புதன், 10 ஆகஸ்ட், 2011

'நாம் தமிழர்' (What a Foolishness)

பாண்டி, பட்டி,
தோணி, சேரி, மதராசி
பாரெங்கும் பாருங்கள்
தமிழனுக்கு எத்தனைப் பெயர்கள்
திராவிடம் என்னும்
இல்லாதப் போர்வையில்
இங்கு மட்டும்
எல்லோரும் தமிழன்!
கன்னடன், தெலுங்கன்,
மலைவிழுங்கும் மலையாளி,
வந்தேறி, மார்வாடி, குஜராத்தி
யார் சொன்னது மடையன்களே!
'நாம் தமிழர்'

தனித்தமிழ் நாடு (Ashamed tobe a bloody Indian)

நெஞ்சைப் பதைக்கிறது
பிரெஞ்சு தெருக்களில்
சீக்கியனுக்குத் தடை தொப்பி போட!
மூக்கு வியர்த்து
வெறிகொண்டு எழுந்து
சிங்கமுகம் கொண்டு கர்ஜித்து
கண்டித்தான் சிங் என்னும் ஒருவன்

வாயில் பிள்ளைகளைப் போட்டு
கடவாய்ப் பற்களுக்கிடையில்
நசுங்கிய இள இரத்தம் குடித்து
வெறியடங்கா அரக்கனுக்கு
என்ன பொருத்தம்!
சிவப்பு கம்பள வரவேற்பு

தன் தசை எரிவதை
தானேப் பார்க்கும்
பேறுபெற்ற எம் தமிழினம்
'அய்யோ! அம்மா!'
என்று அலறியக் குரலுக்குப்
பாராமுகமாய் இருந்த
உங்கள் இனம் அழியும்!

அமேதியில்
அமைதி ஊர்வலம்
வெள்ளை உடையில் குள்ளநரிகள்!
ஏழை நண்பர்களே!
இனியும் நம்ப வேண்டாம்
உங்கள் தட்டில்
கைவைத்து உண்ணும் போது
சற்றே உற்றுப்பாருங்கள்
தமிழனைக் குதறிய
இரத்தக் கறை இருக்கும்

காவியை கைவிட்ட நீங்கள்
வெள்ளையை எரிக்க வேண்டும்
எங்களை நாங்களே பாதுகாப்போம்
பிரித்துக் கொடு ஒரு தனித்தமிழ் நாடு

சேர்ந்து தேடுவோம் (come on Seeking)

மேற்கு குமரியில்
மூழ்கும் பரிதியில்
காட்சி கண்டேன்
நான் இளைஞன்!
தமஸ்கு சாலையில்
ஒளியடித்து விழுந்த
இளமுனி பவுலாக
இருண்டு போனதென் கண்கள்!

வழக்கு மன்றக் கூண்டில்
கொடிகள் பின்னிய
மரமாய் நான் எதிரே கடவுளைக் கண்டேன்
அவள் கருப்பாயிருந்தாள்
'தாயே! தாயே!'

வினா :
சேவலைப் பற்றி என்னத் தெரியும்?

விடை :
சிவந்த கொண்டை
நீண்ட வால், மினுக்கும் மேனி
ஊர் திருவிழாவில் கறியோ சுவை!
நான் இளைஞன்

வினா :
பரிதி எழும் முன் எழும்
தொண்டை கீற கூவி எழுப்பும்
சிறகை அடித்து உயிரைக் கூட்டும்
கிடைப்பது பற்றிய பதற்றமின்றி
தொடர்ந்து தேடும்
தீமைக்கு அஞ்சி ஓடும்
நேரத்தில் வீடு தேடி அடையும்
இது பற்றி அறிவாயோ?

விடை :
நான்காம் வரியைக் காட்டி
'நான் இளைஞன்' என்றேன்
உன் கால்களை நீயே கட்டி விட்டாய்
பரிணாமத்தில் உச்சியில்
பரிதாபமாய் நீ!
ரசித்ததும், ருசித்ததும்
போதும்! நிறுத்து...
வெளிறிக்கிடக்குமம்
உன்னைத் தூசி தட்டு
தோல் கொஞ்சம் உறைக்கட்டும்
தோல்வியைத் தாங்க
தோளுக்கு வலு சேர்
திருந்த செயல் செய்து
சேவலாய் மாறு
வெற்றி உன் வாசல் படியில்...'

இப்பொழுது நான்
விழித்து விட்டேன்
உச்சி சேரும் வரை
உறக்கம் இனி இல்லை!
வா! நண்பா!
நீயும் வா!
சேர்ந்து தேடுவோம்
தனித்தனியே கண்டுபிடிப்போம்!