வெள்ளி, 7 ஏப்ரல், 2017

தவக்காலம் ஐந்தாம் வாரம் சனி (8-4-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 11:45-56

45 மரியாவிடம் வந்திருந்த யூதர் இயேசு செய்வதைக் கண்டு அவரை நம்பினர்.
46 ஆனால் அவர்களுள் சிலர் பரிசேயரிடம் சென்று இயேசு செய்வதைத் தெரிவித்தனர்.
47 தலைமைக் குருக்களும் பரிசேயரும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி, 'இந்த ஆள் பல அரும் அடையாளங்களைச் செய்து கொண்டிருக்கிறானே, என்ன செய்யலாம்?
48 இவனை இப்படியே விட்டுவிட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும் நம் இனத்தையும் அழித்து விடுவார்களே!' என்று பேசிக் கொண்டனர்.
49 கயபா என்பவர் அவர்களுள் ஒருவர். அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்தார். அவர் அவர்களிடம், 'உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை.
50 இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை' என்று சொன்னார்.
51 இதை அவர் தாமாகச் சொல்லவில்லை. அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்ததால், இயேசு தம் இனத்திற்காவும்,
52 தம் இனத்திற்காக மட்டுமின்றி, சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் நோக்குடன் அவர்களுக்காகவும் இறக்கப்போகிறார் என்று இறைவாக்காகச் சொன்னார்.
53 ஆகவே, அன்றிலிருந்தே அவர்கள் இயேசுவைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டினார்கள்.
54 அது முதல் இயேசு யூதரிடையே வெளிப்படையாக நடமாடவில்லை. அவர் அவ்விடத்தினின்று அகன்று பாலை நிலத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குப் போனார்; அங்கு எப்ராயிம் என்னும் ஊரில் தம் சீடருடன் தங்கியிருந்தார்.
55 யூதர்களுடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. விழாவுக்குமுன் தங்கள் தூய்மைச் சடங்குகளை நிறைவேற்றப் பலர் நாட்டுப் புறங்களிலிருந்து எருசலேமுக்குச் சென்றனர்.
56 அங்கே அவர்கள் இயேசுவைத் தேடினார்கள். 'அவர் திருவிழாவுக்கு வரவே மாட்டாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' என்று கோவிலில் நின்றுகொண்டிருந்தவர்கள் தங்களிடையே பேசிக் கொண்டார்கள்.

சிந்தனை : 

தவக்காலம் ஐந்தாம் வாரம் வெள்ளி (7-4-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 10:31-42

31 அவர்மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர்.
32 இயேசு அவர்களைப் பார்த்து, 'தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள் முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்?' என்று கேட்டார்.
33 யூதர்கள் மறுமொழியாக, 'நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதானாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்' என்றார்கள்.
34 இயேசு அவர்களைப் பார்த்து, ''நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்' என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா?
35 கடவுளுடைய வார்த்தையைப் பெற்றக் கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது.
36 அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை 'இறை மகன்' என்று சொல்லிக் கொண்டதற்காக 'இறைவனைப் பழித்துரைக்கிறாய்' என நீங்கள் எப்படிச் சொல்லலாம்?
37 நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்ப வேண்டாம்.
38 ஆனால் நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்' என்றார்.
39 இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்.
40 யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு இயேசு மீண்டும் சென்று அங்குத் தங்கினார்.
41 பலர் அவரிடம் வந்தனர். அவர்கள், 'யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை; ஆனால் அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று' எனப் பேசிக்கொண்டனர்.
42 அங்கே பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

சிந்தனை : 

புதன், 5 ஏப்ரல், 2017

தவக்காலம் ஐந்தாம் வாரம் வியாழன் (6-4-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 8:51-59

51 'என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்.
52 யூதர்கள் அவரிடம், 'நீ பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஆபிரகாம் இறந்தார். இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் என் வார்த்தையைக் கடைப் பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே!
53 எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?' என்றார்கள்.
54 இயேசு மறுமொழியாக, 'நானே என்னைப் பெருமைப்படுத்தினால், அது எனக்குப் பெருமை இல்லை. என்னைப் பெருமைப்படுத்துபவர் என் தந்தையே. அவரையே நீங்கள் உங்கள் தந்தை என்றும் சொல்கிறீர்கள்.
55 ஆனால் அவரை உங்களுக்குத் தெரியாது. எனக்குத் தெரியும். எனக்கு அவரைத் தெரியாது என நான் சொன்னால் உங்களைப்போல நானும் பொய்யனாவேன். அவரை எனக்குத் தெரியும். அவருடைய வார்த்தையையும் நான் கடைபிடிக்கிறேன்.
56 உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்; அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார்' என்றார்.
57 யூதர்கள் அவரை நோக்கி, 'உனக்கு இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லை; நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா?' என்று கேட்டார்கள்
58 இயேசு அவர்களிடம், 'ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்.
59 இதைக் கேட்ட அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்.

சிந்தனை: 

தவக்காலம் ஐந்தாம் வாரம் புதன் (5-4-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 8:31-42

31 இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, 'என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்;
32 உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்' என்றார்.
33 யூதர்கள் அவரைப் பார்த்து, 'உங்களுக்கு விடுதலை கிடைக்கும'; என நீர் எப்படிச் சொல்லலாம்? நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே!' என்றார்கள்.
34 அதற்கு இயேசு, 'பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
35 வீட்டில் அடிமைக்கு நிலையான இடம் இல்லை. மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு.
36 மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள்.
37 நீங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வார்த்தை உங்கள் உள்ளத்தில் இடம் பெறாததால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள்.
38 நான் என் தந்தையிடம் கண்டதைச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் தந்தையிடமிருந்து கேட்டதைச் செய்கிறீர்கள்' என்றார்.
39 அவர்கள் அவரைப் பார்த்து, 'ஆபிரகாமே எங்கள் தந்தை' என்றார்கள். இயேசு அவர்களிடம், 'நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால் அவரைப் போலச் செயல்படுவீர்கள்.
40 ஆனால் கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை நீங்கள் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே!
41 நீங்கள் உங்கள் தந்தையைப் போலச் செயல்படுகிறீர்கள்' என்றார். அவர்கள், 'நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல. எங்களுக்கு ஒரே தந்தை உண்டு. கடவுளே அவர்' என்றார்கள்.
42 இயேசு அவர்களிடம் கூறியது 'கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை. அவரே என்னை அனுப்பினார்.

சிந்தனை : 
  இன்றைய நற்செய்தியில் இயேசு ஆண்டவர் 'உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்' என்கிறார். இதே யோவான் நற்செய்தி 14:6 இல் 'வழியும், உண்மையும், வாழ்வும் நானே' என்கிறார். எனவே இன்று இயேசு கூறும் வார்த்தையை 'இயேசு உங்களுக்கு விடுதலை அளிப்பார்' என்றும் புரிந்து கொள்ளலாம். இயேசு கூறும் உண்மை என்பது ஒரு மதிப்பீடு மட்டுமல்ல. அது ஒரு ஆள். அவரே இயேசு.
   'உண்மையா? அது என்ன?' (யோவான் 18:38) என்று பிலாத்து இயேசுவிடம் கேட்குமிடத்திலும், நாம் நினைவுகூறவேண்டியது இதுதான். பிலாத்துவின் கேள்விக்கு இயேசு பதிலளிக்கவே இல்லை. உண்மையா அது யார்? என்று கேட்டிருந்தால் இயேசு நிச்சயம் பதில் கூறியிருப்பார்.
   ஆக நம் வாழ்வில் நாம் பற்றிக்கொள்ள வேண்டிய உண்மையாக இருப்பவர் நம் ஆண்டவர் இயேசு மட்டுமே. அவரை நாம் நெருங்கும் போது உண்மையை நெருங்குகிறோம். பாவம் என்னும் பொய்மை நம்மை விட்டு அகன்று விடுதலை உணர்வைப் பெறுகின்றோம்.
  இயேசு கூறும் இந்த பாவ அடிமைத்தனத்தை, யூதர்கள் புற அடிமைத்தனமாகப் புரிந்து கொள்கின்றனர். எனவேதான் நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்கிறார்கள். ஆயினும் அவர்களது அரசியல் வாழ்வில் எகிப்தியர் தொடங்கி, பாலஸ்தீனர்கள், பாரசீகர்கள், கிரோக்கர்கள் போன்றோருக்கும், இறுதியாக இயேசுவின் காலத்தில் உரோமையர்களுக்கும் அடிமைப்பட்டுக் கிடந்ததை மறுக்கிறார்கள். கடவுள் ஒருவரே யூதர்களின் அரசர் என்ற இறையியல் அடிப்படையில் அவர்கள் வேற்று நாட்டு அரசர்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அவர்களது அன்றாட வாழ்வில் அடிமைத்தனத்தின் சுமைகளை அனுபவிக்கத்தான் செய்தார்கள்.
  இந்தச் சூழ்நிலையில் இயேசுவும் அவர்களது பாவ அடிமைத்தனத்தைச் சுட்டிக்காட்டி, மனம் திருந்த விடுக்கும் அழைப்பு அவர்களுக்கு எரிச்சலூட்டியதில் வியப்பில்லைதான். இயேசுவைப் பொறுத்தமட்டில் பாவத்திலிருந்து விடுபடும் அகவிடுதலையே முதன்மையானதாகும். எல்லா மனிதர்களும் அகவிடுதலை அடையும் போது அங்கே அடக்கியாளவும், அடங்கிப்போகவும் யாரும் இருக்கப்போவதில்லை. இதுவே இயேசு காணவிரும்பிய இறையாட்சியின் தத்துவமாகும்.
  இந்தத் தவக்காலம் நமக்கு அளிக்கும் அருமையான வாய்ப்பினைப் பயன்படுத்தி இயேவில் நம்பிக்கை கொள்வோம். பாவ வாழ்வு நம்மில், நம் உறவுகளில் ஏற்படுத்தியிருக்கும் புண்களை, அவரது பரிசுத்த இரத்தத்தால் குணமாக்க முன்வருவோம். புத்துணர்சியோடு புதுவாழ்வைப் பெற்றுக்கொள்வோம். இயேசு என்னும் உண்மை நமக்கு விடுதலை அளிப்பதாக!

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

தவக்காலம் ஐந்தாம் வாரம் செவ்வாய் (4-4-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 8:21-30

21 இயேசு மீண்டும் அவர்களிடம், 'நான் போன பின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்' என்றார்.
22 யூதர்கள், 'நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது' என்று சொல்கிறாரே, ஒருவேளை தற்கொலை செய்து கொள்ளப் போகிறாரோ?' என்று பேசிக்கொண்டார்கள்.
23 இயேசு அவர்களிடம், 'நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்; நான் மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால் நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல.
24 ஆகவேதான் நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள் என்று உங்களிடம் சொன்னேன். ';இருக்கிறவர் நானே' என்பதை நீங்கள் நம்பாவிடில் நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள்' என்றார்.
25 அவர்கள், 'நீர் யார்?' என்று அவரிடம் கேட்டார்கள். அவர், 'நான் யாரென்று தொடக்கத்திலிருந்தே சொல்லி வந்துள்ளேன்.
26 உங்களைப் பற்றிப் பேசுவதற்கும் தீர்ப்பிடுவதற்கும் பல உண்டு. ஆனால் என்னை அனுப்பியவர் உண்மையானவர். நானும் அவரிடமிருந்து கேட்டவற்றையே உலகுக்கு எடுத்துரைக்கிறேன்' என்றார்.
27 தந்தையைப்பற்றியே அவர் பேசினார் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.
28 இயேசு அவர்களிடம், 'நீங்கள் மானிட மகனை உயர்த்திய பின்பு, 'இருக்கிறவர் நானே'; நானாக எதையும் செய்வதில்லை. மாறாகத் தந்தை கற்றுத் தந்ததையே நான் எடுத்துரைக்கிறேன் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
29 என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்' என்றார்.
30 அவர் இவற்றைச் சொன்னபோது பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

சிந்தனை : 

திங்கள், 3 ஏப்ரல், 2017

தவக்காலம் ஐந்தாம் வாரம் திங்கள் (3-4-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 8:1-11

1 இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார்.
2 பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.
3 மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி,
4 'போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள்.
5 இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?' என்று கேட்டனர்.
6 அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள். இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார்.
7 ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, 'உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்' என்று அவர்களிடம் கூறினார்.
8 மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார்.
9 அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.
10 இயேசு நிமிர்ந்து பார்த்து, 'அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?' என்று கேட்டார்.
11 அவர், 'இல்லை, ஐயா' என்றார். இயேசு அவரிடம் 'நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்' என்றார்.

சிந்தனை : 
மேலும் ஒரு நன்கு பரிட்சயமான ஒரு நற்செய்திப் பகுதி. 'விபசாரத்தில் பிடிபட்டப் பெண்' 'உங்களில் குற்றம் இல்லாதவர் இவள் மேல் முதல் கல்லை எறியட்டும்' போன்ற வார்த்தைகள் நவீன ஹேஷ்டேக் போல மிகவும் பரவலாக அறியப்பட்ட விவிலிய வார்த்தைகள். 

விபசாராத்தில் பெண்கள் மட்டுமே பிடிபடுவது இயேசுவின் காலத்திலிருந்தே தொடரும் நிகழ்வாக இருப்பது வியப்பாகத்தான் இருக்கிறது. இன்னும் ஒரு அடி கூட நம் சமூகம் இந்த விஷயத்தில் முன்னேறவில்லை என்பதை நினைக்கும் போது ஆணாதிக்கம் எந்த அளவு சமூகத்தின் தடித்த தோலாக, மரத்துப் போன ஒன்றாகிப்போய்விட்டது என்பதை உணரமுடிகிறது. 

முற்றிலும் நேர்மையான மனிதர்கள் யாருக்கும் எதற்கும் பயப்படப்போவதில்லை. அவதூறுகள், பழிச்சொற்கள் போன்ற எதுவும் அவர்களை எதுவும் செய்துவிடமுடியாது. அவர்களின் நேர்மையின் பரிசாக பல துரோகங்களை, அவமானப் பொறிகளைத் தாண்டியும் அவர்கள் துணிவோடு சமூகத்தை எதிர்கொள்வதற்கும், மக்களை ஈர்ப்பதற்கும் அவர்களது குற்றம் காண முடியாத நேர்மையும், உண்மையுமே காரணமாக இருக்கும். 

இயேசுவை மாட்டிவிடவேண்டும் என்பதொன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஒரு கூட்டம் அவரைப் பின்தொடர்ந்து வந்தனர். அவரது ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் அவரை மாட்டிவிட முடியுமா? என்று கங்கனம் கட்டிச் செயல்பட்டனர். இதற்கு ஒரு சோறு பதம் தான் இன்றைய நற்செய்திப் பகுதி. சில இக்கட்டானச் சூழல்களில் நாம் தவறாக சில வார்தைகளை விட்டுவிடுவோம். அல்லது சில வார்த்தைகளைச் சொல்லாமல் விட்டுவிட்டு பின்பு வருத்தப்படுவோம். 

ஆனால் இயேசு இத்தகையச் சூழல்களுக்கெனத் தனிப்பயிற்சி எடுத்தவர் போல மிகச் சிறப்பாக எதிர்வினையாற்றுவார். அவரிடம் விபசாரத்தில் பிடிபட்டப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்தவர்கள் அவருடன் ஈகோ பிரச்சனை கொண்ட பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும். யூதர்களின் சட்டப்படி விபசாரத்தில் பிடிபட்டப் பெண்ணைக் கொல்ல வேண்டும். ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் யுதர்களை (பாலஸ்தீன, இஸ்ரேல் பகுதி) ஆட்சி செய்தது உரோமையர்கள். உரோமையர்களின் சட்டப்படி ஒரு 'காலனீய' நாட்டினருக்கு மரண தண்டனை வழங்கும் அதிகாரம் கிடையாது. ஆக இயேசு ஒரு 'நேர்மையான' யூதராக, மோசேயின் சட்டத்தை மதிப்பவராக இருந்தால் அப்பெண்ணை கல்லால் எறிந்து கொல்லும் படி கூறியிருப்பார். ஆனால் உரோமையரின் சட்டப்படி மிகப்பெரும் தண்டனைக்குள்ளாகியிருப்பார். அதே நேரம் அவளைக் கொல்லாதீர்கள் என்று கூறியிருந்தால் மோசேயின் சட்டத்தை மதிக்காதவராகி பெரும்பாலான யூதர்களின் அவமதிப்புக்கும், தலைமைச் சங்கத்தின் தீர்ப்புக்கும் ஆளாகியிருப்பார். ஆனால் இயேசு ஆம் என்றும் சொல்லாமல், இல்லை என்றும் சொல்லாமல், ஒரு மூன்றாம் தீர்வினை முன்வைக்கிறார். த பெஸ்ட் என்பது போன்ற ஒரு முடிவு. பாவி மனம் திரும்புவதற்கான ஒரு வாய்ப்பினையும், பரிசேயர்களின் தந்திரப்பொறியியிலிருந்து தப்புவதையும், ஆண்களின் மனசாட்சியை ஒரு நல்ல குண்டூசியால் குத்தி கேள்வி கேட்பதையும் அவரது நிதானமான பதிலால் சாத்தியமாக்குகிறார். 

பொதுவாக நமது சமூகச் சூழலில் நம்மோடு ஈகோ பிரச்சனை கொண்டவர்களது செயல்பாடுகள் நமக்கும், நமது செயல்பாடுகள் அவருக்கும் எந்த காரணமும் இல்லாமலேயே எரிச்சலை வரவைக்கும். இந்த மாதிரி நபர்களிடம் நாம் எளிதாக நமது சமநிலையை இழந்துவிடுவோம். தேவயற்ற பதற்றம் தான் காரணம். ஆனால் இயேசு இத்தகையச் சூழல்களுக்கு ஒரு முதிர்ச்சியான தலைமைப்பண்பு கொண்டவர்கள் எடுக்கும் முடிவாக ஆம், இல்லைகளைக் கடந்த ஒரு மூன்றாம் தீர்வை முன்வைக்கிறார். நம்மைப் பற்றிய காரியங்களில் ஆம் என்றால் ஆம் என்றும், இல்லை என்றால் இல்லை என்றும் கூறக் கற்றுக் கொடுத்த நம் ஆண்டவர் பிறரைக் குறித்தக் காரியங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இப்பகுதியில் தெளிவாகக் காட்டுகிறார்.

ஒரு நாளில் எத்தனை பேரின் மீது நம் வார்த்தைகளால் கல்லெறிகிறோம். அதுவும் அந்த நபர்களின் முதுகிற்குப் பின்னால் மறைந்து நின்றுகொண்டு? கல்லெறிவதை நிறுத்திவிட்டு, தவறியவர்கள் திருந்திவாழ நமது மன்னிப்பையும், ஆதரவையும் தருகின்றோமா? சிந்திப்போம். நல்ல மனிதர்களாக வாழும் கலையை இயேசு ஆண்டவரிடமே கற்றுக் கொள்வோமா??

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

தவக்காலம் ஐந்தாம் வாரம் ஞாயிறு (2-4-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 11:1-45

1பெத்தானியாவில் வாழ்ந்து வந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வூரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்துவந்தனர்.
2 இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத்தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர்.
3 இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, 'ஆண்டவரே, உன் நண்பன் நோயுற்றிருக்கிறான்' என்று தெரிவித்தார்கள்.
4 அவர் இதைக் கேட்டு, 'இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்' என்றார்.
5 மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார்.
6 இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார்.
7 பின்னர் தம் சீடரிடம், 'மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்' என்று கூறினார்.
8 அவருடைய சீடர்கள் அவரிடம், 'ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?' என்று கேட்டார்கள்.
9 இயேசு மறுமொழியாக, 'பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு அல்லவா? பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை; ஏனெனில் பகல் ஒளியில் பார்க்க முடிகிறது.
10 ஆனால் இரவில் நடப்பவர் இடறி விழுவார்; ஏனெனில் அப்போது ஒளி இல்லை' என்றார்.
11 இவ்வாறு கூறியபின், 'நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்' என்றார்.
12 அவருடைய சீடர் அவரிடம், 'ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்' என்றனர்.
13 இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள்.
14 அப்போது இயேசு அவர்களிடம், 'இலாசர் இறந்து விட்டான்' என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு,
15 'நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்; ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள்' என்றார்.
16 திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், 'நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்' என்றார்.
17 இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது.
18 பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் தொலையில் இருந்தது.
19 சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர்.
20 இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்.
21 மார்த்தா இயேசவை நோக்கி, 'ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்.
22 இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்' என்றார்.
23 இயேசு அவரிடம், 'உன் சகோதரன் உயிர்த்தெழுவான்' என்றார்.
24 மார்த்தா அவரிடம் , 'இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்' என்றார்.
25 இயேசு அவரிடம், 'உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.
26 உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?' என்று கேட்டார். 
27 மார்த்தா அவரிடம், 'ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்' என்றார்.
28 இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்; அவரிடம், 'போதகர் வந்து விட்டார்; உன்னை அழைக்கிறார்' என்று காதோடு காதாய்ச் சொன்னார்.
29 இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார்.
30 இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை. மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார்.
31 வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள்.
32 இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, 'ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்' என்றார்.
33 மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி,
34 'அவனை எங்கே வைத்தீர்கள்?' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், 'ஆண்டவரே, வந்து பாரும்' என்றார்கள்.
35 அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்.
36 அதைக் கண்ட யூதர்கள், 'பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!' என்று பேசிக் கொண்டார்கள்.
37 ஆனால் அவர்களுள் சிலர், 'பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?' என்று கேட்டனர்.
38 இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது.
39 'கல்லை அகற்றி விடுங்கள்' என்றார் இயேசு. இறந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், 'ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!' என்றார்.
40 இயேசு அவரிடம், 'நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?' என்று கேட்டார்.
41 அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, 'தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.
42 நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்' என்று கூறினார்.
43 இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், 'இலாசரே, வெளியே வா' என்று கூப்பிட்டார்.
44 இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. 'கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்' என்று இயேசு அவர்களிடம் கூறினார்.
45 மரியாவிடம் வந்திருந்த யூதர் இயேசு செய்வதைக் கண்டு அவரை நம்பினர்.

சிந்தனை :