்சியா? நாப்பொலியில் பார்த்துக்கொள்கிறேன்!" என்றார். நாங்கள் நாப்பொலி என்னுமிடத்தில் இறங்கி வேறு பேருந்து மாறவேண்டியிருந்தது. திருட்டு, மிரட்டி பணம் பறித்தல், ரவுடியிசம் போன்றவற்றிற்கு பெயர் போன ஊர் நாப்பொலி. உடனடியாக இரண்டு மூன்று போன் பேசினார். கொஞ்சம் பயம் வந்துவிட்டது. எனது கைப்பையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டேன். மணி பர்ஸ் மற்றும் பிற டாக்குமென்டஸ் எல்லாம் லக்கேஜில் இருந்தது. நினைவுபடுத்திக்கொண்டேன்.

சிறிது நேர பயணத்திற்குப் பிறகு திரும்பி என்னிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். "எந்த நாடு" என்றார். நான் பதில் சொல்லவில்லை. "போனில் தமிழில் பேசினாய் என்று நினைக்கிறேன். இலங்கையா?" என்றார். பயத்திலும், பதில் சொல்ல விரும்பாமலும் "ஆமாம்" என்றேன். உடனே அவர் "நானும் இலங்கைதான். ஆனால் தமிழ் இல்லை. நீ இலங்கையில் எந்த இடம்?" என்றார். நான் "கொழும்பு" என்றேன். அவர் ஏதோ ஒரு ஊர் பெயர் சொன்னார். நான் மிகவும் குழம்பிவிட்டேன். பின் "இத்தாலியில் எந்த இடத்தில் இருக்கிறாய்?" என்றார். நான் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து "உங்களிடம் என் தனிப்பட்ட விசயங்களைச் சொல்ல விரும்பவில்லை" என்றேன். அவர் "பயப்படாதே! பழையதை மறந்துவிடு! நாம் இருவரும் ஒரே நாட்டினர். அதனால்தான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். என்ன வேலை செய்கிறாய்?" என்றார். "நான் சொல்ல விரும்பவில்லை. உன்னிடம் பணிவாகத்தான் சொன்னேன். ஆனால் உனக்குக் கட்டளையிட்டதாகப் புரிந்துகொண்டு தகராறு பண்ணினாய். ஆகவே உன்னிடம் பேச விரும்பவில்லை" என்றேன். பத்துநிமிடம் பேருந்து ஒரு தேநீர் விடுதியில் நிற்கும் என்று நடத்துனர் அறிவித்தார். 

கீழே இறங்கியதும் வாசலில் எனக்காக அந்த நபர் காத்திருந்தார். "காபி குடிக்கிறாயா?" என்றார். நான் காபி குடிப்பதில்லை என்று முறித்துப் பதில் சொன்னேன். கழிப்பறை பயன்படுத்திவிட்டு வருவதைப் பார்த்து அந்த நபர் "பேருந்திலேயே கழிப்பறை இருக்கிறதே" என்றார். "நான் இல்லை விடுதியில் சுத்தமாக இருக்கும்" என்றேன். அவர் ஆயிரம் பேர் பயன்படுத்தும் இடமா சுத்தமாக இருக்கும்? என்று ஏதேதோ பேச்சிழுத்துக்கொண்டே இருந்தார். நான் முகம் கொடுக்காமல் எனது இருக்கைக்கு வந்தமர்ந்தேன். 

நாப்பொலியில் பேருந்து மாறவேண்டும். கைப்பையை பலமுறை செக் செய்து தோளில் மாட்டிக்கொண்டேன். பேருந்தின் வயிறு திறந்திருந்தது. மறக்காமல் எனது லக்கேஜை எடுத்து, ஸிப் எல்லாம் சரியாக மூடியிருக்கிறதா? என்று செக் செய்து கொண்டு விறுவறுவென்று நடக்க ஆரம்பித்தேன். அந்த நபரும் என் பின்னாலேயே வந்தார். அடுத்த பேருந்தில் கீழறையில் லக்கேஜை வைத்துவிட்டு எனது இருக்கையில் வந்தமர்ந்தேன். இன்னும் இரண்டு மணி நேரப் பயணம். இரவு 9.10 மணிக்கு செரினோலா வந்தடைந்தது. 

மென் துயிலில் திளைத்துக்கொண்டிருந்த என்னை நடத்துனரின் கரகர குரல் எழுப்பிவிட்டது. இரண்டு மூன்று பேர்கள் மட்டும் தான் இந்த நிறுத்தத்தில் இறங்க வேண்டியிருந்தது. சாலையில் மறுபக்கம் என்னை அழைத்துச்செல்ல சகோதரர் லூயிஜி நின்றுகொண்டு, என்னைப் பார்த்துவிட்டார் என்ற அர்த்தத்தில் கையசைத்துக்கொண்டிருந்தார். வேகமாக எழுந்து கைப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கினேன். அந்த நபரிடம் நான் விடைபெறவில்லை. ஒருவித அலட்சியத்தோடும், எரிச்சலோடும் முகத்தைத் திருப்பிக்கொண்டு பிசியான அந்த சாலையை சட்டென்று கடந்து காரில் ஏறிக்கொண்டேன். 

கார் கிளம்பவும் தான் நெஞ்சே அடைத்துவிடும் படி திக்கென்று நினைவுக்கு வந்தது. லக்கேஜ் எடுக்கவில்லை. லூயிஜி காரை நிறுத்தினான். தூரத்தில் பேருந்து இன்னும் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து கொஞ்சம் நிம்மதியோடும், மறதியை நினைத்து வெட்கத்தோடும் ஓடினேன். அங்கு பேருந்து எனக்காக காத்திருந்தது. அந்த நபருக்கும், நடத்துனருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. "இது என் சகோதரனின் பை. அவன் எப்படியும் வந்துவிடுவான். ஒரு நிமிடம் காத்திருங்கள்" என்று சொல்லிக்கொண்டிருந்தான் அந்த பெயர் தெரியாத சகோதரன். 


சனி, 13 ஜூன், 2020

சுத்தம்- சிறுகதை


சாவிக்கொத்தைப் பிசைந்து தலையில் வெளிர் நீல ரப்பர் உறையிட்ட சாவியை தேடியெடுத்து அலுவலகத்தைத் திறந்தான். மேசைக்கும் சுழல் நாற்காலிக்கும் இடையில் எதையும் நகர்த்தாமல் நுழைந்து மூச்சுவாங்க தன் கனத்த உடலை அமர்த்தினான். முன்னால் இருந்த பீங்கான் பேனா தாங்கியைப் பார்த்துக்கொண்டிருந்தான். தான் பங்குத்தந்தையாகப் பொறுப்பெடுத்த நாளில் கிளாரா பரிசளித்தது. அது இப்படி இருக்கிறது என்று சொல்ல முடியாதபடி ஒரு வடிவில் இருந்தது. நடுவில் எழுது பொருட்கள் வைப்பதற்காக ஒரு குழாய் போன்ற அமைப்பும், சுற்றிலும் அஞ்சரைப் பெட்டி போன்ற சிறுசிறு அறைகளும் இருந்தன. அவற்றில் தனது சைக்கிள் மற்றும் அலமாரிகளின் சாவிகளைப் போட்டுவைத்திருந்தான். அதன் அடியில் தங்க நிறத்தில் அருட்பணி செர்ஜியோ என்று எழுதப்பட்டிருந்த தனது பெயரைத் தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்தான்.

இத்தாலியின் தெற்கு முனையில் இருக்கும் ஒரு பழமையான சிறுநகரத்தில் பிறந்து, வளர்ந்து இப்போது பதினொரு வருடங்களாக பர்லேத்தா என்னும் இந்த ஊரில் தான் பங்குத் தந்தையாக இருக்கிறான். அவனோடு இன்னும் இரண்டு சாமியார்கள் இருக்கிறார்கள். இன்னொரு இத்தாலியன் மர்த்தீனோ மற்றும் ரிப்பப்ளிக் ஆப் காங்கோ என்னும் மத்திய-மேற்கு பகுதியில் உள்ள ஆப்ரிக்க நாட்டிலிருந்து வந்து கடந்த ஆறு ஆண்டுகளாக இங்கு வேலை செய்யும் விர்த்து. இருவருமே அவனது உதவிப்பணியாளர்கள்.

அறைக்கதவின் வெளியே யாரோ நிற்பது போன்று நிழல் அசைந்து கொண்டிருந்தது. கதவு மேற்பாதி முழுவதும் செமி-ட்ராஸ்பேரன்ட் வகைக் கண்ணாடியினாலானது. உள்ளே வாங்க என்று குரல் கொடுத்தான். விர்த்து நின்றுகொண்டிருந்தான். "கிராட்சியா வந்தாளா?"  என்றான்.
"எந்த கிராட்சியா?" என்றான் செர்ஜியோ.

"அதான் ஒரு வாரமாக வந்துகொண்டிருக்கிறாளே! கிராட்சியா மானோஸ்பெர்த்தி. உன்னைத்தான் பார்க்க வருகிறாள். ஆனாலும் அவளை அதிகமாக அலைய விடுகிறாய்" என்று குற்றம் சுமத்தும் தொனியில் சொன்னான்.

"அவளுக்கு என்ன வேண்டுமாம்? கேட்டியா?"

"எல்லா கதையும் சொல்கிறாள். ஆனால் உன்னை எதற்கு பார்க்க வேண்டும் என்பதை உன்னிடம் தான் சொல்வாளாம். அல்லது மர்த்தீனோ என்றாலும் பரவாயில்லையாம்."

"எனக்கும் ஒன்றும் புரியவில்லை. அவள் வரும் நேரம் என்னால் அவளை சந்திக்க முடியவில்லை."

"நேற்று ஒரு நிமிடம் வரச்சொல்! போதும்! என்று கெஞ்சினாள்."

"நான் என்ன செய்ய? கிளாரா அவள் அம்மாவுடன் வந்திருந்தாள். பாரில் பேசிக்கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் என்னால் இறங்கி வரமுடியவில்லை."

"அவளைப் பார்த்தால் ஏதோ சாவு பயத்தில் இருப்பவள் போலிருக்கிறது. ஏதோவொரு பாவத்தை உன்னிடம் சொல்லிவிட்டுத்தான் சாக வேண்டும் என்று  அடம்பிடிக்கிறாள் என்று நினைக்கிறேன். அடுத்த முறை மிஸ் பண்ணிவிடாதே செர்ஜியோ" என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு தன் அலுவலகத்தை திறந்து சோபாவில் அமர்ந்தான்.

கிராட்சியா எதற்காக செர்ஜியோவைப் பார்க்க வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்தான். நேற்று மிகவும் பதற்றமாக இருந்தாள். பார்ப்பதற்கு ஐம்பது வயது மதிக்கலாம். ஆனால் நிச்சயம் அறுபதுக்கு குறையாமல் இருப்பாள். எடுப்பான தோற்றம். அவளிடம் ஒரு ஸ்டைல் இருந்தது. பளபளப்பு கூட்டப்பட்ட உயர்ரக கறுப்பு ஷீ, அடர் நீல பெனட்டன் கைப்பை. அவளைப் பார்த்தவுடன் சட்டையில் எங்கேனும் கறையிருக்கிறதா? காலணிக்கு பாலிஷ் போட்டோமா? என்று நமக்கு நாமே ஒரு முறை சரிபாரக்கத் தோன்றும்.

நேற்று அவளுடன் நடந்த உரையாடலை மனதுக்குள் திரும்ப நிகழ்த்திக்கொண்டிருந்தான். அவளுக்கு எப்போதும் செர்ஜியோ மேல் நன்மதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. நேற்றும் அப்படித்தான் குறை கூறிக்கொண்டிருந்தாள். "நான் வரும் போதெல்லாம் அந்த கிளாராவுடன் தான் பேசிக்கொண்டிருக்கிறான். என்னை  இந்த வயதில் இப்படி காத்திருக்க வைக்கலாமா? நீயே சொல்."

"அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது நீ சரியாக வருகிறாய்! என்ன செய்வது?"

"எனக்கு ஒன்றும் இல்லை. நான் வெளிப்படையானவள். சொல்லிவிடுகிறேன். எண்ணைக்காக ஒலிவக் கொட்டைகளை அரைப்பது போல பலரும் எதையாவது பேசிக்கொள்கிறார்கள். அவன் கவனமாக இருக்க வேண்டும்" என்றாள்.

"கிளாரா அவனுக்கு பிள்ளை வயது. அவளும் அவனை ஒரு தந்தை போலத்தான் நடத்துகிறாள். இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது. விடு!"

"இல்லை விர்த்து. நான் யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. உன்மேல் எல்லோருக்கும் நன்மதிப்பு இருக்கிறது. அதனால் தான் சொல்கிறேன்" என்றாள். அப்படி சொல்வது அவள் முதல் ஆள் கிடையாது.

அவள் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே அவனுக்குப் பட்டது. எத்தனை முறைதான் அவளும் வருவாள். ஒரு நிமிடம் மட்டும் தான் தேவைப்படும் என்கிறாள். என்ன வேலையென்றால் என்ன? வந்து பார்த்துவிட்டு போனால் என்ன? என்று யோசித்துக்கொண்டிருக்கையில் கதவை முரட்டுத்தனமாகத் திறந்து கொண்டு நின்று கொண்டிருந்தான் மத்தியா. சிறிய பூக்கடை வைத்திருக்கிறான். கோவிலில் அவ்வப்போது விற்பனையாகாத பூக்களை கொண்டுவந்து வைப்பான். பிறகு பிரட் வாங்குவதற்கென்று ஒரு யூரோ கேட்பான். அழுக்கான உடை. அண்ட முடியாத வாசம். யாரும் அவனிடம் பூ வாங்குவதில்லை. இந்த ஊரில் எல்லாக் கதைகளும் தெரிந்தவன். கிராட்சியோ வந்து நீண்ட நேரமாக செர்ஜியோவின் அலுவலகத்தின் முன் நின்றுகொண்டிருப்பதாகச் சொன்னான்.

"அவன் அங்கேதானே இருக்கிறான்" என்று சொல்லிக்கொண்டே எழுந்து அவனோடு போனான். கிராட்சியா நின்றுகொண்டிருந்தாள்.

"இன்று சரியான நேரத்திற்கு வந்துவிட்டாய்! செர்ஜியோ அலுவலகத்தில் தான் இருக்கிறான்" என்று சொல்லிக்கொண்டே கதவைத் தட்டினான். திறக்க வில்லை. அவளது முகத்தில் வழக்கம் போல பதட்டமும், கூடுதலாக கொஞ்சம் கோபமும் தென்பட்டது. பொறுமை இழந்தவனாய் கதவைத் திறந்தான்.
சில நிமிடங்களுக்கு முன் இருந்தவனை இப்போது காணவில்லை. குழுக்கோஸ் அடைக்கும் போது தவறுதாலாக சிறிது இரத்தம் குழாயில் ஏறுவது போல அவளது முகத்தில் சிவப்பு கோடுகள் விழ ஆரம்பித்துவிட்டன.

நிலைமையை சமாளிக்க வேண்டி "மார்த்தீனோ என்றால் பரவாயில்லையா?" என்றான் விர்த்து. அவளும் "சரி! பரவாயில்லை வரச்சொல்" என்றாள். மூன்றாவது மாடியில் விறுவிறுவென்று ஏறினால் அவனது அறையில் அவன் இல்லை. எதிர்பார்த்தது தான். இந்த நேரம் கிச்சனில் நிற்பான். அங்கு போனால் தியான நிலையில் மாவு பிசைந்து கொண்டிருந்தான். தன்னால் அரை நொடி கூட இப்போது வரமுடியாது. "எதாவது சொல்லி அனுப்பிவிடு" என்று மறுத்துவிட்டான். விர்த்து பாவம்போல முகத்தை வைத்து கிராட்சியாவின் நிலையை எடுத்துச் சொல்லிப்பார்த்தான். முடியாது என்று நிமிர்ந்துவிட்டான். "தான் இப்போது இறங்கினால் பீட்சாவிற்கு பதில் பிஸ்கட் தான் சாப்பிட முடியும்" என்று அதே தியான நிலையில் ஒரு ஜோக் சொன்னான்.

அவளிடம் சென்று அவன் பாத்ரூமில் குளிப்பதற்கு தயாராக நிற்பதாகச் சொன்னான். "ஒரு நிமிடம் தானே இறங்கச் சொன்னேன். ஏன் இப்படி செய்கிறார்கள் இரண்டு பேரும்? " என்று புலம்பியவாரே போனவளை உதவ இயலாதவனாகப் பார்த்து நின்றுகொண்டிருந்தான் விர்த்து.
ஒருவார அலைச்சலுக்குப் பிறது இன்று காலை வந்து கதவைத் தட்டினாள்.

திறந்து "வா கிராட்சியா" என்றான் விர்த்து. "இங்கு யாரும் இல்லையா?" என்றாள்.

"நான் உன் முன் தானே நிற்கிறேன்! யாருமில்லையா என்றால் என்ன அர்த்தம்?" என்று சொல்லிக்கொண்டே செர்ஜியோவிடம் அவள் வந்திருப்பதாக இன்டர்காமில் சொன்னான்.

"வரச்சொல்" என்றான்.

ஒருவழியாக இன்று செர்ஜியோவைச் சந்தித்துவிட்டாள். அவள் சொன்னது உண்மைதான் அரை நிமிடத்திற்கும் குறைவாகத்தான் அவனிடம் பேசினாள்.

அவள் சென்றதும் விர்த்துவிடம் மூச்சுவாங்க வந்தான்.
"அவள் இத்தனை நாள் என்னையோ, மர்த்தீனோவையோ ஏன் பார்க்க வேண்டும் என்று விரும்பினாள் தெரியுமா?" என்றான்.

அடுத்தவர் காரியம்! ஆர்வமில்லாதவன் போல முகத்தை வைத்துக்கொண்டு "என்ன?" என்று கேட்டான்.

"ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று ஒரு சிறிய தொகை கொண்டு வந்திருந்தாள். இந்த காலத்தில் எல்லோரையும் நம்ப முடியாது என்பதால் நேரடியாக என்னை சந்தித்துத் தரவேண்டும் என்று காத்திருந்தாக சொன்னாள். விர்த்துவிடம் கொடுப்பதும் என்னிடம் கொடுப்பதும் ஒன்றுதான் என்றேன். அவள் பதில் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டாள்" என்றான் செர்ஜியோ.

விர்த்துவின் குளியல் பழக்கம் வித்தியாசமானது. பனி கொட்டும் கடுங்குளிர் காலத்திலும் குளிர்ந்த நீரில் மட்டும்தான் குளிப்பான். பாதத்தை முதலில் நனைப்பான். பின் மேல் நோக்கி உச்சி தலை வரையிலும்
ஷவரின் கைப்பிடியைக் கொண்டு செல்வான். அவனது கருத்த தேகம் இன்னும் உள்ளிருந்து ஒளியூட்டப்பட்டு மின்னுவது போல் இருக்கும். அப்போது ஒரு காகிதத்தை மெழுகுவர்த்தியில் காட்டி மெல்ல மெல்ல எரிப்பது போல் உணர்வான். செர்ஜியோ அப்படி சொல்லிவிட்டு போனதும் ஒரு குளியல் போட்டுக்கொள்ளவேண்டும் போலிருந்தது அவனுக்கு.

செவ்வாய், 31 மார்ச், 2020

Gospel meditation on praying Rosary (With the Reflection of Pope Francis on the extraordinary moment of prayer Urbi et Orbi)


Introduction
Dear sisters and brothers! Greetings in the name of our Lord! May the Lord give you all peace and good health. As we all know that the whole humanity is facing a thread caused by COVID-19, the mother Church wants to embrace everyone with the arms of prayer. Who else can strengthen a child other than its mother? Yes, today we would like to invite you all to pray with our heavenly Mother, the Mother of God who prayed with the disciples on the day of Pentecost! Our holy father Pope Francis, offered the whole world under the protection of Mother Mary, who feels one with everyone who suffers and intercedes for us to the heavenly father. In this Rosary, we would meditate on the word of God, proclaimed by the Pope on the extraordinary moment of prayer in the time of epidemy, “Urbi et orbi” on March 27, 2020 at the St. Peter’s basilica.

The Schema of the Rosary
  • In the name of the Father and of the Son and of the Holy Spirit. Amen
Hymn: 
No one can live as an island, Journeying through life alone.
Since we’re most loved by a mother, Jesus gave us His own.
    Be with us Mary, along the way,
    Guide every step we take.
    Lead us to Jesus your loving son.
    Come with us, Mary come.
When Jesus met with rejection, Mary stood by the cross; 
How can a mother desert her son? She’ll also stand by us. (Be with us)

Gospel Reading: Mark 4, 35-41
On that day, when evening had come, he said to them, “Let us go across to the other side.” And leaving the crowd behind, they took him with them in the boat, just as he was. Other boats were with him. A great windstorm arose, and the waves beat into the boat, so that the boat was already being swamped. But he was in the stern, asleep on the cushion; and they woke him up and said to him, “Teacher, do you not care that we are perishing?” He woke up and rebuked the wind, and said to the sea, “Peace! Be still!” Then the wind ceased, and there was a dead calm. He said to them, “Why are you afraid? Have you still no faith?”. And they were filled with great awe and said to one another, “Who then is this, that even the wind and the sea obey him?”

1st Mystery: On that day, when evening had come, he said to them, “Let us go across to the other side.”
For weeks now it has been evening. Thick darkness has gathered over our squares, our streets and our cities; it has taken over our lives, filling everything with a deafening silence and a distressing void, that stops everything as it passes by; we feel it in the air, we notice in people’s gestures, their glances give them away. We find ourselves afraid and lost. Like the disciples in the Gospel we were caught off guard by an unexpected, turbulent storm. We have realized that we are on the same boat, all of us fragile and disoriented, but at the same time important and needed, all of us called to row together, each of us in need of comforting the other. On this boat… are all of us. Just like those disciples, who spoke anxiously with one voice, saying “We are perishing” (v. 38), so we too have realized that we cannot go on thinking of ourselves, but only together can we do this.

2nd Mystery: “Teacher, do you not care that we are perishing?”
Do you not care: they think that Jesus is not interested in them, does not care about them. One of the things that hurts us and our families most when we hear it said is: “Do you not care about me?” It is a phrase that wounds and unleashes storms in our hearts. It would have shaken Jesus too. Because he, more than anyone, cares about us. Indeed, once they have called on him, he saves his disciples from their discouragement. The storm exposes our vulnerability and uncovers those false and superfluous certainties around which we have constructed our daily schedules, our projects, our habits and priorities. It shows us how we have allowed to become dull and feeble the very things that nourish, sustain and strengthen our lives and our communities.

3rd Mystery: “Why are you afraid? Have you still no faith?”
Lord, you are calling to us, calling us to faith. Which is not so much believing that you exist, but coming to you and trusting in you. This Lent your call reverberates urgently: “Be converted!”, “Return to me with all your heart” (Joel 2:12). You are calling on us to seize this time of trial as a time of choosing. It is not the time of your judgement, but of our judgement: a time to choose what matters and what passes away, a time to separate what is necessary from what is not. It is a time to get our lives back on track with regard to you, Lord, and to others.

4th Mystery: Then the wind ceased, and there was a dead calm.
Faith begins when we realise we are in need of salvation. We are not self-sufficient; by ourselves we founder: we need the Lord, like ancient navigators needed the stars. Let us invite Jesus into the boats of our lives. Let us hand over our fears to him so that he can conquer them. Like the disciples, we will experience that with him on board there will be no shipwreck. Because this is God’s strength: turning to the good everything that happens to us, even the bad things.

5th Mystery: “Who then is this, that even the wind and the sea obey him?”
He brings serenity into our storms, because with God life never dies. Embracing his cross means finding the courage to embrace all the hardships of the present time, abandoning for a moment our eagerness for power and possessions in order to make room for the creativity that only the Spirit is capable of inspiring. It means finding the courage to create spaces where everyone can recognize that they are called, and to allow new forms of hospitality, fraternity and solidarity. By his cross we have been saved in order to embrace hope and let it strengthen and sustain all measures and all possible avenues for helping us protect ourselves and others. Embracing the Lord in order to embrace hope: that is the strength of faith, which frees us from fear and gives us hope.

(We, Leonardian fathers of OMD at San Ferdinando in Italy, prayed rosary in this way and found it very much consoling! Let’s not forget to sustain our beloved holy father with our valuable prayers! Thank you all and praise the Lord!)


 Courtesy: The texts of the reflections, used in this prayer, has been taken from the official website of Vatican.



வியாழன், 15 ஜூன், 2017

குழந்தைகள் மாண்பினை மதிப்பேன் என்றும் காப்பேன் என்றும் உறுதி கொள்வோமா?

ஒளி படைத்தக் கண்ணினாய் வா வா வா!
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா!
என்று பாரதியாரால் அன்போடும், வீரத்தோடும் அழைக்கப்பட்டக் குழந்தைகள், இன்று அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணச்சீட்டிற்கு தங்கள் மனித மாண்பினையும், மரியாதையையும் விலைகொடுக்க வேண்டியிருப்பதைப் பார்க்கும் போது என் நெஞ்சம் சொல்லொண்ணாத் துயரம் அடைந்திருக்கிறது. அவர்கள் குழந்தைகள் என்ற முறையில் ஏற்கனவே பலவீனப்படுத்தப்பட்டிருக்கும் அகவிழி திறக்கப்படாத நம் சமுதாயத்தில், இன்றைய இலவசப் பயணச்சீட்டு அவர்களை இன்னும் மாண்பிழக்கச் செய்கிறது. எல்லா இலவசங்களையும் எதிர்ப்பது போல, இவ் வசதியையும் எதிர்ப்பதற்காக எழுதப்பட்டதல்ல இக்கட்டுரை. மாறாக அவ்வாறு குழந்தைகள் நலம் விரும்பி ஏற்படுத்தப்பட்டிருக்கும் இப்பணச்சீட்டு முறையில், இன்றையக் குழந்தைகள் எங்ஙனம் நடத்தப்படுகிறார்கள் என்பதையும், அவர்களது உடல், கல்வி, மனநலம் எந்த அளவிற்கு பாதிப்படைகிறது என்பதையும் இக்கட்டுரையில் காண்போம்.

பேருந்து நிறுத்தங்களில் 
மெக்காலே, மெட்ரிகுலேஷேன் போன்ற வெள்ளைக்காரச் கல்விச் சரக்குகள் நம் குழந்தைகளின் முதுகுகளில் ஒருநாளும் குறையாத புத்தகச் சுமையினை ஏற்றிவிட்டு வேடிக்கைப் பார்ப்பதை நாம் அறிவோம். அம்மூட்டை முடிச்சுகளுடன் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து நிற்கும் போதே அவர்களின் காலை உணவு முழுவதுமாக செரித்து விடுகிறது. அதன் பின்னர் ஏராளம் தனியார் பேருந்துகளும், அதிவேக, மிக அதிவேக, குளிர்சாதன, இடைநில்லா என்று அத்தனை வகை பேருந்துகளையும் களைப்புடனே பார்த்தக்கொண்டிருக்கும் குழந்தைகள், தாங்கள் செல்ல வசதி படைத்த சில மிக மெது வேக பேருந்துகளின் பின்னாலும் ஓட வேண்டியிருக்கிறது. புத்தக மூட்டை அவர்களை பின்னோக்கி இழுத்தாலும், பள்ளி செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவர்களை பேருந்தின் படிக்கட்டு வரை முன்னே செலுத்துகின்றது. குறைந்தது இரண்டு, மூன்று பேருந்துகளாவது அவர்களுக்கு ஒரு ஓட்டப்பயிற்சியினைக் கொடுத்தபின். வேண்டா வெறுப்பாக ஒரு பேருந்து முனகிக் கொண்டே அவர்களை தன்னுள் ஏற்றுக்கொள்கிறது.

நடத்துனரின் நடத்தைகள்
'டேய் நாயே! படிக்கட்டிலர்ந்து உள்ள வா!' என்ற பள்ளிக் குழந்தைகளுக்கு வரவேற்புரையாற்றுபவர் நடத்துனர். 'டிக்கெட்டா, பாசா?' என்றும் 'எத்தனை நாளு சொல்றது.. அந்த மூட்டைய எங்கயாச்சும் இறக்கி வையின்னு' கேட்கும் நடத்துனரிடம் எங்கு இறக்கி வைப்பது என்று தெரியாதக் குழந்தை விழிக்கிறது. 'முழியப் பாரு கள்ளப்பய மாதிரி, இதுகல்லாம் படிக்கப் போகுதோ, வேற எதுக்கும் போகுதா, நமக்குன்னு வந்து வாய்க்கிறாங்க பாரு' என்ற வசைச் சொற்களோடு பேருந்தில் தன்னால் இயன்ற அளவிற்கு முன்னேற முயல்கிறது குழந்தை. 

பிற பயணிகளின் பங்களிப்பு
'ஏய் உங்களுக்கெல்லாம் வேற பஸ்ல வந்தா என்ன? ச்சி.. அங்க தள்ளி போ!'
என்று இப்படி ஒரு உருவத்தை இதற்கு முன் பார்த்ததே இல்லை என்பது போன்ற பாவனையை முகத்தில் காட்டி அக்குழந்தைகளின் முகத்தில் வெறுப்பு அமிலத்தை தெளிப்பது பிற பயணிகளின் வேலை. இவர்கள் பிரயாணிகளா? அல்லது பிராணிகளா? என்று கூட பல வேளைகளில் எண்ணியிருக்கிறேன். இவர்கள் குழந்தைகளாக இருந்ததே இல்லை போல. அல்லது இவர்களுக்கு குழந்தைகளே இல்லை போல.

பள்ளியில் குழந்தைகள்
ஊர்ந்து சென்ற பேருந்து வழக்கம் போல நிறுத்தத்திலிருந்து அரைகல் தள்ளியே நிற்கிறது. இறங்கி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஓடியும் குழந்தையால் முதல் பாடவேளையில் கடைசி நிமிடத்தில்தான் நுழைய முடிகிறது. பேருந்திலிருந்து உமிழப்பட்டக் குழந்தைகள், இங்கும் இருக்கையின் மேல் நிற்க, முழங்கால் நிற்க, ஐந்நூறு முறை 'இனி நான் காலந்தவறாமல் வருவேன்' என்று எழுத என ஏதோவொரு தண்டனையைப் பெறுகிறது. 

அறநெறி பார்வையில்
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு நீ என்ன செய்தாய் என்று நீங்கள் நினைப்பது எனக்கு கேட்கிறது. நான்; அச்சிறுவர்களை 'இப்படி வாங்க தம்பி' என்று பன்மையில் அழைப்பதை ஒரு சிறு பங்களிப்பாகக் கருதுகிறேன். இத்தனை தெளிவிற்கு பின்னரும் இப்படித்தான் என் பங்களிப்பு இருக்கிறது என்றால் அது எந்த மாற்றத்தையும் உருவாக்காது என்பதையும் உணர்கிறேன். 'மனிதர் நோக மனிதர் பார்க்கும் பழக்கம் ஒழியுமோ' என்ற பாரதியாரின் வார்த்தைகள் என் நெஞ்சைச் சுடுகின்றது. அறநெறியின் பன்முகத்தன்மையில் பார்க்கும் போது குழந்தைகளின் மாண்பு என்பது சட்டமாக, ஒவ்வொருவரின் உள்ள உறுதிப்பாடாக, தனிமனித வளர்ச்சியாக, பிறர் மீதுள்ள அன்பாக, அனைத்திற்கும் உச்சமாக ஒரு சமூக மாற்றமாக உருவெடுக்க வேண்டும் என்பதே என் உள்ளார்ந்த விருப்பம். குழந்தைகளின் மீதான இந்த வன்முறையைப் பார்த்த பின்னரும் நாம் அந்த இடத்திலேயும், பின்னர் இந்நிலை முற்றிலும் மாறும் வண்ணம் அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளாவிடின் நீதியின் பரிமாணங்களாகிய பொதுநீதி, கடமையைச் செய்ய வைக்கும் நீதி, சமூக நீதி போன்றவற்றை தெரிந்து வைத்திருந்தும் அவற்றிற்கு அநீதி இழைக்கின்றோம் என்றே பொருள். இனி வரும் நாளில் குழந்தைகள் மாண்பினை மதிப்பேன் என்றும் காப்பேன் என்றும் உறுதி கொள்வோமா?

My Favorite Indian Leader : Kamaraj the ‘King Maker’

Introduction
Kumarasami Kamaraj, better known as K. Kamaraj, was an Indian politician from Tamil Nadu, widely acknowledged as the "Kingmaker" in Indian politics. He was the chief minister of Tamil Nadu during 1954–1963 and a Member of Parliament during 1952–1954 and 1967–1975. He was known for his simplicity and integrity. In this article, I would like to bring forth, in nutshell, the life history of the great Indian leader Kamaraj.
Early life
Kamaraj was born on 15 July 1903 to Kumarasamy and Sivakami Ammaiar at Virudhunagar in Tamil Nadu. His father was a merchant. At age of 5 (1907), Kamaraj was admitted to a traditional school. Kamaraj's father died when he was six years old. Kamaraj dropped out of school due to the family’s poverty. He started joining processions and attending public meetings about the Indian Home Rule Movement. Kamaraj developed an interest in prevailing political conditions by reading newspapers daily. The Jallianwala Bagh massacre was the decisive turning point in his life. He decided that his aim was to fight for national freedom. At the age of 18, he became active as a political worker and joined Congress as a full-time worker.
Independence struggle
When Gandhi visited Madurai on 21 September 1921, Kamaraj met him for the first time in person. He participated in the Non-Cooperation Movement, Vaikom Satyagraha, the Nagpur Flag Satyagraha, Sword Satyagraha, Neil Statue Satyagraha, Salt Satyagraha and Quit India Movement of Gandiji. He was conducting a vigorous campaign throughout the State asking people not to support the Brittish rule. He was imprisoned six times by the British for his pro-Independence activities, accumulating more than 3,000 days in jail.
Educational reform
On 13 April 1954, Kamaraj became the Chief Minister of Madras Province. He removed the family vocation based Hereditary Education Policy introduced by Rajaji. The State made immense strides in education. New schools were opened. No village remained without a primary school and no panchayat without a high school. He strove to eradicate illiteracy by introducing the Midday Meal Scheme to provide at least one meal per day to the lakhs of poor school children. He introduced free school uniforms to weed out caste, creed and class distinctions among young minds. During the British regime the education rate was only 7 per cent. But after Kamaraj's reforms it reached 37%. Steps were taken to improve the standards of education. The number of working days was increased from 180 to 200. He took efforts to establish IIT Madras in 1959.
Agricultural development
Major irrigation schemes were planned in Kamaraj's period. Dams and irrigation canals were built across higher Bhavani, Mani Muthar, Aarani, Vaigai, Amaravathi, Sathanur, Krishnagiri, Pullambadi, Parambikulam and Neyyaru among others. 45,000 acres of land benefited from canals constructed from the Mettur Dam. The Vaigai and Sathanur systems facilitated cultivation across thousands of acres of lands in Madurai and North Arcot districts respectively. Long term loans with 25% subsidy were given to farmers. The farmers who had dry lands were given oil engines and electric pump sets on an instalment basis.
Industrial Reform
Industries with huge investments in crores of Rupees were started in his period: Neyveli Lignite CorporationBHEL at Trichy, Manali Oil Refinery, Hindustan raw photo film factory at Ooty, surgical instruments factory at Chennai, and a railway coach factory at Chennai were established. Industries such as paper, sugar, chemicals and cement took off during the period.
conclusion
Kamaraj remained Chief Minister for three consecutive terms, winning elections in 1957 and 1962. Impressed by his achievements, the Prime Minister Nehru made him as the President of the Indian National Congress, on 9 October 1963. After Nehru's death in 1964, as president of the party, he refused to become the next prime minister himself. The great leader of Indian politics, the king maker, passed away at his age 72 on 2 October 1975 which was the birth day of Gandhiji.  He was awarded India's highest civilian honour, the Bharat Ratna posthumously in 1976. He still lives in the memory of the people of Tamilnadu as a beloved leader, who enlightened the state with education and envisioned long lasting schemes of development. He is my favourite leader whom I would like to imitate in my life. 

திங்கள், 29 மே, 2017

தமிழ் மரம் (சிறு நாடகம்) A small skit on Tamil Tree

காட்சி 1
(மேடையின் நடுவில் ஒரு மரம். அதன்மீது தமிழ் என்று எழுதப்பட்டுள்ளது.. அதன் கிளைகளில் திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் என்று பல தமிழ் நூல்களின் பெயர்கள் எழுதப்பட்டு தொங்கவிடப்பட்டிருக்கின்றன. இரு பெண்கள் கையில் கூடை, விளக்குமாறுடன் வருகின்றனர்)

பெண்1: இங்க பாருடி, எவ்வளவு அழகான மரம்! இப்படி நடுவீதியில வச்சிட்டுப் போயிருக்காங்க. யாருமே கண்டுக்க மாட்டேங்குறாங்க (சுற்றி சுற்றி பார்க்கின்றனர்)

பெண்2: அய்யயோ! வெயில்லயும் மழையிலயும் காஞ்சு கிடக்கே! எங்க ஒருத்தரையும் காணோம்.

பெண்1: இந்த மரத்திலிருக்கும் எண்ணற்றக் கனிகளைப் பார். உலகப் பொது மறையான திருக்குறள் என்ன? சிலப்பதிகாரம் என்ன? கம்பராமாயணம் என்ன? இன்னும் எத்தனை எத்தனை இலக்கியச் செல்வங்களைக் கொண்ட இந்த அழகிய மரத்தின் இன்றைய நிலையைப் பார். 

பெண்2: யாருமே இதன் கனிகளை உண்பதும் இல்லை. இதன் அருகில் வருவதையே அவமானமாகக் கருதி பிற சாதாரண மரங்களையேத் தேடி ஓடுகின்றனர். இப்படியே விட்டுவிட்டால் இம்மரம் விரைவில் வாடி வதங்கி பட்டுப்போய்விடுமே!!! 

பெண்1,2: தமிழ் என்னும் இந்தச் சிறப்புமிக்க மரத்தை வளர்த்தெடுக்க நாம் ஏதாவது செய்யவேண்டுமடி!


காட்சி 2
(4 பெண்கள் பேய் வேடத்தில் பேசிக்கொள்கின்றனர்)

பேய் 1: பேய்களே, இங்க பாருங்கள். ஒரு அழகான மரம்
2: பாக்குறதுக்கு பளபளன்னு அழகாக இருக்கிறதே!.
3: ஆமாம். இது இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே மிகவும் பழமையான மரம். 
4: இதன் கனிகளைப் பார்த்தீர்களா? வேறு எந்த மரத்திலும் இத்தனைச் சிறப்பு வாய்ந்த கனிகளை நாம் பார்த்ததே இல்லை.

பேய் 1: இந்த மரம் இந்த மக்களின் பெருமை. இந்த மரத்தை அடியோடு அழித்துவிட வேண்டும்.
2: ஆம். ஆனால் அதை நேரடியாகச் செய்தால் இந்த மக்கள் நம்மைத் தூக்கி எறிந்து விடுவார்கள். மறைமுகமாக அழிக்க வேண்டும்.
3: இதன் வேறில் இந்தி, சமஸ்கிருதம் என்னும் கழிவு உரங்களைப் போடவேண்டும். 
4: அதனால் இந்த மரம் வளரும் என்று பெய்யைப் பரப்ப வேண்டும்.

(பெண் 1, 2 பின்வரும் பாடலைப் பாடிக்கொண்டு வருகின்றனர்)

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

பேய்கள் 1,2,3,4 : ஏதோ சத்தம் கேட்கிறது. அந்த முட்டாள்கள் வருகின்றனர். வாருங்கள் நாம் நடிக்கத் தொடங்குவோம்
(பேய்கள் மரத்திற்கு உரம் போடுவது போல நடிக்கின்றனர்)

பெண்1: அடியே இங்கே பாருடி. நம் அழகிய மரத்தைச் சுற்றிலும் காவி நிறப்பேய்கள். இங்கு என்ன செய்கிறார்கள்?

பெண்2: ஆமாம். வா. என்னவென்று பார்ப்போம்.

(இருவரும் மண்வெட்டியால் பேய்களைத் தாக்குகிறார்கள்)
பேய்1: ஐயோ எங்களை ஏன் தாக்குகிறீர்கள்! நாங்கள் உங்கள் மரத்திற்கு நன்மைதான் செய்வோம்.

பெண்1 : அப்படியா? நீங்கள் யார்? 

பேய் 2 : நாங்கள் பேய்கள். நாங்கள் வடக்கிலிருந்து வருகிறோம். வரும் வழியில் இதைப் போல் நிறைய மரங்களைப் பார்த்தோம். எல்லா மரங்களுக்குள்ளும் இந்தி, சமஸ்கிருதம் போன்ற போன்ற உயர்ரக மரபணுக்களைத் திணித்துக்கொண்டு வருகிறோம். இதன் மூலம் உங்கள் மரத்தை தரம் உயர்த்தப் போகிறோம்.

பெண்2 : அப்படியா? மிக்க மகிழ்ச்சி. .

பேய்3 : அதுமட்டுமில்லை. நாம் எல்லோரும் இந்தியர்கள். நாடு முழுவதும் இந்தியைப் புகுத்திவிட்டால் நாம் எல்லோரும் ஒரே மொழியில் பேசலாம். இது நல்லது தானே?

பெண்1 : அட அட! என்னே அருமையான யோசனை. 

பேய் 4 : இந்தியில் நீங்கள் பேசினால் நிறைய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

பெண்1,2 : அடடே! எல்லோருக்கும் ஒரே மொழி. வேலை வாய்ப்பு. என்ன அருமையான யோசனை. உடனே எங்கள் குழந்தைகளுக்கு இந்தி பேச கற்றுத்தரப் போகிறோம்.

பேய்கள் 1,2,3,4 : அப்படியே செய்யுங்கள். சென்று வாருங்கள்!
(பெண்கள் இருவரும் சென்றுவிடுகிறார்கள்)

பேய் 1: ஹ ஹ ஹ! மாபெரும் வெற்றி. இவ்வளவு எளிதாக வென்றுவிட்டோம் இம்முட்டாள்களை.
2 : இம்மரத்தை இன்றே வேறோடு சாய்த்து என் முதுகுக்கு இதமாக சாய்வு நாற்காலி செய்யப்போகிறேன்.
3 : எம் இம்மூடர்களின் மொழியை அழித்துவிட்டால் இவர்கள் காலத்துக்கும் நம் அடிமைகளாக இருப்பர். இதன் கனிகளை நெருப்பிலிட்டு அழிக்க வேண்டும்.
4 : இப்படி ஒரு மரம் இங்கு இருந்த தடமே இருக்கக் கூடாது.
பேய்கள் 1,2,3,4 : சத்தமாகச் சிரிக்கிறார்கள் 

காட்சி 3
(பெண்கள் இருவரும் ஊருக்குள் சென்று குழந்தைகள் அனைவரையும் அழைக்கிறார்கள்.)

பெண் 1,2 : பள்ளி செல்லும் குழந்தைகளே! எல்லோரும் இங்கே வாருங்கள். வெல்லம் போன்ற இனிப்பானச் செய்தியொன்றைச் சொல்லப்போகிறோம்.
குழந்தைகள்: அப்படியா! ஆர்வம் தாங்கவில்லை. உடனேச் சொல்லுங்கள்.

பெண் 1: இனி நம் ஊரின் மரத்தில் இந்தி மரபணுவைத் திணிக்கப்போகிறார்களாம். நாம் எல்லாரும் இனி இந்தியா முழுவதும் இந்தியிலியே பேசலாம்.

குழந்தை 1: நாம் ஏன் இந்தியா முழுவதும் பேசப் போகிறோம். இந்தி பேசும் இடங்களுக்கு செல்பவர் மட்டும் படித்தால் போதாதா? எல்லோரும் ஏன் படிக்க வேண்டும்? நாங்கள் தமிழில் தான் பேசுவோம்.

பெண் 2: சரிடா செல்வமே! இந்தி பேசினால் நிறைய வேலை வாய்ப்புகள் பெருகுமாமே!

குழந்தை 2: ஹஹஹ! அப்படியென்றால் இன்று நம் ஊரின் மூலை முடுக்கெல்லாம் சேறு மிதித்து சோறு உண்பவர்கள் அவர்கள் ஊரிலேயே வேலை பார்த்திருக்கலாமே? என்ன முரண்!

பெண் 1: சரி அதை விடுங்கள்! இந்தி நாடு முழுவதும் ஒரு தொடர்பு மொழியாக இருக்குமே!?

குழுந்தை 3: நாடு முழுவதும் ஆங்கிலம் கற்றுத் தரப்படுகிறது. இதனால் நம் நாடு மட்டுமல்ல. அதுவே உலகம் முழுக்கப் பேசும் தொடர்பு மொழியாக இருக்கிறது. ஆகவே ஒழுங்காக எல்லாரும் தாய்மொழியோடு இணைப்பு மொழியாக ஆங்கிலம் மட்டும் படித்தால் போதுமானது. ஒரு ஆற்றைக் கடக்க இரண்டு பாலங்கள் வேண்டுமா?

பெண் 1 : வேலை வாய்ப்பு, இணைப்பு மொழி, எல்லாம் சுத்தப் பொய் போன்றல்லவா இருக்கிறது. 

பெண் 2 : நம் முன்னோர்கள் போற்றிப் பாதுகாத்த நம் மொழியை நாமே வளர்ப்பதுதான் முறை. நம் குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றலைத் தாய்மொழியே வளர்க்க முடியும். 

பெண் 2: அப்பேய்கள் நம்மை ஏமாற்றுவது போல எனக்குத் தோன்றுகிறது. வாருங்கள் எல்லோரும் சென்று என்ன ஏதென்று பார்ப்போம்.

காட்சி 4
(பேய்கள் மரத்தை வேக வேகமாக வெட்ட முயற்சி செய்கிறார்கள்.) 

குழந்தைகள் : பெண்களே பாருங்கள்! நாம் சந்தேகப்பட்டது சரிதான். அவர்கள் நம் பெருமை மிக்க மரத்தை வெட்டப் பார்க்கிறார்கள்.

பெண்கள் : அடித்து விரட்டுங்கள். இந்த ஆதிக்க வெறி பிடித்த ஓநாய்களை! இந்தியத் தாய் மொழியால், இனத்தால், கலாச்சாரத்தால் பல வண்ணங்களைக் கொண்டவள். அவளை ஒற்றை வண்ணத்தில் வெள்ளையடிக்க நினைப்பவர்கள் யாராயினும் அடித்து விரட்டுவோம். 

(அடித்து விரட்டுகிறார்கள்)

பின்னர் அனைவரும் இணைந்து சொல்கிறார்கள்:

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு, இதை உரக்கசொல்வோம் உலகிற்கு.
இனம் ஒன்றாக மொழி வென்றாக, புது வேலை எடுப்போம் விடிவிற்கு.
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு !!
எங்கள் மண்ணை தொட்டவன் கால்கள் எங்கள் நிலத்தில் உரமாகும்.
எங்கள் பெண்ணை தொட்டவன் கைகள் எங்கள் அடுப்பில் விறகாகும்.
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு, இதை உரக்கசொல்வோம் உலகிற்கு.
இனம் ஒன்றாக மொழி வென்றாக, புது வேலை எடுப்போம் விடிவிற்கு.
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு !!
(நன்றி கவிஞர் வைரமுத்து)

பின்குரல்:
இந்தப் பெண்களும், குழந்தைகளும் எப்படி முழுச்சிக்கிட்டாங்களோ, அதுபோல இங்க இருக்கிற ஒவ்வொரும் முழுச்சிக்கிறவரைக்கும்...
சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் சண்டை போடுறது நிறுத்திட்டு தமிழன் என்ற உணர்வால் நாமெல்லாம் ஒன்னா கை கோர்த்து நிக்கிற வரைக்கும்....
வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாக இருக்கும்.

சனி, 27 மே, 2017

நன்றி ஐயப்பா! நன்றி இயேசுவே!

திருச்சி தூய பவுல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது அருட்தந்தை ஜான் பீட்டர் அவர்கள் அறநெறி இறையியல் பயிற்றுவித்தார். கற்றறிந்த ஆசான்கள் நிறைய பேர் இருந்தாலும், ஒரு மணி நேர வகுப்பில் மூளையின் ஜி.பி. முழுவதையும் நிரப்பவல்ல கல்விப் பெருமான்கள் இருந்தாலும் தந்தை ஜான் பீட்டர் கொஞ்சம் வித்தியாசமானவராகத் தெரிந்தார். எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அதை எல்லாரும் சிந்திப்பது போல் அல்லாமல் மற்றொரு கோணத்தில் தான் பார்ப்பதோடு, நம்மையும் அவ்வாறு பார்க்கத் தூண்டுபவர் அவர். வகுப்பு நேரம் தவிர்த்து அவரை நீங்கள் அவரது அறையில் சந்திப்பது மிகவம் கடினம். நூலகத்தில் எப்போதாவது பார்க்கலாம். மற்றபடி மாட்டுக்கொட்டகையில் சாணி அள்ளும் போதோ, மண்புழு உரத்தொட்டியிலோ, கோழி அல்லது பன்றிக் கூட்டிலோ பார்க்க முடியும். அவரைப் போலவே அவரது வகுப்பும் மிகவும் எளிமையாக இருக்கும். சமகாலத்தில் அதிகமாகப் பேசப்படும் அறநெறி தொடர்பான கேள்வி ஒன்றில் வகுப்பு ஆரம்பிக்கும். முதலில் மாணவர்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை முன்வைக்க வேண்டும். மேலோட்டமாக எதையாவது சொல்லிவிட்டு சும்மா இருந்துவிட முடியாது. உண்மையாகவே நம் நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவும், நமது கருத்தினைக் கூர்மைப் படுத்துவதற்காகவும் மிகவும் ஆர்வமாக விவாதத்தை நடத்துவார். பின்னர்தான் பாடம் சம்பந்தமான கோட்பாடுகளுக்குள் செல்வார். மிகவும் செறிவுமிக்க  சிந்தனைகளைக் கூட 'நான் சொல்கிறேன். நன்றாகக் கேட்டுக்கொள்' என்ற பாணியில் அல்லாமல், உரையாடல் தளத்திலேயே வகுப்பு செல்லும். மொத்த வகுப்பில் ஒரு சில வார்த்தைகள் மனதில் அப்படியேத் தங்கிவிடும், ஒரு கல்வெட்டைப் போல. 

கல்வெட்டுக்கள் மறைவதில்லை. அவற்றில் எழுதப்படும் செய்தியானது அரியணையில் இருக்கும் ஒரு அரசியைப் போல தனி வசீகரம் பெற்றுவிடுகிறது. தந்தை ஜான் பீட்டர் ஒருமுறை எங்களை இயற்கை இறையியல் வகுப்பிற்காக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். எந்த இடமாக இருக்கும்? காவிரி ஆற்றங்கரை? முக்;கொம்பு? புளியஞ்சோலை? இப்படி ஏதாவது இடமாக யோசித்தீர்கள் என்றால் நீங்கள் சரியாக சராசரியான மனிதர்தான். ஆனால் தந்தை ஜான் பீட்டர் அவருக்கேயுரிய பாணியில் அழைத்துச் சென்ற இடம் தான் திருச்சி நீதிமன்றத்திற்கு எதிர்புறமாக இருக்கும் ஐயப்பன் சுவாமி திருக்கோவில். ஆம்! பரபரப்பான திருச்சி நகரின் மையத்தில் இப்படி ஒரு இடமா என்று மலைக்கும் படியான அமைதி கோவிலில் நுழைவு வாயிலிலேயே நம்மை ஆட்கொண்டு விடுகிறது.

ஒரு அற்புதமான இடம். கடவுளைத் தேடும் எந்த மனிதரும், அவர்களின் அனைத்துவிதமான நம்பிக்கைகளுக்கு அப்பால், தங்கள் கடவுளை இந்தத் தலத்தில் கண்டுகொள்ளலாம். ஆண்டுகள் கடந்தும் நினைத்து நினைத்து இன்புற முடிகிறதென்றால், இக்கோவிலின் சிறப்பினை வெறும் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அது மனதில் பதிந்த கல்வெட்டு. நீங்களும் முடிந்தால் ஒரு எட்டு சென்று பார்த்துவிட்டு வந்துவிடுங்கள். 

'கோவில் ஒரு பள்ளிக்கூடம் போன்றும், பள்ளிக்கூடங்கள் ஒரு கோவில் போன்றும் இருக்க வேண்டும்' என்பதுதான் இக்கோவிலின் இலக்கு என்பது போன்று பார்க்கும் இடமெல்லாம் கற்றுக்கொள்ள ஏதோவொன்று இருக்கின்றது இந்தக் கோவிலில். 'அமைதியைப் போல சக்தியைச் சேமிக்கும் சாதனம் வேறு எதுவும் இல்லை', 'குரு ஒருவரின் அமைதிப் பிரசங்கம்', 'இலஞ்சம் வழியாகப் பெற்றப் பணம் மகிழ்ச்சியைத் தராது', 'வில்மா ருடால்ஃப் தன் அன்னையின் உத்வேகத்தால் போலியோவால் சிறுவயதில் பாதிக்கப்பட்டவராயிருந்தும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றக் கதை', 'அர்த்தமுள்ள முறையில் கார்த்திகை நோன்பிருத்தல்' 'குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்ற பாடல்' இது போல எத்தனையோச் செய்திகளை அங்கே கல்வெட்டில் ஏற்றியுள்ளனர். வேறு எந்த ஊடகத்தின் வழியாக அவை சொல்லப்பட்டிருந்தாலும் கல்வெட்டுக்களைப் போல அவை மனதில் நீண்ட காலம் நிற்க முடியாது என்றே நினைக்கிறேன். உங்கள் நெருங்கிய நண்பர் ஒருவரின் நேற்றைய வாட்ஸ்அப் நிலைத்தகவல் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இல்லைதானே! இதுதான் கல்வெட்டுக்கள் என்னும் கெத்து ஊடகத்தின் வலிமை.

ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் கண்களை நனைத்துவிடும் ஒரு கல்வெட்டு அங்கு இருக்கிறது. (பின்னாள்களில் திருச்சியில் இருந்தவரையிலும் அடிக்கடி அந்தக் கோவிலுக்குச் செல்வது வழக்கமாகிவிட்டது). அம்மாவின் தியாகத்தைப்பற்றி அங்கே கல்வெட்டு ஒன்றில் பொறிக்கப்பட்டிருந்த பின்வரும் வரிகள் ஒரு நிமிடம் நம்மை உலுக்கிவிடும். உள்ளிருக்கும் கல் ஒன்று உருகி கண்ணில் வழிந்தோடி நீராக நம்மை நனைக்கும். வாசிக்க:

'வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.



அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகளை, ஞானிகளை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.
அவர் அந்தக் கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து ஆதங்கமான குரலில் அது என் அம்மாவின் கைகள் என்று சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது. 'எதற்காக அம்மாவின் கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்?' என்று கேட்டேன். 
'அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன. என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள்தான் இருக்கின்றன. அம்மாவின் முகத்தைவிட, அந்தக் கைகளைக் காணும்போதுதான் நான் அதிகம் நெகிழ்ந்துபோகிறேன்.
அம்மா இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை. ஆனால், இதே கை களால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை.
அப்பா பொறுப்பற்ற முறையில், குடித்து, குடும்ப வருமானத்தை அழித்து 32 வயதில் செத்துப் போனார்.அம்மாதான் எங்களை வளர்த்தார். நாங்கள் மூன்று பிள்ளைகள். அம்மா படிக்காதவர். ஒரு டாக்டரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, நாய்களைப் பராமரிப்பதுபோன்ற வேலைகள். மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும் வேலைதான். எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்து இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது.
இரவு வீடு திரும்பிய பிறகு, சமைத்து எங்களைச் சாப்பிடவைத்து உறங்கச்செய்துவிட்டு அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருப்பார்கள். சமையல் அறையில்தான் உறக்கம். அப்போதும் கைகள் அசைந்தபடியேதான் இருக்கும். எங்கள் மூவரையும் பள்ளிக் கூடம் அழைத்துப் போகையில் யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும்.
அந்தக் கைகளைப் பிடித்துக்கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம், நம்பிக்கை கிடைக்கும். அதுபோலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி நெற்றியைத் தடவியபடியே இருக்கும். அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. தனது சகலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை வளர்த்தபடியே இருந்தார். மருத்துவரின் வீட்டில் அம்மா ஒருநாள் ஊறுகாய் ஜாடியை உடைத்துவிட்டார் என்று அடி வாங்குவதைப் பார்த்தேன். அம்மாவின் கன்னத்தில் மருத்துவரின் மனைவி மாறி மாறி அறைந்துகொண்டு இருந்தார். அம்மா அழவே இல்லை.
ஆனால், நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல், விடுவிடுவென எங்களை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். வழியில் பேசவே இல்லை. அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல்படுத்தவோ, அணைத்துக்கொள்ளவோ இல்லை. அவள் கடவுள் மீதுகூட அதிக நம்பிக்கைகொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை. வீட்டில் சாமி கும்பிடவோ, கோயிலுக்குப் போய் வழிபடவோ, அதிக ஈடுபாடு காட்டியதே இல்லை. வேலை... வேலை... அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும் என்று அலுப்பின்றி இயங்கிக்கொண்டு இருந்தார்.
சிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளவே இல்லை. ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன். கஷ்டப்பட்டுப் பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்கப் பிடிக்கவில்லை என்று போகாமல் இருந்திருக்கிறேன். கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன். மற்ற சிறுவர்களைப்போல சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்கிறாள் என்று கடுமையான வசைகளால் திட்டிஇருக்கிறேன். அம்மா எதற்கும் கோபித்துக்கொண்டதே இல்லை.அம்மா கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தபோதும் யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது என்றுதான் அந்த நாளில் தோன்றியது. கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து சுற்றவும், புதுப் புது ஆடைகள் வாங்கவும் குடிக்கவும் எத்தனையோ பொய்கள் சொல்லி இருக்கிறேன். என் அண்ணனும் தங்கையும்கூட இப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால், அம்மா அதற்காக எவரையும் கோபித்துக்கொள்ளவே இல்லை.
கல்லூரி இறுதி ஆண்டில் மஞ்சள் காமாலை வந்து, நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா. அப்போதுதான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு, ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது. அதன் பிறகு, என்னைத் திருத்திக்கொண்டு தீவிரமாகப் படிக்கத் துவங்கி, ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து கடுமையாக உழைத்துப் பதவி உயர்வுபெற்றேன். அம்மாவை என்னுடனே வைத்துக்கொண்டேன். நான் சம்பாதிக்கத் துவங்கியபோதும், அம்மா ஒருபோதும் எதையும் என்னிடம் கேட்டதே இல்லை. நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து, தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன்.
முதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன், 'எனக்கு ஒரே ஒரு வாட்ச் வேண்டும். சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவே இல்லை. அதன் பிறகு, எனக்குள் இருந்த கடிகாரம் ஓடு... ஓடு... என்று என்னை விரட்டத் துவங்கியது. அலாரம் இல்லாமலே எழுந்துகொள்ளப் பழகிவிட்டேன். இப்போது வயதாகிவிட்டது. சில நாட்கள் என்னை அறியாமல் ஆறு மணி வரை உறங்கிவிடுகிறேன். இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிடுகிறேன். ஒரு வாட்ச் வாங்கித் தருவாயா?' என்று கேட்டார்.
அம்மா விரும்பியபடி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன். ஒரு பள்ளிச் சிறுமியைப்போல அதை ஆசையாக அம்மா எல்லோரிடமும் காட்டினாள். அதை அணிந்துகொள்வதில் அம்மா காட்டிய ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது. அதன் பிறகு அம்மா, நான் திருமணம் செய்து டெல்லி, பெங்களூரு என்று வேலையாக அலைந்தபோது கூடவே இருந்தார். டெல்லியில் எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நான் கூடவே இருந்தேன்.
'நாங்கள் ஏமாற்றியபோது எல்லாம் ஏன் அம்மா எங்களை ஒரு வார்த்தைகூடத் திட்டவே இல்லை?' என்று கேட்டேன். அம்மா, 'அதற்காக நான் எவ்வளவு அழுதிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால், அன்று நான் கோபப்பட்டு இருந்தால், என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போயிருப்பார்கள்' என்று சொல்லி, தன் கையை என்னுடன் சேர்த்துவைத்துக்கொண்டார்.
அப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த் தேன். அது எவ்வளவு உழைத்திருக்கிறது. எவ்வளவு தூய்மைப்படுத்தி இருக்கிறது. எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது. அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பிறகு ஒருநாள், எனது கேமராவை எடுத்து வந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இன்று அம்மா என்னோடு இல்லை. ஆனால், இந்தக் கைகள் என்னை வழி நடத்துகின்றன. ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக் கைகள் நினைவுபடுத்துகின்றன. இதை வணங்குவதைத் தவிர, வேறு நான் என்ன செய்துவிட முடியும்?' என்றார்.
ராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன். அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை. உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள் யாவும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை. அணைத்துக்கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன. அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம். அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.
இலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கியிருக்கிறேன். சாப்பிட்டு இருக்கி றேன். எனது உடைகளைத் துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன். அந்தக் கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன். ஒரு நிமிடம் என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி, தீராத நன்றி சொன்னது.
'கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்துகொள்ளத்தான்' என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை. நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்? முடிவு நம்மிடமே இருக்கிறது!

இதை எழுதியது யார் என்ற விபரங்கள் எதுவும் அக்கல்வெட்டில் இல்லை. பின்னர் ஒருநாள் தற்செயலாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சிறிது வெளிச்சம் என்னும் புத்தகத்தை வாசிக்கும் போது மேற்கண்ட வரிகளை எழுதியக் கைகளைத் தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா! நன்றி கல்வெட்டு! நன்றி அதன் நிர்வாகிகளே! நன்றி தந்தை ஜான் பீட்டர்! நன்றி ஐயப்பா! நன்றி இயேசுவே! நன்றி என் பெற்றோர்களே! நன்றி உலகின் எல்லா அம்மாக்களே!

சனி, 8 அக்டோபர், 2016

கதை முடிந்தது

சிறு வயதில் சில கொடூரமானக் கனவுகளைக் கண்டு நடு இரவில் விழித்திருக்கிறேன். குறிப்பாக எங்கள் ஊரில் பலசரக்குக் கடை வைத்திருந்த ஒருவரை நான் கொலை செய்துவிட்டு போலீஸ் என்னைத் தேட ஆரம்பிக்கும் போது விழித்துக் கொள்வேன். அப்போது பயத்தில் உடம்பு விறைத்து கட்டை போல படுத்திருப்பேன். பக்கத்தில் படுத்திருக்கும் அம்மாவைக் கூப்பிட மூளை கட்டளை கொடுக்கும். ஆனால் தொண்டைக்குள் பயம் பந்து போல அடைத்துக் கொண்டு குரலை வரவிடாது. ஒரு உண்டியலில் காசு போடும் துளை அளவுதான் வாய் திறக்கும். எவ்வளவு முயன்றும் அதற்கு மேல் எதுவும் இயலாது. கை கால்களை ஒரு இம்மி கூட அசைக்க முடியாது. கனவில் கண்டது உண்மை என்றும், உண்மையிலேயே நான் அந்த மனிதரைக் கொன்றுவிட்டேன் என்றும், போலீஸ் என்னைத் தேடுகிறது என்றும் நினைத்து பயத்திலேயே மயங்கி காலையில் தான் இயல்பு நிலைக்குத் திரும்புவேன். கை, கால்களை அசைத்துப் பார்த்துக் கொள்வேன். வாய் திறந்து பேசியப் பிறகுதான் எதுவுமே நடக்கவில்லை, எல்லாமே கனவு என்பதை நம்புவேன். அப்படி ஒரு கனவு சமீபத்தில் வந்தது.

அன்று நள்ளிரவில் நாய்கள் குரைக்கும் சத்தம் அதிகமாக இருந்தது. யாரோ டப் டப்பென்று கதவைத் தட்டினார்கள். நாய்கள் எப்படி கதவைத்தட்டும்? கதவை உடைத்துவிடுவது போலத் தட்டினார்கள். நடுவீட்டில் படுத்திருந்த அப்பா கதவைத் திறக்கவும், பசித்த மிருகங்களைப் போன்று வெறிபிடித்த போலீஸகாரர்கள் வீட்டிற்குள் நுழைந்தார்கள். கெட்ட கனவுகள் மட்டும் சீக்கிரம் பலித்துவிடுமோ? வீட்டின் பின்புறம் கறிவேப்பிலை மரத்திற்குப் பின்னால் குனிந்து நான் பதுங்க, கழனிப் பானைக் கவிழ்ந்து என்னைக் காட்டிக் கொடுத்தது. ஒரு கொக்கைப் பிடிப்பதைப் போலத் தூக்கி தரதரவென்று இழுத்தார்கள். வண்டியில் தூக்கிப் போடுவதற்குள் என் கழுத்தை அறுத்துவிட்டார்கள். நெஞ்சை நனைத்தச் சூடான இரத்தத்தில் என் சட்டை தொப்பென்று ஒட்டிக்கொண்டது. தொட்டுப்பார்த்ததும் பிசுபிசுத்து கைகளில் வேகமாகக் காய்கிறது இரத்தம். நான் ஒரு கனவுதானேக் கண்டேன். அதற்கு எதற்குத் தண்டனை என்றேன். ஒருவர் தனது கை மூட்டினைக் கொண்டு என் கன்னத்தில் ஓங்கி இடித்துக் கொண்டே ஒரு பத்திரிக்கைச் செய்தியைக் காட்டினார். எங்கோ ஒரு பெண்ணை இதே மாதிரி ஒரு அதிகாலையில் வாயிலேயே வெட்டி சாய்த்துவிட்டதாகக் கூறினார். 

ஆம்! இந்தப் பெண்ணைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதிகம் பழக்கமில்லை. எனக்கு எதுவும் தெரியாது என்றேன். அடுத்த இடியில் இரண்டு பற்கள் உடைந்து கன்னத்துச் சதையைக் கிழித்து வாயிலிருந்தும் இரத்தம் ஒழுகியது. வண்டியில் சிந்திக்கிடந்த இரத்தத்தின் மேலேயே முகம் குப்புற விழுந்துவிட்டேன். ஒரு போலீஸ்காரர் பேண்டு ஜிப்பைக் கழற்றி என் மேல் ஒன்றுக்குவிட்டார். ஒரு வழியாக இந்தக் கேஸ் முடிந்துவிட்டது என்றார். இந்த நாய் இப்போது செத்துவிடக்கூடாது. வேற மாதிரி பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டே பூட்ஸ் காலால் இடுப்பில் ஓங்கி மிதித்தார். மூச்சு அடைத்துவிட்டது. 'அய்யோ! வலிக்கிறது' என்று மனதுக்குள் கத்தினேன். ஆனால் குரல் வரவில்லை. அடுத்த நாள் ஆஸ்பத்திரியில் கண் விழிக்கையில் நான் மட்டும் தான் குற்றவாளி என்று ஏதோவொரு உயரதிகாரி பேட்டி கொடுத்திருந்ததைப் பத்திரிக்கையில் பார்த்தேன்.

அதன் பிறகு சிறையில் தினமும் இரண்டு மூன்று பேர் வந்து பூட்ஸ் காலோடு நெஞ்சில் ஏறி வாயில் இரத்தம் கொப்பளிக்கும் வரை மிதித்துவிட்டு நாங்கள் சொல்வது போல நடந்து கொண்டால் உயிர் பிழைப்பாய். இல்லையேல் மண்டை உடைந்து மூளைச் சிதறிச் சாவாய்! என்று கெட்டவார்த்தையால் திட்டினர். ஒருவர் மிதிக்கும் போது மற்றவர் லத்தியால் அடிப்பார். பாம்பு நெளியும் போது, கொத்திவிடுமோ என்ற பயத்தில் அடிக்கும் ஆவேசத்துடன் மூச்சு வாங்க வாங்க அடிப்பார். கால் கரண்டையில் கடைசியாக விழுந்த அடியில் நடு மூளையில் கீறல் விட்டது போன்றக் கடுமையான வலி. 

என்ன நடக்கிறது என்பதை ஊகிக்கும் முன்னரே கதையில் பாதிக்கும் மேல் முடிந்துவிட்டது. தவறான முகவரியில் தபால் வந்தது போல ஆள் தெரியாமல் தன் பிள்ளையைப் போலீஸ் பிடித்துவிட்டது என்றும் உண்மை தெரிந்ததும், 'மன்னிக்க வேண்டும் தெரியாமல் தப்பு நடந்துடுச்சு' என்று சொல்லி உயர் போலீஸ் அதிகாரி வந்து பிள்ளையை ஒப்படைப்பார் என்று வெள்ளாந்தியாய் நம்பிக்கொண்டிருந்தனர் என் பெற்றோர்.

ஊரில் யாராவது சாகும் போது என் கை, கால்களைப் பிடித்துப்பார்த்துக் கொண்டு நண்பர்களிடம் சொல்வேன். 'எப்படித்தான் சாகிறார்களோ மனிதர்கள்!' என்று. நான் சாக இன்னும் நூற்றிருபது ஆண்டுகளாவது ஆகும் என்று நினைத்துக் கொள்வேன். அந்த பயில்வான் போன்ற வெள்ளைப் போலீஸ்காரர் ஒரு மதம் கொண்ட யானையைப் போல மர்ம உறுப்புக்கும் கொஞ்சம் மேலே அடிவயிற்றில் ஓங்கி மிதித்த போது தான் நான் முதன் முதலாக செத்துவிடுவேனோ என்று பயந்தேன். மூச்சுவிட்டே ஆக வேண்டும். ஆனால் முடியவில்லை. மிதித்த மிதியில் உள்ளே சென்ற வயிறு ஒட்டிக் கொண்டது. இப்படி சிறிது சிறிதாக நிறையச் செத்தேன்.

அந்தக் கொலையை நான் தான், நான் மட்டும் தான் செய்தேன் என்று சொன்னால் விட்டுவிடுவதாகச் சொன்னார்கள். அடிக்கு பயந்து நான் அப்படித்தான் சொல்வேன் என்ற நம்பிக்கையில்தான் இதுவரை என்னை விட்டு வைத்திருந்தார்கள். கனவில் அந்தப் பலசரக்குக் கடைக் காரரைத் தவிர்த்து நான் யாரையும் கொலை செய்யவில்லை. முகநூலில் நண்பனின் நண்பனின் நண்பியைக் கூட நண்பியாக்கும் வயது ஆர்வத்தில்தான் அந்தப் பெண் என் நண்பியானாள். அதற்கு மேல் அந்த மாநகரத்துப் பெண்ணுக்கும் எனக்கும் எந்த பழக்கமும் இல்லை. 'நான் கொலை செய்யவில்லை. என்னை விட்டுவிடுங்கள்' என்று அழுதேன். ஓங்கி முகத்திலே மிதிக்க உதடு கிழிந்தது.

ஒப்புக்கொள்கிறாயா என்று மீண்டும் கேட்டனர். எனக்குக் காதில் விழுந்தது. பதில் சொல்ல உடம்பில் தெம்பு இல்லை. விழுந்து விடுவேன் என்று நினைத்தேன். இதுவரை அடிக்காமல் அறையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு போலீஸ் அதிகாரி விரக்தியின் உச்சத்தில் ஓடிவந்து என் இரு தொடைகளும் இணையும் இடத்தில் ஒரு உதை உதைத்தார். புறமண்டை பட்டென்று சுவரில் அடிக்க தரையில் முகம் குப்புற விழுந்தேன். பூமி அந்த அறையையும் பிடித்துக் கொண்டு சுற்றுவது போல இருந்தது. அதன் பிறகு நான் எதையும் பார்க்கவில்லை. எதையும் கேட்கவில்லை. ஓ! சாவது என்றால் இதுதானா? இப்படி தெரிந்திருந்தால் எப்போதோ செத்திருப்பேன். இந்த மிருகங்களின் பிடியிலிருந்து மறைந்து நான் எங்கோ ஒரு இருட்டுக்குள் பயணிக்கத் தொடங்கினேன்.

நாளை பத்திரிக்கையில் நான் என்னையேக் கொன்றுவிட்டதாகச் செய்திகள் வரும். தொலைக்காட்சிகளில் விவாதங்கள் சூடு பறக்கும். ஆளுங்கட்சி, நடுநிலையினர் என்னும் மாறுவேட ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சாதிக் கட்சி, என்று எல்லோரும் கருத்து சொல்லிவிட்டு டி.வி காரன் தரும் பயணப்படியை வாங்கிவிட்டு வீடுகளுக்குச் செல்வர். பிறகு எல்லோருமாக யாரோ ஒருத்திக்காக மண் சோறு தின்னப் புறப்பட்டுபோவார்கள். ஒருவன் 'கதை முடிந்தது' என்று ஒரு கதை எழுதி தனது ப்ளாக்கில் போடுவான். கதை முடிந்தது.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

எங்கள் அன்பு சகோதரா ஹனுமந்தப்பா! வணக்கம்! (A LETTER TO HANUMANTHAPPA - 2)

அன்பு சகோதரா ஹனுமந்தப்பா! வணக்கம்!

நீ இறந்து விட்டதாக பத்திரிக்கைகள் சொல்லுகின்றன. நான் அதை நம்பவில்லை. நான் ஏன் அதை நம்ப வேண்டும்? எத்தனையோ மாவீர்ர்களை இந்த உலகம் கண்டிருக்கிறது. அலெக்ஸாண்டர், அக்பர், வீர சிவாஜி, சேர, சோழ, பாண்டியன் இவர்கள் எல்லாம் இன்னும் இறக்காமல் மக்களின் நினைவுகளில் நீங்கா இடம் பிடித்து வாழ்வது போலவே, நீயும், உனது ஆறு நாள் உறைபனி வாழ்வும் இன்னும் பல நூறு ஆண்டுகள் பேசப்படும் என்று நான் நம்புவததால் நீ இறந்துவிட்டாய் என்ற செய்தியை நான் நம்பவில்லை.

சியாச்சின் மலை உச்சி. இந்த இடம் முதன் முதலாக என் கற்பனைக் கண்ணுக்கு எட்டியது, பேராசிரியர் பெர்னாட்ஷா கூறிய போதுதான். அவரது மகனும் அத்தகைய ஓர் இடத்தில் பணியாற்றுவதைப் பற்றி உயர்வாகப் பேசிக்கொண்டிருந்ததாக ஓர் ஞாபகம். அப்போது நான் மதுரை அருளானந்தர் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தேன். 

மிகவும் சாதாரணமான ஒரு குடும்பத்தில் பிறந்து, தெருவிளக்கில் பாடம் பயின்று, முனைவர் பட்டம் பெற்று, அவர் கல்லூரி பேராசிரியர் ஆகும் வரையிலான அவரது கதைகள் நம்பிக்கையின் ஊற்றுக்கள். மிகவும் எளிமையானவராக, மாணவர்களுக்கு நண்பராக, கனிவோடு பழகுபவர். எனக்குத் தெரிந்து அவர் பெருமை பாராட்டுவதெல்லாம், அவரது மாணவர்களின் வெற்றியைப் பற்றித்தான். குறிப்பாக 'காதல்', 'வழக்கு எண்' போன்ற தமிழகத் திரைப்படங்களின் போக்கினை மாற்றிய படங்களின் இயக்குநர் பாலாஜி சக்திவேல் தனது மாணவன் என்பதை எந்தப் பாடத்திற்கு இடையிலும் நாசூக்காகச் செருகிவிடுவார். இதை இப்போது உனக்குச் சொல்லக் காரணம் அவரும் உன்னைப் பேலவே ஒரு எளிமையானத் தொடக்கம் கொண்டு வலிமையாக வாழ்ந்து கொண்டிருப்பவர். உன்னைப் போலவே நம்பிக்கைக் கொடுப்பவர். உன் தம்பி, தங்கைகள் மாண்புடன் தங்கள் சொந்தக் கால்களில் நிற்க, அவர்களைத் தட்டிக்கொடுக்க நிறைய பெர்னாட்ஷாக்களை உன் தாய்நாடு கொண்டிருக்கிறது. என் சகோதரா நீ அமைதியில் இளைப்பாறு!

இன்னும் உன்னோடு பேச விரும்புகிறேன்.

வியாழன், 18 பிப்ரவரி, 2016

எங்கள் அன்பு சகோதரா ஹனுமந்தப்பா! வணக்கம்! (A LETTER TO HANUMANTHAPPA - 1)

எங்கள் அன்பு சகோதரா ஹனுமந்தப்பா! வணக்கம்! 
உன்னை எங்கள் சகோதரனாகக் கொண்டதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். எங்களுக்கு அந்தப் பெருமையைத் தந்து விட்டு நீ மட்டும் சென்றுவிட்டாயே! நாம் இன்னொரு உலகத்தில் நிச்சயம் சந்திப்போம் என்று நம்புகிறேன். அப்போது உனக்கு எங்கள் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன். 

சியாச்சின் மலை உச்சியில் பசி கொண்ட பனிப்பாறைகள் உன்னையும் இன்னும் ஒன்பது வீரர்களையும் விழுங்கி விட்ட செய்தி கேட்டு நாங்களும் உங்களைப் போலவே உறைந்து விட்டோம். ஆறு நாள்களுக்குப் பின்னர், எல்லாம் முடிந்துவிட்டதென்ற அனுமானிக்கப்பட்டச் செய்தி வந்தது. சில மணி நேரத்திலேயே, ஹனுமந்த் மட்டும் இன்னும் தன் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறான் என்றதும் இந்த உலகமே மெய்சிலிர்த்துப் போனது. இன்னும் அபாயக் கட்டத்தைத் தாண்டவில்லை என்ற உபரிச் செய்தியினால், இந்தியாவின் உதடுகள் நீ மீண்டு வரவேண்டுமென்று அதற்கு தெரிந்த எல்லா மொழிகளிலும், அதில் இருக்கும் எல்லா தெய்வங்களிடமும் இரந்துகொண்டிருந்தது. நிர்பயா என்னும் நம் சகோதரி டில்லியில் வல்லுறவு செய்யப்பட்டு, கயவர்களால் சிதைக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோதும், நாம் கையறு நிலையில் செபம்தான் செய்துகொண்டிருந்தோம். ஆனால் நமது நீதிமன்றங்கள் நம்மை ஏமாற்றுவது போலவே, கடவுளின் கருணை மன்றங்களும் நம்மை வஞ்சித்துவிடுகின்றன. பனிப் பாறைகளில் ஆய்வு செய்த அறிஞர்களெல்லாம் என்னென்ன காரணங்கள் சொன்னாலும், 35 அடி ஆழத்தில், சுழியிலிருந்து (-)40 பாகை குறைவான உறைபனியில், ஆறு நாள்கள் உன்னால் உன் உயிரைப் பிடித்து வைத்திருக்க முடிந்ததென்பதைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

என்ன நினைத்து கொண்டிருந்தாய் எம் சகோதரா? பனிமலையின் வயிற்றுக்குள் ஆறு நாள்கள் என்று சொல்வதைவிட, பகலேயில்லாத பன்னிரண்டு இரவுகளை அல்லவா நீ உயிரோடு கடந்துவிட்டாய்? நினைத்தாலே மூர்ச்சையாகிவிடுகிறது நெஞ்சம். அந்த நேரத்தில், பனி உருகுவது போல், உயிர் உருகிக்கொண்டிருந்த ரண கணத்தில், சகோதரா யாரையெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தாய். இந்தியத் தாயின் தலை மிதித்து எதிரிகள் நுழையாமல் நீ மதிலாய் நின்று கொண்டிருந்தாயே! பனிமலைக்குள்ளும் பாரதத்தைக் காக்கும் வேட்கையுள்ள வேங்கையைத் தன் பனிக்குடத்தில் சுமந்த உன் பாசத்தாய்க்கு இதைவிட எந்த பெருமையை நீ பெற்றுத்தர முடியும்! முடியாத இருட்டுக்குள் முடங்கி விடாமல், இதுவும் விடியும் என்று விழித்திருந்தாயே! இந்த நம்பிக்கையைத் தந்த உன் தந்தைக்கு இதுவல்லவோ மணிமகுடம். நீ  விட்டது உன் கட்டுக்குள் வந்துவிட்ட உயிர்தான். பாவம், பிழைத்துக்கொள்ளட்டும் என்று மரணத்திற்கு நீ போட்ட பிச்சைதானே உன் உயிர். உனது சாவே ஒரு சாவின்மைதான் சகோதரா!

உன்னோடு இன்னும் நிறைய நிறைய பேச விரும்புகிறேன். நீ தான் காலத்தை வென்றுவிட்டாயே! பேசுவோம்

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

செரின்டாவும், ஃபாதர் மாமாவும் (Sherinda And Father Uncle)

மகிழ்வுந்தின் முன் இருக்கையில் இருந்தார் ஃபாதர் மாமா. எங்கள் ஊரில் ஃபாதரை ஃபாதர் மாமா என்று தான் பிள்ளைகள் அனைவரும் கூப்பிடுவோம். இதனால் ஃபாதரும் எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்ற உணர்வு தானாகவே வந்து விடும். அவர்களும் எங்களிடம் நெருங்கிய உறவுக்காரர் போன்ற பாசத்தில்தான் பழகுவார்கள். குட்டிப்பிள்ளைகள், பீடச்சிறுவர்கள், இளைஞர்கள் வரையிலும் ஃபாதர் மாமா என்று அழைக்கும் மாத்திரத்தில் அவரும் அப்படியே உருகிவிடுவார். அப்பா ஃபாதர் மாமாவை ஏர்போர்ட்டில் கொண்டுவிட சம்மதித்திருந்தார். அப்பா கிளம்பியதுமே நானும், அக்கா மெலின்டா, தம்பி லெனோன் மூவரும் வண்டியில் ஏறிவிட்டு, நாங்களும் ஃபாதர் மாமாவை வழியனுப்ப வருகிறோம் என்று சம்மதம் வாங்கிவிட்டோம். கடைசி தம்பி எவின் குழந்தை என்பதால் அம்மா அவனை விடவில்லை. அப்பா நேரத்தைப் பார்த்துக் கொண்டே வண்டியை வேகமாக செலுத்த, ஃபாதர் மாமா அவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே வந்தார்.

முன் இருக்கையில் இருந்த ஃபாதர் மாமாவின் கன்னங்களை என் இரு கைகளால் வருடிக்கொண்டே 'நான் உங்களை மிஸ் பண்றேன்' என்று சொல்லிக்கொண்டேயிருந்தேன். நான் இப்பொழுதுதான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். இந்தக் குழந்தை எப்படி இத்தகைய உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும்? அப்படியே உணர்ந்தாலும் எப்படி அதை துல்லியமான வார்த்தைகளால் வெளிப்படுத்துகிறாள் என்று அப்பாவிடம் கேட்டார் ஃபாதர் மாமா. நிறைய சினிமாக்களில் வரும் சொற்கள் தானே என்று அவரே விடையும் சொல்லிக்கொண்டார். அப்பாவின் எண்ணமெல்லாம் சரியான நேரத்திற்கு விமான நிலையம் சென்றுவிட வேண்டுமென்றுதான் அடித்துக்கொண்டது. 

ஃபாதர் மாமா ஒரு பக்கமாக திரும்பி என்னிடம் அப்பாவியாகச் சிரித்து எல்லோரையும் அன்பால் கட்டிப்போடுகிறேன் என்று சொன்னார். ஒன்றிரண்டு தினங்கள் கோவிலில் பார்த்த போதே ஃபாதர் மாமாவுடன் சகஜமாக விளையாட ஆரம்பித்துவிட்டோம். வீட்டிற்கு ஒருநாள் சாப்பிட வந்திருந்தார். அம்மா புரோட்டா, பான், பீஃப் போன்ற அயிட்டங்களைச் செய்து அசத்தியிருந்தார். அத்தையும், இரண்டு அண்ணிமார்களும் வந்திருந்தனர். ஃபாதர் மாமா அத்தையிடம் பேசிக் கொண்டிருந்தார். இக்குழந்தைகள் சிரிக்க வேண்டுமென்ற சிரத்தையெல்லாம் எடுக்கத் தேவையேயில்லை. இயல்பாகவே சிரித்துக்கொண்டேயிருக்கின்றன அவர்களின் முகங்கள் என்று எங்களை வியந்துகொண்டும், எங்களோடு விளையாடிக்கொண்டும் இருந்தார் ஃபாதர் மாமா.

மெல்லிசாக பனி விழுந்து கொண்டேயிருந்தது. ஃபாதர் மாமா பேச்சை நிறுத்தி எதையோ யோசித்தவாறு இருந்தார். லெனோன் ஃபாதர் மாமாவின் தோளில் கை வைத்து அவரது யோசனையைக் கலைத்தான். அவரும் அவனது கையைப் பிடித்து இழுத்து அவனுக்கு விளையாட்டு காட்டினார். சரியான நேரத்தில் ஏர்போர்ட்டை அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கை வந்ததும் அப்பா ஃபாதர் மாமாவிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார். லக்கேஜ் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கேட்டார். ஃபாதர் மாமா தன்னிடம் ஒரு செண்ட் பாட்டில் இருப்பதாகக் கூறினார். வெறும் 'ஹேண்ட் லக்கேஜ்' என்பதால் அதை எடுத்துப் போட்டுவிடுவர் என்று அப்பா பயம் காட்டினார்.  ஜெர்மனியின் க்லோன் நகரத்தின் சிறப்பான 'ஆ.டீ.க்ளோன் 4711' என்ற செண்ட் பாட்டில் எனவும், முக்கியமான ஒருவர் அன்போடு பரிசளித்தது எனவும் சொன்னார் ஃபாதர் மாமா. ஏற்கனவே பாரிசில் ஒரு நிவ்யா டப்பாவை எடுத்துப் போட்டுவிட்டனர் என்றும் வருத்தப்பட்டார். செண்ட் பாட்டில் அதோ கதிதான் என்பது போல் சோகமாகிப் போனார். 

லெனோனின் சேட்டைகள் அதிகமாகியிருந்தது. ஏதாவது சத்தமிட்டோ, அல்லது ஃபாதர் மாமாவின் தோளில் தட்டியோ கவன ஈர்ப்பு செய்துகொண்டிருந்தான். பனி பெய்துகொண்டிருந்ததால் வாகன நெரிசல் இருக்கவில்லை. குறித்த நேரத்திற்கு முன்னதாகவே ஏர்போர்ட் வந்து சேர்ந்துவிட்டோம். குளிரில் இறங்க மனமின்றி எல்லோரும் அப்படியே காரில் இருக்க, கதவுகளைத் திறக்குமாறு லெனோன் அடம்பிடித்தான். அப்பா அவனிடம் திரும்பி ஆங்கிலத்தில் 'ஐ காட் இட்' என்று சொல்லுமாறு கேட்டார். அவன் நிறைய ஆங்கில வீடியோகேம் விளையாடுவதால் சில ஆங்கில வசனங்களை மிகவும் ஸ்டைலாக உச்சரிப்பான். அவனும் அப்படியே சொல்ல அனைவரும் சிரித்துக் கொண்டே ஏர்போர்ட்டில் நுழைந்தோம். 

நான் ஃபாதர் மாமாவின் கைகளைப் பிடித்துக் கொண்டேன். மெலின்டாவுக்கும் ஆசைதான். ஆனால் அவள் வழக்கம் போல் மெலிதாகச் சிரித்துக் கொண்டே எங்களுக்கு அருகில் நடந்து வந்தாள். நான் ஃபாதர் மாமாவிடம் மீண்டும் 'நான் உங்களை மிஸ் பண்றேன்' என்றேன். அவரும் முன்பு போலவே அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவரது கைகளில் சிலதுளி கண்ணீர் பட்ட பின்னர்தான் ஃபாதர் மாமாவால் தாங்க முடியவில்லை. எப்படி இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தை இவ்வளவு அன்பாக பழக முடியும்? எப்படி ஒரு சில நாள்களே பழகிய ஒரு மூன்றாம் நபரின் பிரிவுக்காக 'நான் உங்களை மிஸ் பண்றேன்' என்று சொல்வதோடு, கன்னம் நிறைய கண்ணீர் விட முடியும்?  ஃபாதர் மாமா செய்வதறியாது திகைத்தார். என்னை இறுக்க அணைத்துக் கொண்டார். ஏதாவது தர ஆசைப்பட்டார். அதற்குள் அவரது 'லக்கேஜ்' பரிசோதனைக்காக எந்திரத்திற்குள் சென்றது. அவர் மனம் லக்கேஜ்-க்கும், எனக்குமாக தாவிக்கொண்டிருந்தது. அவர் கைகளில் என் கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பெண் அதிகாரி 'ஆ.டீ.க்ளோன் 4711' செண்ட் பாட்டிலைக் கொண்டு செல்ல இயலாது எனக் கூறி அதைக் கூடையில் போடப் போனாள். அவளது கையிலிருந்து அதைப் பறிக்காதக் குறையாக வாங்கி, தடுப்புகளில் குனிந்து, வேகமாக என்னிடம் வந்து இதை என் அன்புப் பரிசாக வைத்துக் கொள் என்றுக் கூறிவிட்டு மீண்டும் தடுப்புகளில் குனிந்து சென்று வேகமாக மறைந்தார் ஃபாதர் மாமா. அவரது முகம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

(வெறும் பயணக் கட்டுரையாக இல்லாமல், கதை வடிவில் நார்வே பயணத்தைப் பதிவு செய்யும் முதல் முயற்சி. இன்னும் நிறைய கதைகளோடு தொடர்வோம். நன்றி)

புதன், 16 டிசம்பர், 2015

சாமியார்கள் கதை (A Story Of Priests)

ஒவ்வாமை எச்சரிக்கை: "சாமியார்கள்" என்ற வார்த்தை இந்த இரவில் எத்தனை முறை எண்ணினாலும் குழம்பும் படியாக எண்ணற்ற முறைகள் திரும்ப திரும்ப வருகின்றன.

உரோமிலுள்ள பழமை வாய்ந்த ஓர் ஆலயம் தான் புனாரி தெருவிலுள்ள புனித கத்ரீனமாள் ஆலயம். 1192 ஆம் ஆண்டிலிருந்து இதன் வரலாறு நமக்குத் தெளிவாகக் கிடைத்துள்ளது. அதன் பின்னர் 1536 இல் இவ்வாலயத்தை அப்போதையத் திருத்தந்தை மூன்றாம் பவுல் என்பவர் புனித லயோலா இஞ்ஞாசியாரிடம் ஒப்படைக்கிறார். புனிதர் இவ்வாலயத்தில் ஏழை இளைஞர்களுக்கான ஓரு மடத்தை நிறுவியதோடு, இவ்வாலயத்தைப் புதிதாகக் கட்டி, அதனை புனித கத்ரீனம்மாளின் பெயரில் அர்ப்பணிக்குமாறு கர்தினால் பெடரிக்கோ சேசி என்பவரிடம் கோரிக்கை விடுக்கிறார். உடனடியாக ஆலயக் கட்டுமானப் பணிகள் தொடங்கி 1564 ஆம் ஆண்டு இந்த ஆலயமானது கட்டி முடிக்கப்பட்டது. உரோமையின் மற்ற ஆலயங்களைப் போன்று மிகவும் பிரம்மாண்டமாக இல்லாவிடினும், மத்திய கால இத்தாலியக் கலைநயத்தின் ஓர் அற்புதமான அடையாளமாகத் திகழ்கிறது. 

இந்த ஆலயத்தில் கடந்த இரண்டு வாரமாக கிறிஸ்மஸ் குடில்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர். ஒரு சிறுவன் அரைவட்ட வடிவில் வைக்கப்பட்டிருந்த குடில்களுக்கு நடுவில் நின்று கொண்டிருந்தான். தனக்கு முன்னால் நீண்டு கிடக்கும் தனது நிழலைத் தனது சிறிய கால்களால் மிதித்துவிட ஒரு அடி எடுத்து வைத்தான். நிழல் ஒரு அடி முன்னால் செல்ல, அவனும் தனது முயற்சியை விடாது செய்துகொண்டிருந்தான். முக்கால் சதுர அடி சிவப்பு ஓடுகளால் வேயப்பட்ட தரையின் தளமானது, குறைந்த வெளிச்சத்தில் அவனது விளையாட்டை இன்னும் சுவாரஸ்யமாக்கியது. 

அவனது தனிமையைக் குலைத்தவாறு ஒரு தம்பதியினர் ஆலயத்தில் நுழைந்து அந்தக் குடில்களைப் பற்றி அவனிடம் கேட்டனர். அவன் அவர்களிடம் அவர்கள் எங்கிருந்து வருவதாகக் கேட்டான். அவர்கள் இஸ்ரேலிலிருந்து வருவதாகக் கூறினர். 'ஓ! நிஜமானக் குடிலிலிருந்து வருகிறீர்களோ?' என்றான். சிறுவனின் கேள்வியில் அவர்களின் மொட்டுவாய் பூவாய் பூத்தது . சிறுவன் தனது கதையைச் சொல்லத் தொடங்கினான்.

அவனது ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவரது பெயர் அமல்ராஜ். அரைகுறை சிற்பி ஒருவன் பெரியாருக்கு ஒரு சிலை செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தார் அந்த சாமியார். வேறு எந்த சாமியாரையும் அவன் பார்த்ததேயில்லாத காரணத்தால், சாமியார் என்றால் நீண்ட தாடியும், வழுக்கைத் தலையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நரைத்த முடியும் இருக்க வேண்டுமென்று அவனே நினைத்துக்கொண்டான். மேலும் சாமியார்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பது பற்றிய எந்த விபரங்களையும் யாரும் அவனுக்குச் சொல்லித் தரவேயில்லை. சாமியார்கள் எங்கிருந்தோ, எப்படியோ சாமியாராகவே வருகிறார்கள் என்று நினைத்துக் கொண்டான். 

அவனது நண்பர்கள் இந்தச் சாமியார் மிகவும் கண்டிப்பானவர் என்றனர். மந்திர கிளாஸில் சரியாகப் படிக்கவில்லையென்றாலோ, தினசரி காலைப் பூசைக்கு வரவில்லையென்றாலோ குடைக் கம்பியால் அடிப்பார் என்றனர். குடைக்கம்பி என்றால் குடையைக் கொண்டு அடிப்பாரா? அல்லது குடையின் கைப்பிடி வளைந்த நடுக்கம்பியாலா அல்லது மற்ற சின்னச்சின்னக் கம்பியைக் கொண்டா என்று கற்பனை செய்து பார்த்தான். அந்த எண்ணமே அவனைப் பயறுத்தியதால் அதைப் பற்றி மேலும் அவன் விசாரிக்க விரும்பவில்லை. அவனை அந்தச் சாமியார் ஒருபோதும் அடித்ததோ, கண்டித்ததோ இல்லை. அந்தச் சிறுவனின் புதுநன்மை பூசையில் அவன்தான் முதல் வாசகம் வாசிக்க வேண்டுமென்று முடிவானதால், சாமியாரிடம் வாசித்துக் காட்ட வேண்டுமென்று  அவனது நண்பர்கள் கூறினர். மிகவும் பயம் காட்டினர். குடைக்கம்பி வேறு நினைவுக்கு வந்து அச்சுறுத்தியது. 

அக்காளைத் துணைக்குக் கூட்டிக்கொண்டு பைபிளும் கையுமாக சாமியாரின் அறைக் கதவைத் தட்டியச் சிறுவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சாமியாரை முதன் முறையாக லுங்கியிலும், பனியனிலும் பார்த்தான். சாமியார்கள் எப்போதும் அங்கியில் தான் இருப்பார்கள் என்றே அதுவரையிலும் நினைத்துக்கொண்டிருந்தான். வீட்டிற்கு வரும்வரையிலும் சாமியர் லுங்கி கட்டியிருந்ததை ஒரு விநோதத்தை தான் மட்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து போல எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தான். அவர்களில் பலரும் அப்படியா என்று வாயைப் பிளந்தனர். சிலர் தாங்களும் அப்படி பார்த்திருப்பதாகக் கூறினர். பயம் மனதின் ஆழத்தில் உறைந்து கிடந்தது. திக்கென்ற அமைதி அறையில் நிலவியது. சாமியார் ஒரு பழைய தட்டச்சு எந்திரத்தை 'டொக், டொக்' என்று தட்டிக்கொண்டிருந்தார். புகை கலைவது போல மெதுவாக அவரது தாடி விலகியது. 'வாசிப்பா' என்றார். சூரைச் செடியின் அடியில் எலியா படுத்துறங்கியதும், வானதூதர் அவருக்கு உணவு கொடுத்ததுமான முதல் அரசர் புத்தகத்தின் ஒரு பகுதியே வாசகம். தனக்கு இன்னும் எப்படி அது ஞாபகம் இருக்கிறது என்று அவனுக்கேத் தெரியவில்லை. இரண்டு முறை வாசித்து முடிக்கும் முன்னரே போதும் என்று சொல்லி அழகான ஒரு புன்னகையோடு அனுப்பி வைத்தார். 

