ஞாயிறு, 12 மார்ச், 2017

தவக்காலம் இரண்டாம் வாரம் திங்கள் (13-3-2017)

இன்றைய நற்செய்தி : லூக்கா 6:36-38

36 உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.

37 'பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.

38 கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும். '

சிந்தனை : 
இயேசு ஆண்டவர் இன்றைய நற்செய்தி வழியாகக் கூறும் செய்திகள் மிகத் தெளிவாக உள்ளன. அவற்றிற்கு யாரும் விளக்கம் அளிக்கத் தேவையில்லை. வாழ்வின் வழியாக வாழ்ந்து காட்டவே நமக்கு அழைப்பு விடுக்கின்றன. மன்னியுங்கள் மன்னிப்பு பெறுவீர்கள். கொடுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்படும். அறிவியல் வகுப்பில் சொல்லிக்கொடுப்பதைப் புரிந்து கொள்ளச் சிரமப்படும் மாணவன், செயல்முறை வகுப்பில் எளிதாக விளங்கிக்கொள்வதைப் பார்த்திருக்கிறோம். இயேசுவின் வார்த்தைகளும் செயல்படுத்திப்பார்க்கும் போதுதான் உண்மையிலேயே நாம் விளங்கிக் கொள்ள முடியும்..... அதன் முழுப்பயனையும் அடையமுடியும். இன்றே முயற்சிக்கலாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக