வெள்ளி, 31 மார்ச், 2017

தவக்காலம் நான்காம் வாரம் சனி (1-4-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 7: 40-53

40 கூட்டத்தில் சிலர் இவ்வார்த்தைகளைக் கேட்டு, 'வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே' என்றனர்.

41 வேறு சிலர், 'மெசியா இவரே' என்றனர். மற்றும் சிலர், 'கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்?

42 தாவீதின்; மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?' என்றனர்.

43 இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது.

44 சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத் தொடவில்லை.

45 தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம், 'ஏன் அவனைப் பிடித்துக்கொண்டு வரவில்லை?' என்று கேட்டார்கள்.

46 காவலர் மறுமொழியாக, 'அவரைப் போல எவரும் என்றுமே பேசியதில்லை' என்றனர்.

47 பரிசேயர் அவர்களைப் பார்த்து, 'நீங்களும் ஏமாந்து போனீர்களோ?

48 தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை நம்புவோர் யாராவது உண்டா?

49 இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்' என்றனர்.

50 அங்கிருந்த பரிசேயருள் ஒருவர் நிக்கதேம். அவரே முன்பு ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர். அவர் அவர்களிடம்,

51 'ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?' என்று கேட்டார்.

52 அவர்கள் மறுமொழியாக, 'நீரும் கலிலேயரா என்ன? மறைநூலைத் துருவி ஆய்ந்து பாரும். அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்' என்றார்கள்.

53 (அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்.)

சிந்தனை : 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக