வியாழன், 27 ஜனவரி, 2011

இளைய மீசைகள் அதிரட்டும் (youth vibration)

                   இளைய மீசைகள் அதிரட்டும்             
                   மீண்டும் ஒன்றாய் சேர்ந்தோம்
                   என்றப் பெருமை பொங்கிட
                   இளைய மீசைகள் அதிரட்டும்
                   இளைஞனே எழுந்து நில் ஒளி வீசு

ஆற்றல் மிக்க இளைய நண்பர்களுக்கு செயலரின் அன்பு வணக்கம்!
              
           வாள் கிழித்த நீர் எவ்வளவு நேரம் தான் பிரிந்திருக்கும்?
           கடந்த கூட்டம் நடந்த நேரம் 28-11-10, காலை 8.15 மணி

படை கண்டு தொடை நடுங்கும் கோழையல்ல
முன்நின்று வழிநடத்தும் நல்ல தலைவராக அருட்சகோ. அமுதராஜ் அமர்வினை நெறிப்படுத்தினார்.
பாலஸ்தீனத் தெருக்களிலும்ஸ
சத்திரங்களிலும், சாவடிகளிலும் ஏன் இல்லங்களிலும் கூட இடம் கிடைக்காது போன பாலன் இயேசுவுக்கு
இன்று உலகின் அத்தனை இதயங்களிலும் இடம் உண்டு
நம் பங்கிலும் அந்த மாபெறும் இமளைஞருக்கு குடில் அமைப்பது குறித்து விவாதித்தோம்.

நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே
நீ நாட்டிற்கு என்ன செய்தாய் என்று கேள்
என்னும் ஜான் கென்னடியின் பொன் வாக்கிற்கிணங்க பங்கிற்கு நம்முடைய பங்களிப்பு என்ன என்று ஆராய்ந்தோம். இருவரேனும் பங்குப் பேரவைக் கூட்டத்திற்கு செலர்வது என்று முடிவு செய்தோம்.

      விழாக்கள் தான் இன்றும்
      மனித உறவுகளும், மகிழ்ச்சியும்
     விழாமல் பாரத்துக்கொள்கின்றன.
கிறிஸ்துமஸ் விழாவினை எவ்வாறு கொண்டாடலாம் என்று விவாதிக்கும் பொழுது புதுமையை விரும்பும் இளைஞர்களின் புரட்சிக் கருத்துக்களில் மாற்றத்திற்கான வெளிச்சம் தெரிந்தது.

தானாகத் தோன்றியது உலகம் என்றால்
பூக்களுக்கு பூமியில் என் வேலை?
சோறும், மனிதனும் மட்டும்தான் உலகம் என்றால்
ஏற்றுக்கொள்கிறேன் நான்
கடவுள் இல்லையென்று!


அழகும், ஞானமும் கொண்ட அன்புக் கடவுளுக்கு நன்றி கூறி கூட்டம் இனிதே நிறைவுற்றது.

வியாழன், 6 ஜனவரி, 2011

பள்ளிக்காலம்: தீர்த்தக்கரையினிலே



பிரகாஷ், பிரிட்டோ, பிரான்சிஸ், நவமணி, மற்றும் எங்கள் அண்ணா விஜின்

என் அன்பிற்கினிய நண்பர்கள் மற்றும் எங்கள் டியூஷன் அக்கா டெலினா



பிரிட்டோ, விஜின், பிரகாஷ், விமல்ராஜ்,  விமல்ராஜ், வறுவேல் மற்றும் தம்பி வின்சோ




நண்டு என்று செல்லமாக அழைக்கப்படும் எங்கள் அன்பு நண்பன் பிரிட்டோ ராஜ்



புதன், 15 டிசம்பர், 2010

கடற்கரை மணலில்...எழுதப்பட்டக் கவிதை

கடற்கரை மணலில்
கரைஒதுங்கிக் கிடக்கும்
ஓர் கடற்கன்னியின்
புகைப்படத்திற்கு 
எழுதப்பட்டக் கவிதை
அலைப் போர்வைக்குள்
ஓர் அபலை உறங்குகிறாள்
என் உறக்கத்தைக் கெடுத்துவிட்டு..

இவள் இயற்கை அன்னையா?
தமிழ்த் தாயா?
தேச மாதாவா?
விடுதலை தேவியா?
கடல் கன்னியா?
என் காதலியா?
இவள் மௌனத்தில்
ஏன் கலையவேண்டும்
என் தூக்கம்?

திறக்க மறுக்கும்
இவள் இமைகளைப் பார்த்து
என் கண்கள்
மூட மறுப்பதன்
நோக்கம் என்ன?

இவள்
கரை ஒதுங்கிய
கடலின் உயிரா?
இழுத்துச் செல்லப்படும்
புவியின் பயிரா?
அய்யகோ
இரண்டுமே இழப்புதானே?

உலக மயமாக்கலுக்கு
'கால்' முளைத்துவிட்டது
உலக(ம்) மாயமாகிவிட்டது
மனிதமும் தான்..

அலைக்கற்றையில்
அடிபட்டு
சிட்டுக்குருவிகள்
செத்துப்போனது பற்றி
சட்டசபைக்கு
என்ன கவலை?

திரையில் சலனமில்லை
காட்சிகள் விரயவில்லை
பின்னர் என்ன சப்தம்?
ஓ! குப்பை கொட்டுகிறான்
மனிதன்

மனிதனின்
நவீனக் கழிவுகளுக்கு
'மக்கும் மற்றும் 'மக்கா' என்று
மாபெறும் குப்பைத்தொட்டி
சகல வசதிகளுடன் கூடிய
கடல்
அங்கே
பயமுறுத்தும் கண்களில்எனக்கு
துளிகூட பயம்வரவில்லை
சில மனிதர்களோடு
வாழ்ந்து பழகிவிட்டது

இனிமேல்
குழந்தைகள் மீதும்
நம்பிக்கையில்லா தீர்மானம்!
விரல், ரேகை,
விழித்திரை, முகவரி என்று
பிறப்புச் சான்றிதழில் ஓர்
நவீன சோதிடம்...

இனிவரும்
பேரப்பிள்ளைகளுக்கு
பால்சோறு, பருப்பு சமைக்க
கணிப்பொறியில்
மென்பொருள் தயாரிக்க வேண்டும்!

விவசாயிகள் காட்சிசாலை
அமைப்பது கோரி
ஒருநாள் அடையாள
இணைய விரதப்போராட்டம்
அறிவிக்கப்படும்...

சிரிப்பதா?
அழுவதா?
நான் ஏன் புலம்புகிறேன்?

இவள் மௌனத்தில்
ஏன் கலையவேண்டும்
என் தூக்கம்?

இவள் இயற்கை அன்னையா?
தமிழ்த் தாயா?
தேச மாதாவா?
விடுதலை தேவியா?
கடல் கன்னியா?
என் காதலியா?

அலைப் போர்வைக்குள்
ஓர் அபலை உறங்குகிறாள்
என் உறக்கத்தைக் கெடுத்துவிட்டு...