இன்னொரு சமயம் வீட்டில் ஒரே சண்டை. எல்லாம் பற்றாக்குறைதான் காரணம். அவனது தந்தை அவ்வூர் ஆலயத்தின் சுவர்களில் சிமெண்ட் மூலம் மார்பிள் போன்ற வேலைப்பாடு செய்யும் காண்டிராக்ட் எடுத்திருந்தார். அந்தக் காலத்தில் அது ஒரு ஆடம்பரமான வேலைதான். வேலைக்குத் தகுந்த பணம் தரவில்லையோ, அல்லது பணம் தந்துவிட்டதாக கூறி கணக்கில் தவறு நடந்ததோ தெரியவில்லை. ஏதோவொன்றைக் கூறி அந்தச் சாமியாரைத் திரும்பத் திரும்ப திட்டிக்கொண்டிருந்தார் அவனது தந்தை. இந்த சாமியா(ன்) இருக்கும் வரை தான் கோவிலுக்கு வருவதில்லை என்றார். ஞாயிறு காலை கோவிலில் பூசை தொடங்கியதும் கிழட்டு சாமியார்தான் என்று சரியாகக் கணித்துச் சொல்லிக்கொண்டிருந்தாள் அம்மா.

அந்த ஊரில் எப்போதாவதுதான் புதுவீட்டில் பால்காய்ச்சும் நிகழ்வு நடக்கும். வருடத்திற்கு ஒன்றோ, இரண்டோ தான். அப்போது சொல்லிக் கொள்வார்கள் சாமியார் கட்டிக் கொடுத்த வீடு என்று. சிறுவனின் வீட்டில் அந்த சமயத்தில் மீண்டும் சண்டை நடக்கும். தங்களுக்கு ஒரு வீடுகட்டித் தரவில்லையே இந்த நன்றி கெட்ட சாமியார் என்று சாமியாருக்குக் கேட்காத தூரத்தில் அம்மாவிடம் பேச்சு வாங்கிக் கொண்டிருப்பார் சாமியார். அவருக்கு இதைப் பற்றியெல்லாம் நிச்சயம் தெரிய வாய்ப்பில்லை. பின்னர் ஒரு சமயம் ஊரில் நிறைய பேருக்கு சாமியார் ஆடு வாங்கிக் கொடுத்தார். சிறுவனது வீட்டிற்கும் ஒரு ஆடு கிடைத்தது. சிறுவன் ஊர் பிள்ளைகளோடு வயல் காடுகளுக்கு ஆடு மேய்க்கப் போனதை நினைவுபடுத்திக்கொண்டான். 

சாமியார் ஊரிலிருந்து மாறிப் போய்விட்டார். பதினைந்து ஆண்டுகளில் இப்போது அவனது ஊரில் நிறைய வீடுகள் கட்டுகிறார்கள். அடிக்கடி பால்காய்ப்பு விசேஷ வீடுகளுக்கு மொய் செலவு என்று அம்மா குறைபட்டுக்கொள்கிறாள். மேலும் இப்போது ஆடுகள் யாரும் வளர்க்க விரும்புவதில்லை. அது வேலையற்ற வேலை என்கிறார்கள். பங்கிலிருந்த எல்லா கோவில்களையும் புதிதாகக் கட்டிவிட்டார்கள். முன்பை விட கோவிலில் நிறைய நிகழ்ச்சிகள், இயக்கங்கள், அலங்கார விளக்குகள், பளிங்கு தரைகள். மொத்தத்தில் ஊருக்கு ஒரு பணக்களை வந்து விட்டது. சிமெண்ட் மார்பிள் அலங்காரம், சிப்ஸ் சுவர் வேலைப்பாடுகள் போன்றவையெல்லாம் இல்லாவழக்காகிவிட்டன. 

அக்காளைக் கட்டிக் கொடுத்திருக்கும் வீடு இருக்கும் தெருவுக்கு சாமியாரின் பெயரை விட்டிருக்கிறார்கள். இப்போதைய குட்டீஸ்களுக்கு சாமியாரைத் தெரியாது. நிறையபேர் மாதா இல்லை, புனிதர்கள் இல்லை, சாமியார் இல்லை என்று சொல்லும் பெந்தகோஸ்து சபையில் சேர்ந்துவிட்டார்கள். நிறைய வீடுகளில் வேற்றுமொழி பேசும் விநோத சத்தங்கள் கேட்கின்றன. புனிதரின் சிலையை இவ்வளவு கஷ்டப்பட்டு தூக்குகிறார்களே! இந்தப் புனிதரா இவர்களைக் காப்பாற்றப் போகிறார் என்றெல்லாம் கேள்விகேட்கும் அளவுக்கு நிறைய தத்துவஜீவிகள் பெருகிவிட்டனர். கத்தோலிக்கம் பொய், இயேசுவே மெய் என்று நிறைய கோஷங்கள் கேட்கின்றன.

சிறுவன் இப்போது மிகவும் கலங்கிப் போயிருந்தான். அவனது நண்பர்களும் நிறைய தத்துவங்களைப் பேசுகிறார்கள். சாமியார் திண்டுக்கல்லில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போயிருந்தார். கிராம அனுபவத்திற்காக திண்டுக்கல் போன போது கொஞ்சம் முயற்சி எடுத்திருந்தாலும் அவரைப் பார்த்திருக்கலாமே என்று ஏங்கினான். நீங்கள் அன்பு செய்த ஊரை வந்துப் பாருங்கள் என்று கெஞ்சினால் கல்லறையிலிருந்தும் அவர் எழுந்து வரக்கூடும் என்று அவன் நம்பினான். ஆடுகள் கலைந்து போனாலும், ஆயனுக்கு ஆடுகளின் மேல் அன்பு மாறாதுதானே. 

இப்போது அவனுக்கு சாமியார்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று நன்றாகத் தெரியும். அவர்கள் லுங்கி, பேண்ட், சட்டை எல்லாம் போடுகிறார்கள். பார்ப்பதற்கு எல்லோரையும் போலவே இருக்கிறார்கள். இப்போது சாமியார் என்ற வார்த்தை முன்பு போல பயமூட்டுவதாக இல்லை. அவர்களின் மனது அவனுக்கு நன்றாகத் தெரிகிறது. அவர்களும் குடும்பங்களிலிருந்தே வருகிறார்கள். அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை அன்பு செய்கிறார்கள். மக்களும் பெரும்பாலும் சாமியார்களை முன்பு போலவே அன்பு செய்கிறார்கள். உணவில் கண்ணுக்குத் தெரியாத உப்பு போல, சிறுவனின் ஊரில் அமல்ராஜ் சாமியார் கரைந்திருக்கிறார். நிறைய தத்துஜீவிகளின் தத்துவ விகல்பனங்களுக்கு மத்தியிலும், சாமியாராக இருப்பதில் கிடைக்கும் அமைதியைச் சிறுவன் இப்போது ரசிக்கத் தொடங்கியிருக்கிறான். 

அவன் பார்க்காத பல சாமியார்கள் பிற தளங்களிலும் தங்கள் பெயரைப் பதித்துள்ளது பற்றி அவன் பேசத் தொடங்கினான். சிறுவன் நின்று கொண்டிருக்கும் இந்த ஆலயத்தில் இருபது, முப்பது ஆண்டுகள் உலாவிய புனித இஞ்ஞாசியார் என்னும் சாமியாரின் பெயரில்தான் சிறுவனின் ஊரில் பங்கு கோவில் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. அவர் நிறுவிய இயேசு சபைச் சாமியாரான புனித சவேரியாரால் தான் இன்று இந்தியாவில் பலரும் கிறிஸ்தவர்களானோம். பல்லாயிரம் பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்த அவருடைய வலது கையானது இங்கே பக்கத்தில் இன்னொரு கோவிலில் பாதுகாக்கப்படுகிறது. அதே இயேசு சபையின் ஒரு தமிழ் சாமியார் தான் சிறுவன் கூறிய பங்குச் சாமியார் அமல்ராஜ். 

இயேசு சபையின் இன்னொரு சாமியார்தான் வீரமாமுனிவர் என்று அழைக்கப்படும் இத்தாலி நாட்டின் ஜோசப் பெஸ்கி. 1709 இல் குருவாகி ஒரே ஆண்டில் தமிழகம் வந்த இளம் சாமியார். அவருக்கு என்ன கட்டாயமா? தேம்பாவணி உட்பட 23 தமிழ் நூல்களை எழுதியதோடு, தமிழ் இலக்கணத்திலும், தமிழ் எழுத்துக்களிலும் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார் என்றால் நம்பமுடிகிறதா? இதைப்போன்ற இன்னொரு இயேசுசபைச் சாமியார் தத்துவப்போதகர் என்றழைக்கப்பட்ட இராபர்ட் டி நோபிலி. இப்படி முகம் தெரியாத சாமியார்களை மட்டுமல்லாது எல்லா சாமியார்களையும் சிறுவனுக்குப் பிடித்திருந்தது.

ஒரு ஆண்டில் ஒரு முறை கூட விடுமுறை எடுக்காத, அப்படியே எடுத்தாலும் அடுத்த நாளே பதறியடித்து வேலை இடத்துக்கு ஓடிவரும் சாமியாரை அவன் பார்த்திருக்கிறான். அவரது இடத்தை வேறு யாரும் பிடித்து விடுவார்கள் என்பதால் அப்படி ஓடிவருவதாக ஊரில் சாமியாரைப் பற்றி பேசிக்கொண்டார்கள்.

கல்லூரியில் படித்த காலத்தில், உன்னை வளர்த்துக்கொள்ள எந்த வாய்ப்பு வந்தாலும் தைரியமா எடுத்துச் செய்யுங்க என்று சுதந்திரம் கொடுத்த சாமியாரை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவரது பட்டப் பெயரை அவன் இப்போது சொல்ல விரும்பவில்லை. 

எல்லா வேலைகளையும் ஒருவர் செய்யமுடியுமென்று நினைக்கிறீர்களா? அந்த ஆல்ரவுண்டர் சாமியாருக்கு வண்டி ஓட்ட தெரியும். ஆறேழு மொழிகள் தெரியும். மர வேலைப்பாடுகள் செய்யத் தெரியும். ஐம்பது வயதிலும் நன்றாக கால்பந்து விளையாடத் தெரியும். இது எதுவுமே தனக்குத் தெரியாதது போல எளிமையான, சிரித்த முகத்துடன் எல்லோரிடமும் பேசவும் அவருக்குத் தெரியும். யாருமே பார்த்தேயிராத இல்லாத பொல்லாத கதைகளை அவருக்கும் கிளப்பிவிட்டிருந்தனர்.

ஒருமுறை கோவிலில் பணிந்து வணங்கவில்லை. இதைக் கண்டித்த சாமியாரிடம் தான் யாரிடமும் பணிவதில்லை என்றும், தான் திருச்சி பவுல் கல்லூரி மாணவன் என்றும் சிறிது தத்துவம் பேசிப்பார்த்தான் சிறுவன். 'அவனருளாலே அவன் தாள் வணங்கி' என்று, ஆண்டவரிடம் தாழ்ந்து பணிவதற்கும் அவனருள் வேண்டும். அது உனக்கு இல்லை போல என்று அவனது பார்வையை தத்துவத்திலிருந்து அன்புக்கு மாற்றிய சாமியாரையும் அவனுக்குத் தெரியும். சொல்வதற்கு எதுவுமில்லை என்பதால் அவர் தவறுகளைத் துணிவாகத் தட்டிக்கேட்பதில்லை என்று சொல்லினர்.

புதிய இடத்துக்கு சிறுவன் மாற்றப்பட்டபோது அங்கிருப்பவர்கள் தன்னிடம் எப்படி பழகுவார்களோ என்று பயந்திருந்த சமயத்தில், அங்கிருந்த இளம் சாமியார்கள் கூட முன்பு தான் ஏற்கனவே பார்த்திருந்த பல பெரிய சாமியார்களைப் போலவே மிகவும் அருமையானவர்களாக இருப்பது அவனுக்கு சந்தோஷமாக இருந்தது.

அந்தச் சிறுவனைச் சில சாமியார்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்களுக்கு அந்தச் சிறுவனைப் பிடிக்கவில்லை என்பதை விட அந்தச் சிறுவனை விட பிறரை அவர்களுக்கு அதிகமாகப் பிடித்திருந்தது. அதில் பிழையொன்றுமில்லை என்பதால் அந்தச் சாமியார்களையும் அவனுக்குப் பிடிக்கும். 

இப்படி அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போது இன்னொரு பெண்ணொருவர் வந்து இந்தக் குடில் கண்காட்சியைப் பற்றி சிறுவனிடம் கேட்டார். சிறுவன் சொன்னான்: இந்தக் குடில்கள் அனைத்துமே எங்கள் சபையின் அதிபர் சாமியாரின் கைகளால் செய்யப்பட்டவை. அவருக்கு சபையின் எல்லா இல்லங்களையும் சந்திக்கும் வேலை உண்டு. அத்தோடு அன்னை மரியாளைப் பற்றி பல புத்தகங்களையும் எழுதுகிறார். இந்தக் குடில் கண்காட்சி மூலம் கிடைக்கும் வருவாயை மறைபரப்புப் பணிக்காகச் செலவிடுகிறார். சிறுவன் பேசிக் கொண்டிருக்கும் போதே இரண்டு அழகிய குடில்களை 380 யூரோ கொடுத்து சந்தோஷமாக வாங்கி சென்று கொண்டிருந்தார் அந்தப்பெண். 

பிடித்தல், பிடிக்காமை, பாரபட்சங்கள், தத்துவங்கள், தேவபாஷைகள், குறைபாடுகள் எல்லாவற்றையும் கடந்து சாமியார்களும் எல்லோரையும் போலவே குடும்பங்களிலிருந்து வருகிறார்கள் என்பது தெரிந்த நாளிலிருந்து அவனுக்கு அவர்களை இப்போது மிகவும் பிடித்திருந்தது. சாக்கடை சுத்தம் செய்பவர்கள், சுனாமி போன்ற சமயங்களில் உதவும் தன்னார்வலர்கள் மருத்துவர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் போலவே சாமியார்களும் இந்த சமுதாயத்திற்கு அவசியமானவர்களாக இருப்பதாக அவன் உணர்வதால் அவர்களை அவனுக்குப் பிடித்திருந்தது. எல்லாவற்றிலும் முக்கியமான இன்னொன்று. இந்தப் பிறவியில் சாமியாராக இருத்தல் என்பது ஒரு வரம். யாருக்குமே கிடைக்காத எண்ணற்ற அன்பு அனுபவங்களும், அருள் அனுபவங்களும் சாமியார்களுக்கு கிடைப்பதால் அவனுக்கு சாமியார்களைப் பிடித்திருந்தது.