புதன், 10 ஆகஸ்ட், 2011

தனித்தமிழ் நாடு (Ashamed tobe a bloody Indian)

நெஞ்சைப் பதைக்கிறது
பிரெஞ்சு தெருக்களில்
சீக்கியனுக்குத் தடை தொப்பி போட!
மூக்கு வியர்த்து
வெறிகொண்டு எழுந்து
சிங்கமுகம் கொண்டு கர்ஜித்து
கண்டித்தான் சிங் என்னும் ஒருவன்

வாயில் பிள்ளைகளைப் போட்டு
கடவாய்ப் பற்களுக்கிடையில்
நசுங்கிய இள இரத்தம் குடித்து
வெறியடங்கா அரக்கனுக்கு
என்ன பொருத்தம்!
சிவப்பு கம்பள வரவேற்பு

தன் தசை எரிவதை
தானேப் பார்க்கும்
பேறுபெற்ற எம் தமிழினம்
'அய்யோ! அம்மா!'
என்று அலறியக் குரலுக்குப்
பாராமுகமாய் இருந்த
உங்கள் இனம் அழியும்!

அமேதியில்
அமைதி ஊர்வலம்
வெள்ளை உடையில் குள்ளநரிகள்!
ஏழை நண்பர்களே!
இனியும் நம்ப வேண்டாம்
உங்கள் தட்டில்
கைவைத்து உண்ணும் போது
சற்றே உற்றுப்பாருங்கள்
தமிழனைக் குதறிய
இரத்தக் கறை இருக்கும்

காவியை கைவிட்ட நீங்கள்
வெள்ளையை எரிக்க வேண்டும்
எங்களை நாங்களே பாதுகாப்போம்
பிரித்துக் கொடு ஒரு தனித்தமிழ் நாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக