வியாழன், 27 ஜனவரி, 2011

இளைய மீசைகள் அதிரட்டும் (youth vibration)

                   இளைய மீசைகள் அதிரட்டும்             
                   மீண்டும் ஒன்றாய் சேர்ந்தோம்
                   என்றப் பெருமை பொங்கிட
                   இளைய மீசைகள் அதிரட்டும்
                   இளைஞனே எழுந்து நில் ஒளி வீசு

ஆற்றல் மிக்க இளைய நண்பர்களுக்கு செயலரின் அன்பு வணக்கம்!
              
           வாள் கிழித்த நீர் எவ்வளவு நேரம் தான் பிரிந்திருக்கும்?
           கடந்த கூட்டம் நடந்த நேரம் 28-11-10, காலை 8.15 மணி

படை கண்டு தொடை நடுங்கும் கோழையல்ல
முன்நின்று வழிநடத்தும் நல்ல தலைவராக அருட்சகோ. அமுதராஜ் அமர்வினை நெறிப்படுத்தினார்.
பாலஸ்தீனத் தெருக்களிலும்ஸ
சத்திரங்களிலும், சாவடிகளிலும் ஏன் இல்லங்களிலும் கூட இடம் கிடைக்காது போன பாலன் இயேசுவுக்கு
இன்று உலகின் அத்தனை இதயங்களிலும் இடம் உண்டு
நம் பங்கிலும் அந்த மாபெறும் இமளைஞருக்கு குடில் அமைப்பது குறித்து விவாதித்தோம்.

நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே
நீ நாட்டிற்கு என்ன செய்தாய் என்று கேள்
என்னும் ஜான் கென்னடியின் பொன் வாக்கிற்கிணங்க பங்கிற்கு நம்முடைய பங்களிப்பு என்ன என்று ஆராய்ந்தோம். இருவரேனும் பங்குப் பேரவைக் கூட்டத்திற்கு செலர்வது என்று முடிவு செய்தோம்.

      விழாக்கள் தான் இன்றும்
      மனித உறவுகளும், மகிழ்ச்சியும்
     விழாமல் பாரத்துக்கொள்கின்றன.
கிறிஸ்துமஸ் விழாவினை எவ்வாறு கொண்டாடலாம் என்று விவாதிக்கும் பொழுது புதுமையை விரும்பும் இளைஞர்களின் புரட்சிக் கருத்துக்களில் மாற்றத்திற்கான வெளிச்சம் தெரிந்தது.

தானாகத் தோன்றியது உலகம் என்றால்
பூக்களுக்கு பூமியில் என் வேலை?
சோறும், மனிதனும் மட்டும்தான் உலகம் என்றால்
ஏற்றுக்கொள்கிறேன் நான்
கடவுள் இல்லையென்று!


அழகும், ஞானமும் கொண்ட அன்புக் கடவுளுக்கு நன்றி கூறி கூட்டம் இனிதே நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக