வியாழன், 18 நவம்பர், 2010

நான் விரும்பும் தலைவர் காந்தியடிகள் (My Favourite Leader Gandiji: in the Christian Ethical point of view)


கிறிஸ்தவ அறநெறியியல் புரிதலில்

மகாத்மா காந்தியடிகள் ஒரு பார்வை

முன்னுரை 

'காந்தி சுட்டுக்கொலை என்ற இனிப்பானக செய்தியைக் கேட்க தயாராக இருங்கள் என்று தகவல் போயிருந்தது. பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அமர்ந்து செய்திக்கா காத்திருந்தனர். செ;ய்தி வந்தவுடன் டெல்லி உட்பட பல இடங்களில் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்' . தங்களது பதவிக்கும், பிழைப்புக்கும், ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காக ஒருவன் பலியிடப்படுவதில் தவறில்லை என்றக் கொள்கை கொண்ட ஒரு இந்திய இந்துத்துவக் குழு காந்தியைக் கொன்றது. 'பிறரை காப்பாற்றி இவன் தன்னையேக் காப்பாற்றிக் கொள்ள இயலவில்லை' என்ற மாற்கு  16:32 வது இறைவார்த்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசு கிறிஸ்தவுக்கு கிடைத்த சிலுவைக் கொலையை நினைவுபடுத்துகின்றது. இதுவும் பிழைப்புக்காக, பதவிக்காக ஓர் யூதக் குழவினரால் நடத்தப்பட்டு படுகொலை.

அன்பு, அஹிம்சை, என்னும் இரண்டும் ஒன்றையொன்ற பிரிக்க இயலாத ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் பேன்றதாகும். எனவேதான் இவற்றை முன்மொழிந்து வாழ்ந்தவரகள் இருவருமே கொல்லப்பட்டார்கள். அறிவியல் முன்னேற்றத்தால் சிலுவை என்னும் ஆயதம் துப்பாக்கியாக மாறிவிட்டது.
இக்கட்டுரையானது காந்தியடிகளிடம் இருந்த அசைக்க முடியாக மாபெரும் இயக்க சக்தியான அறவாழ்விற்கு, அடிப்படையாக இருந்த தனிமனித அனுபவங்கள், சமூக செயல்பாடுகள் போன்றவற்றை முதல் பகுதியிலும், இவ்வனுபவங்களை அவர் ஆய்வு செய்து அஹிம்சை, கல்வி, விடுதலை போன்ற ஆக்கப்பூர்வமான கருவிகளால் செயல் படுத்தியது பற்றி இரண்டாம் பகுதியிலும், அந்த அறத்திற்காக அவர் அனுபவித்த நவீன சிலுவைப்பாதையை இறையிலாக்கப் பார்வையில் மூன்றாம் பகுதியிலும், நமது புரிதல்கள், ஈடுபாடுகளைப் பற்றி நான்காம் பகுதியிலும் காணலாம்.

1. காந்தி என்னும் வழக்கறிஞர்
1.1. குழந்தைப் பருவம்


காந்தியடிகள் குஜராத்திலுள்ள போர்பந்தரில் 1869 அக்டோபர் இரண்டாம் நாள் கரம்சந்த் காந்தி, புத்திலிபாய் என்னும் வைசியக் குலப் பெற்றோருக்கு கடைசி பிள்ளையாகப் பிறந்தார். இவரகளின் குல மரபுப்படி, காந்தியடிகள் தனது 13வது வயதிலேயே கஸ்தூரி பாய் என்னும் சிறுமியை மணக்க நேரிட்டது. 'அப்படிப்பட்ட அக்கிரமமான குழந்தைக் கல்யாணம் சரியென்று கூறுவதற்கு ஒழுக்கரீதியான வாதம் ஏதும் இருப்பதாக நான் காணவில்லை' . என்று காந்தியடிகள் தனது சுயசரிதையில் குறிப்பிடுகின்றார்.

1.2. சிறுவயதில் அறம்

காந்தியடிகளின் குல வழக்கப்படி மாமிசம் உண்பது மிகவும் கடுமையான வெறுக்கத்தக்க பாவமாகக் கருதப்பட்டது. ஆனால் மாமிசம் உண்டால் நோய் வராது. அதிக பலம் கிடைக்கும்;ளூ வெள்ளையனை விரட்டலாம் என்பது போன்ற நண்பர்களின் மூளைச்சலவையினால் பெற்றோருக்குத் தெரியாமல் சில வேளைகளில் காந்தியடிகள் மாமிசம் உண்ண நேரிட்டது. ஆனால் வெகு சில நாடளிலேயே. 'பெற்றோரிடம் பொய் சொல்லக்கூடாது என்ற எனது புனித ஆசையின் காரணமாகவே நான் மாமிசம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன்'  என்று பின்னாளில் தனது சுயசரிதையில் குறிப்பிடகின்றார். இது போன்ற ஏராள நிகழ்வுகள் உண்மை, நீதி, அஹிம்சை, மனசாட்சிக்கு குரல் கொடுத்தல் போன்ற அறச்செயல்கள், சிறுவயதிலேயே அவரிடம் வேரூன்றி இருந்ததை எடுத்துக்காட்டுகின்றன.

1.3. இங்கிலாந்தில்
 
1897ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் நாள் சட்டம் பயின்று பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக இங்கிலாந்திற்கு பயணமானார். இஙற்கையிலேயே கூச்ச சுபாவம் கொண்டவராககையால் வீண் பேச்சுக்களிலும், ஆடம்பரங்களிலும் அக்கறை செலுத்தாமல் கடமைகளை மிகுந்த பொறுப்புடன் செய்தார்.

1.3.1. ஆன்மீகம் என்னும் அறம்

மதங்கள் மனிதனின் இயற்கையான இறைத்தேடலுக்கு உதவும் ஒரு கருவியே ஆகும். ஆனால் ஒரு முழமையான இறைத்தேடல் என்பது எந்த ஒரு மதத்திற்குள்ளும் அடங்கி விடாது. மாறாக மதங்களைக் கடந்த இறையன்பும், மனித மாண்புமே உண்மையான ஆன்மீகம் என்னும் அறமாகும். காந்தியடிகளின் பின்வரும் கூற்றுக்கள் அவரது ஆன்மீக அறத்தின் முதிஷர்ச்சியைக் காட்டுகின்றன.
'ஆன்மீகக் கட்டுத்திட்டங்களில் மௌனமும் ஒரு பகுதி என்பகை அனுபவம் எனக்கு போதித்திருக்கின்றது..
கீதை, ஆசிய ஜோதி, மலைப்பிரசங்கம்(மத்5:17) ஆகிய மூன்றும் ஒன்றே என்று கருத என் இளமனம் முயன்றது..
கன்னி மரியின் சிலை முன்பு மண்டியிட்டு தொழும் ஒருவனைக் கடந்து சென்றதுமே அவன் கண்ணியமாகவும், பக்தியோடும் நடந்து கொண்டு விடுவான்..
இவை வெறும் மூட நம்பிக்கையாக இருக்க முடியாது...'

1.3.2. வழக்கறிஞராக..

தேர்வுகளில் சிறப்பாக வெற்றி பெற்று 1891 ஜுன் மாதம் 10ஆம் தேதி பாரிஸ்டர் பட்டம் பெற்றார். 'பாரிஸ்டர் ஆகிவிடுவது எளிதாகவே இருந்தது. ஆனால் பாரிஸ்டர் தொழிலை நடத்துவதுதான் மிகக் கஷ்டமாக இருந்தது' என்று பணிவோடு கூறுகின்றார். 'பாரிஸ்டர் தொழில் தெகாஞ்சம் அறிவம், அதிக ஆடம்பரமும் உடைய மோசமானத் தொழில்'  என்று புரிந்து கொண்ட அடுத்தக் கணமே தனக்கு இருந்த பொறுப்பை எண்ணி பெரிதும் கவலையடைந்தார்.

1.4. ஆப்ரிக்காவில்..

மேமன் என்னும் வியாபார நிறுவனத்திற்கு ஆதரவாக வாதாட, 105 பவுன் ஊதியத்திற்கு பணியாற்றும் சாதாரண ஊழியராக 1893 ஏப்ரலில் தென் ஆப்பிரக்காவிற்கு பயணமானார்.

1.4.1. அறச்சோதனை

ஜான்சி பார் என்னும்   துறைமுகத்தில் கப்பல் எட்டு நாட்கள் தங்க வேண்டியிருந்தது. கப்பல் கேப்டன் இவரிடம் மிகவும் அன்போடு பேசி வெளியே அழைத்துச்சென்றார். அங்கே ஒரு நீக்ரோ பெண்ணின் வீட்டிற்கு சென்று, ஓர் தனி அறைக்குள் அனுப்பபட்டார். அது ஒரு விபசார விடுதி என்பது தெரிய வந்ததும் மிகவும் அவமானத்தோடு வெளியேறினார். இந்நிகழ்வினைக் குறித்து தன் சுயசரிதையில் 'அப்பெண்ணைப் பார்த்ததும் என் புத்தி தடுமாறிவிடாமல் இருந்ததைக் குறித்து கடவுளுக்கு நன்றி செலுத்தினேன்' என்றும் 'அறைக்குள் போக மறுத்துவிடும் துணிச்சல் எனக்கு இல்லலாது போனது குறிது;து எனக்கு நானே பரிதாபப்பட்டுக் கொண்டேன்'  என்றும் குறிப்பிடுகின்றார்.

1.4.2. அறவாழ்வின் துவக்கம்  
 
காந்தியடிகளின் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தை, அதாவது தனிமனித மாண்பிலிருந்து சமூக மாண்பைக் கட்டிக்காப்பதற்கான அழைத்தலைத் துவக்கி வைத்த நிகழ்வு தென்ஆப்பிரக்க ரயில் பயண நிகழ்வே ஆகும். இது பற்றி அவரது வரிகளிலேயேக் காண்போம்.

'நான் கருப்பு மனிதன் என்பகைப் பார்தததும் அவருக்கு ஆத்திரம் வந்தது..இப்படி வாரும்.. நீர் சாமான்கள் வண்டிக்கு போக வேண்டும் என்றார்.. என்னிடம் முதல் வகுப்புச்சீட்டு இருக்கிறதேளூ இதில்தான் நான் பிரயாணம் செய்வேன்.. நானாக இவ்வண்டியிலிருந்து இறங்க மறுக்கிறேன் என்றேன். போலீஸ்காரர் வந்தார்..கைபிடித்து இழுத்து என்னை வெளியே தள்ளினார்'
இந்த வலியில் முளைத்த வீரட்சமே அவரை விடுதலை உணர்வுக்கான மாபெரும் இயக்கச் சக்தியாக உருவாக்கியுள்ளது.

2. விடுதலைப் போராளி காந்தியடிகள்
2.1. நேட்டால் இந்தியர் காங்கிரஸ்

  தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் இந்தியர்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்டகப்படுவது கண்டு மிகவும் வேதனையுற்றார்.  அவர்களுக்காக குரல் கொடுக்க ஒரு இயக்கமிருப்பது அதிக பயன் தரும் எனக் கண்;டார். அங்குள்ள இந்திய வியாபாரிகளை ஒன்று சேர்த்து 'நேட்டால் இந்தியர் காங்கிரஸ்' என்னும் அமைப்பினை 1893 மே 22 இல் உருவாக்கினார்.

2.2. சேவை என்னும் மதம்

'அவர் தன்னுடைய எஜமானால் கடுமையாக அடிக்கப்பட்டிருந்தார். என் குமாஸ்தா ஒரு தமிழர்ளூ அவர் மூலம் எல்லா விவரங்களையும் கேட்டுத் தெரிந்துக் கொண்டேன். வந்தவரின் பெயர் பாலசுந்தரம்ளூ டர்பனில் குடியிருக்கும் ஓர் பிரபலமான ஐரொப்பியரின் கீழ் ஒப்பதந்த தொழழிலாளியாக வேலை செய்து வந்தார்.  இதைக் கேட்டக் காந்தியடிகள் மிகவும் வருத்தமடைந்தார். இதுவே பின்னர் ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழப்பதற்கும் வரக்ள வாழ்வின் உரிமைகளை மீண்டும் பெறுவதற்கும் காந்தியடிகளை போராடத் தூண்டியது. 'சேவையை என்னுடைய மதம் ஆக்கிக்கொண்டேன். அதுவும் இந்தியாவுக்கு செய்யும் சேவையே'  என்று பின்னாளில் குறிப்பிடுகின்றார்.

2.3. கல்வி விடுதலை

'இந்திய இளைஞர்களை அவர்களின் அடிமைத்தனத்தின் கோட்டைகளிலிருந்து அதாவது அவருடைய பள்ளிககூடங்களிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும் வெளியேறி விடுமாறு 1920இல் நான் அழைத்தேன்'  என்று குறிப்பிடுகின்றார். மேலும் இன்று பெரிதாகப்பேசப்படும் தாய் மொழிவழிக் கல்வியைக் குறித்துப் பின்வருமாறு கூறுகின்றார. 'ஆங்கிலத்திலேயே சிந்தித்து, ஆங்கிலத்திலேயே பேசுமாறு தங்கள் குழந்தைகளுக்கு பயிற்சியளித்தும், இந்தியப் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கும், நாட்டுக்கும் துரோகம் செய்தவர்கள் ஆவார்கள் என்பது எனது எண்ணம்'.

3. காந்தியடிகளின் நவீன சிலுவைப்பாதை- இறையியலாக்கம்
3.1. சிறுபான்மையினத்தின் ஆதரவாளனாய்

இந்துத்துவாவின்'ஒரு நாடுளூ ஒருமதம்' என்னும் கொள்கையை காந்தி கடுமையாக எதிர்த்தார். 'இந்தி தேசியம் என்பது முஸ்லீம்களையும் உள்ளக்கியதே என்ற காந்தியின் ஆணித்தரமான நம்பிக்கையே அவர் மீது இவர்கள் வெறுப்பை உமிழ உண்மையான காரணமாகும்.'  மேலும் கொல்லப்படுவதற்கு பதிநான்கு நாட்களுக்கு முன்னதாக  'பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமே இந்தியா உரியது என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமையில்லை'  என்று காந்தி முழங்கினார். இயேசு கிறிஸ்துவும் சிறுபான்மையினத்தின் விடுதலைக்காக (லூக் 4:18-19, யோவான்2:14-16) குரல் கொடு;ப்பதை நற்செய்தி முழுக்க காண முடிகிறது. பெண்களுக்கு உரிய மாண்பினை மதிப்பவராகவும் (மாற் 5:21-43) ஏழைகளை ஆதரித்து அன்பு செய்பவராகவும் (லூக்7:1-17, மாற் 12:44) பாவிகளை தன் நண்பர்களாக ஏற்றுக்கொள்வதையும் (மாற்2:16) இயேசுவின் வாழ்வில் நாம் காண்கிறோம்.

3.2. பார்ப்பனியத்திற்கு எதிராக

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தை சேர்ந்த ஒரு தூதுக்குழு காந்தியடிகளிடம் வந்து தாங்கள் ஏற்கனவே கொடுத்திருந்த புகாரினைப் பற்றி விசாரித்தனர். அதற்கு காந்தியடிகள் ' நீங்கள் உங்கள் பங்கிற்கு மேலேயே அனுபவிக்கிறீர்கள். உங்கள் புகாரில் நியாயமில்லை. உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் தர்மத்தைப் பற்றித்தானே பேசுகிறீர்கள். உங்கள் வேதம் ஓதுவதுதானே'  என்று கோபத்தோடு கேட்க 'அவர் விழித்துக்கொண்டார் என்பதைத் தெரிந்துக் கொண்டவுடன் இனிமேல் காந்தியை விட்டுவைக்கக் கூடாது என்று பார்ப்பனர்கள் முடிவு செய்து விட்டார்கள் என்பது பெரியார் அன்றைக்கே எழுதியக் கருத்தாகும்.  இயேசுவும் பரிசேயர்கள் வேதம் போதிப்பதாகக் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி பிழைப்பதைப் பார்த்து 'வெள்ளையடிகெ;கப்பட்ட கல்லறைகளே! விரியன் பாம்புக் குட்டிகளே!'(மத் 23:33) என்று சாடுகின்றார். இருவருக்கும் கிடைத்தப் பரிசு கொலைத்தண்டனை.

3.3. நவீன சிலுவைப்பாதை

காந்தியடிகள் கொல்லப்பட்டதற்காக நீங்கள் வருந்தியதுண்டா? என்று அவரை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சேயிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் 'இல்லை! இந்தியாவின் பிரிவினை என்பது எனது சவத்தின மீது தான் நடக்கும்;' என்று காந்தி சொன்னார்;. ஆனால் தேசப்பிரிவினை நடந்து விட்ட பிறகும் அவர் உயிருடன் தான் இருந்தார். எனவே நாங்கள் அவரை சாகடித்தோம்.. காந்தி முஸலீம்களை திருப்தி படுத்தவே ஆர்வம் காட்டினார். அதனால் தான் அவரைக் கொலை செய்தோம்'  என்று பதிலளித்தான். ஆம் 1948 ஜனவரி 30ம் நாள் காந்தி பிரார்த்தனை மேடையை நோக்கி நடந்து வந்துகொண்டிருக்கும் போது நாதுராம் கோட்சே என்னும் பார்ப்பனிய இந்துத்துவ பிரதிநிதியால் சட்டுக்கொள்ளப்பட்டார். அவன் தூக்கிலிடப்பட்ட நாளை இன்றும் ஆர்.எஸ்.எஸ் வீரவணக்க நாளாகக் கொண்டாடிக்கொண்டி வருகிறது. அவனது அஸ்தி இன்றும் பாதுகாக்கப்படுகிறது.

ஆனால் கடந்த முறை பா.ஜ.க ஆட்சியிலிருக்கும் போது தியாகிகளின் தினம் கொண்டாடப்பட்டது. தியாகிகள் அனைவரையும் பற்றிப் பேசினார்கள். ஒரேயொருவரைப் பற்றி மட்டும் பேச மறந்துவிட்டார்கள். அவர்தான் காந்தியடிகள். காந்தியார் உயிரோடிருக்கம் போது மட்டுமல்லளூ அவரை வரலாற்றிலும் கொல்ல வேண்டும் என்ற வன்மம் படைத்தவர்கள் அவர்கள்.
'நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்'(மத்5:10) என்ற இயேசுவின்வரிகள் அறத்திற்காக ஒருவர் செலுத்த வேண்டிய விலையை நமக்கு காட்டுகிறது. அறத்தை பார்ப்பனியர்களைப் போல பரிசேயர்களைப் போல் பேசியதோடு நில்லாமல் வாழ்ந்துகாட்டியதால் சிலுவையில் மாண்டார் இயேசு: தோட்டாவிற்கு இரையானார் காந்தி. சாவுக்கு அஞ்சாது அறத்திற்காய் வாழ நீ தயாரா? என்பதுதான் இயேசுவும், காந்தியும் நமக்கு எழுப்பும் வினா?

4. நமது ஈடுபாடுகள்

'வள்ளுவர் ஒரு சாவி தந்தார் 'அறம்'. நபிகள் ஒரு சாவி தந்தார் 'சகோதரத்துவம்'. சங்கரர்  ஒரு சாவி தந்தார் 'அத்வைதம்'. கார்ல்மார்க்ஸ  ஒரு சாவி தந்தார் 'பொதுவுடமை'. அண்ணல் காந்தியடிகள்  ஒரு சாவி தந்தார் 'அஹிம்சை'. தந்தை பெரியார் ஒரு சாவி தந்தார் 'பகுத்தறிவு'. சும்மாயிருக்குமா சுயநலம்? ஈயம், பித்தளைக்கு எல்லா சாவிகளையும் விற்றுவிட்டது' 
என்பது கவிஞர் வைரமுத்துவின் எதார்த்தக் கவிதை. ஆம் அண்ணல் காந்தியின் அஹிம்சைக் கொள்கையை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பதே இன்றைய மிகப்பெரியக் கேள்விக்குறி. அப்படி குறைந்தபட்சம் இந்தியர்களாகிய நாம் ஏற்றுமக்கொண்ணட வாழ்வாக்கியிருந்தால், அரசுப் பணமானது இராணுவத்திற்கும், லஞ்ச ஒழிப்புத்துறைக்கும், கிரிமினல் வக்கீல்களுக்கும் செலிவிட தேவையில்லாததால் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக சரிவிகிதத்தில் பங்கிடப்பட்டு நம் நாடு உண்மையாகவே ஒளிர்ந்திருக்கும். நமது தனிப்பட்ட வாழ்வில் உண்மை, நீதி, பொதுநலனில் அக்கறை போன்ற காந்திய அறச்சிந்தனைகளை மீட்டெடுப்பதன் மூலமே இன்றைய சூழ்நிலையில் ஓர் ஏற்றத்தாழ்வுகளற்ற புதிய சமுதாயம் சாத்தியப்படும் என்பது வெட்ட வெளிச்சம். 'அவர் அப்படி, இவர் இப்படி' என்று பொழுதைப் போக்காமல் நான் எப்படி என்ற வினாவினை எழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம். அறத்திற்காக இன்னொரு அடி எடுத்து வைக்க நான் முன்வருகின்றேனா என்பதே சிலுவையில் அறையப்பட்ட இயேசுவும், துப்பாக்கியால் சுடப்பட்ட காந்தியடிகளும் நம் முன்வைக்கும் கேள்வி.

முடிவுரை

'பெருங்கொலை பழியாம் போர்வழி யிகழ்ந்தாய் அதனிலுந்திறன் பெரிதுடைத்தாம்  
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள் அறவழி யென்றுநீ யறிந்தாய் 

நெருங்கிய பயன்சேர் ஒத்துழையாமை  நெறியினால் இந்தியா விற்கு 
வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து வையகம் வாழ்க நல்லறத்தே'


என்று பாரதியார் காந்தியடிகளைப் புகழ்ந்து பாடியுள்ளார். பகைத்தொழில் மறைந்து புத்துலகம் படைக்க காந்தியக் கொள்கைகள் செயல் வடிவம் வெற வேண்டும் என்பதே பாரதியின் பணிவான வேண்டுகோள்.
இக்கட்டுரையாக்கம் காந்தியடிகளைப் பற்றிய ஒரு முழமையான புரிதலுக்கு என்னை இழுத்துச்சென்றது. அவரது வாழ்வு தொடக்கம் முதல் இறுதி வரை அறநெறி உணர்வோடு ஒன்றித்திருந்தது. தான் எந்த நிலையில் இருந்தாலும் முதலில் ஒரு அறநெறியாளர் என்ற எண்ணம் அவரை விட்டு ஒருபோதும் அகலவேயில்லை. அவர் சட்டத்தை சட்டத்திற்காகவோ அல்லது கடமைக்காகவோ கடைபிடிக்க வில்லைளூ மாறாக சட்டங்களைத் தனது கொள்கைகளாக மாற்றி அக்கொள்கைகளுக்காக உயிர் துறக்கவும் தயாராக இருந்தார். அவரது கொள்கைகள் விடுதலை சமத்துவம் சகோதரத்துவம் என்னும் உயரிய எதிர்நோக்கினைக் கொண்டிருந்தன. இப்பண்புகளே அவரை மக்களை ஒன்று  கூட்டிய ஒரு மாபெரும் தலைவராக அடையாளம் காட்டுகின்றன. இக்கட்டுரையாக்கம் எனது அறநெறி எந்நிலையில் உள்ளது எனச் சோதிக்கவும் அவற்றைக் கொள்கையாக்கி காந்தியடிகளைப் போல எந்நிலையிலும் நெறி பிறழா வாழ்க்கை வாழ பெருமளவுத் தூண்டியது என்பது உண்மை.
                  'பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த காந்தி
                  நீ வாழ்க நீ வாழ்க '     -பாரதியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக