வெள்ளி, 18 மார்ச், 2016

தீர்த்துக்கொள்வதென முடிவான பிறகு...

தீர்த்துக்கொள்வதென முடிவான பிறகு
பேசித் தீர்த்தாலென்ன?
பேசாமல் தீர்த்தாலென்ன?

நாவினால் சுட்ட வடுக்களை விட
ஆழமாயிருக்கின்றன
சுடாமல் விட்ட வடுக்கள்

எப்போதும் இருந்ததேயில்லை
வார்த்தைகளே இல்லாத
ஒரு தூய மௌனம்
பேசாத வார்த்தைகளே
மௌனம்

அவை பேசிய வார்த்தைகளை விட
இரைச்சலாய் இருக்கின்றன
மெல்ல முடியாதவாறு
கனமாய் இருக்கின்றன

இல்லாமல் போகட்டும்
அமைதியைக் குலைக்கும்
உக்கிரமான மௌனங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக