வியாழன், 27 ஜனவரி, 2011

சிறு முன்னுரை (For Final Vows)

                                நற்செய்திக்குப் பின்...
சிறு முன்னுரை 1
அனைவரும் அமரவும். இப்பொழுது இறுதி அர்ப்பண திருச்சடங்குகள் ஆரம்பமாகின்றன. வார்த்தைப்பாட்டினைக் கொடுக்கவிருக்கும் அருட்சகோதரர்களை  இல்ல அதிபர் தந்தை பெயர் சொல்லி அழைக்க, அவர்கள் சபையின் அதிபர் தந்தையின் முன்வந்து நின்று 'இதோ வருகிறேன்' என்று பதிலளிப்பர்.
 பின்னர் கடவுளிடமும், திருச்சபையிடமும் அவர்கள் கேட்கவிரும்புவது என்ன என்று அதிபர் தந்தை வினவ, புனித லியோனார்தியாரால் நிறுவப்பட்ட இறை அன்னைத் துறவறக் குடும்பத்தின் வழியாக இறைமனித சேவையில் தங்கள் இறுதி மூச்சு வரை நிலைத்திருக்கும் விருப்பத்தைத் தெரிவிப்பர். அப்போது நாம் அனைவரும் இணைந்து 'நன்றி பாடி' என்ற பாடலைப் பாடுவோம்.
 (அனைவரும் இணைந்து நன்றி கீதம் பாடுவோம்)

                                மறையுரைக்குப் பின்
சிறுமுன்னுரை 2
 இப்பொழுது கடவுளுக்குத் தங்களையே முழுமையாக அர்ப்பணிக்கவும், இறை அன்னை சபையின் ஒழுங்கு முறைகளின் படி, கற்பு, ஏழ்மை, கீழ்படிதல் என்னும் துறவற விழுமியங்களை வாழ்வதற்கான அருட்சகோதரர்களின் மன விருப்பத்தை சபையின் அதிபர் தந்தை கேட்டு அறிந்து கொள்வார்.

சிறுமுன்னுரை 3
 இப்பொழுது புனிதர்களின் மன்றாட்டு மாலையானது பாடப்படுகிறது. வார்த்தைப்பாட்டினைக் கொடுக்கவிருக்கும் சகோதரர்கள், தங்கள் முழு அர்ப்பணத்தின் அடையாளமாக, இறைவனையே முழுவதுமாகச் சார்ந்திருப்பதை உணர்ந்து, பலிபீடத்தின் முன் முகம் குப்புற விழுந்து மன்றாடுவார்கள். நாமும் முழந்தாள் படியிட்டு அவர்களுக்காக செபிப்போம்.

சிறுமுன்னுரை 4
 அனைவரும் அமரவும். இப்பொழுது ஏற்கனவே எம் சபையில் இறுதி அர்ப்பணத்தைக் கொடுத்திருக்கும் இரு தந்தையர்களை அதிபர் தந்தை சாட்சிகளாக அழைக்க, இயேசுவின் அடிச்சுவட்டில் நடைபயில உறுதிகொண்டிருக்கும் நம் சகோதரர்கள், தங்கள் கைப்பட எழுதிய வார்த்தைப் பாட்டு வாய்ப்பாட்டை வாசிப்பர்.

சிறுமுன்னுரை 5
 இப்பொழுது இறுதி வார்த்தைப்பாட்டினைக் கொடுத்திருக்கும் அருட்சகோதரர்களை அதிபர் தந்தை பலிபீடத்திற்கு அழைத்துச்சென்று, அங்கு வைக்கப்பட்டிருக்கும் வார்த்தைப்பாட்டுப் புத்தகத்தில் கையொப்பமிடுவர். இது மீட்பிற்காக பலியாகி உயிர்த்த கிறிஸ்துவோடு தங்கள் அர்ப்பணம் ஒன்றிப்பதைக் குறிக்கிறது.

சிறுமுன்னுரை 6
 இப்பொழுது தங்கள் அர்ப்பணத்தையும், மகிழ்ச்சியையும் குறிக்கும் விதமாக அருட்சகோதரர்கள் ........................... என்றப் பாடலைப் பாடவர்.

சிறுமுன்னுரை 7
 இப்பொழுது புதிதாக இறுதி வார்த்தைப்பாட்டினைக் கொடுத்திருக்கும் அருட்சகோதரர்கள் சபை அதிபரின் முன் முழந்தாளிட, அதிபர் தந்தை கரங்களை விரித்து சிறப்பு ஆசீரை அருட்சகோதரர்களுக்கு அளிப்பார். நாமும் முழந்தாள் படியிட்டு பக்தியோடு அவர்களுக்காக செபிப்போம்.

சிறுமுன்னுரை 8
 இப்பொழுது புதிதாக வார்த்தைப்பாட்டினைக் கொடுத்திருக்கம் அருட்சகோதரர்களுக்கு அதிபர் தந்தை சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவை தம் மனக்கண் முன் கொண்டிருக்க அறிவுறுத்தி சிலுவையை வழங்குவார்.

சிறுமுன்னுரை 9
 திருச்சபையின் வழிநின்று தங்கள் துறவறத்தை வாழ்வாக்க வேண்டும் என்பதை நினைவூட்ட இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடானது அருட்சகோதரர்களுக்கு வழங்கப்படுகிறது.

சிறுமுன்னுரை 10
 இப்பொழுது தங்கள் இறுதி அர்ப்பணத்தை அளித்து, சபையின் புதிய அங்கத்தினராகியிருக்கும் அருட்சகோதரர்களுக்கு அதிபர் தந்தை அமைதியின் வாழ்த்தை அறிவித்து, சபையின் பிற தந்தையர்களிடம் வாழ்து பெற அழைத்துச் செல்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக