வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

தேசபற்று என்பது என்ன?

1. முதலில் தேசப்பற்று என்பது எவையெல்லாம் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
   1.1. தேசப்பற்று என்பது தேசப்பற்று தேசப்பற்று என்று பொது வழியில் சொல்லிக் கொண்டிருப்பது அல்ல. 
   1.2. நான் அல்லது நான் சார்ந்திருக்கும் மதமோ, இனமோ, குழுவோ மட்டும்தான் தேசப்பற்று உள்ளவர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பதும் அல்ல.
   1.3. தேசத்தில் இருக்கும் இருக்கும் எல்லோரும் நான் விரும்புவது போலவே தங்கள் தேசப்பற்றை எப்போதும் நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புவது அல்லது வற்புறுத்துவது அல்ல.

2. தேசபக்தி என்பது நான் என்னை அன்பு செய்து, ஆரோக்கியமாக என் உடலையும், மனதையும், அறிவையும் பேணுவதில் இருந்து தொடங்குகிறது.
3. என் அன்றாட கடமைகளை சிறப்பாக செய்வது. என் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வது. 

4. இந்த தேசத்தில் இருக்கும் எல்லா சமூகங்களையும் ஒன்றுபோல கருதி அவர்களின் தனித்துவத்தை மதித்து தேசத்தின் பன்முக தன்மையை பாதுகாப்பதோடு, அதற்கு ஏதேனும் வழியில் அச்சுறுத்தல் ஏற்படின் தன் எதிர்ப்பு குரலைத் துணிச்சலாக வெளிப்படுத்துவது. ஒரு பூங்காவில் இருக்கும் எல்லா செடிகளும் ஒரே வண்ணத்தில் பூத்து, ஒரே நறுமணத்தை வீச வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவின்மை என்று உணர்ந்து பன்மை தன்மையை கொண்டாடுவது.

5. தன் வீட்டைப் போலவே பொது இடங்களையும் சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருப்பது. 
   5.1. கழிப்பிடங்களைத் தவிர வேறு எங்கும் மலஜலம் கழிக்காமல் இருப்பது, ஆங்காங்கே எச்சில் துப்பாமல் இருப்பது, கண்ட இடங்களில் கழிவுகளைக் கொட்டாமல் இருப்பது, பொதுச் சுவர்களில் கிறுக்காமல் இருப்பது, சாலை விதிகளை மதிப்பது, பொது சொத்துக்களை பராமரிப்பது, உயிர் ஆபத்து என்ற காரணம் தவிர்த்து வேறு எதற்கும் வாகனங்களில் ஒலிப்பானை தவிர்ப்பது, சக மனிதர்களை, உயிர்களை, இயற்கையை மதித்து அன்பு செய்வது அனைத்தும் இதில் உள்ளடங்கும்.
7.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக