வியாழன், 9 மார்ச், 2017

தவக்காலம் முதல் வாரம் வியாழன்

இன்றைய நற்செய்தி : மத்தேயு 7:7-12

7 கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.

8 ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.

9 உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா?

10 அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா?

11 தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!

12 ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.


சிந்தனை:

கேட்க வேண்டும். சிறிதாக அல்லாமல் பெரிதாக! எதைக் கேட்கலாம்? இறைவன் தன்னையேத் தருவதற்குத் தயாராக இருக்கும் போது அவரையல்லாமல் எதைக் கேட்டாலும் சரியல்ல தானே? இறைவா எங்களோடு தங்கும்! தேடுவதற்கான ஆர்வத்தையும், தட்டுவதற்கான ஆற்றலையும் இழந்து இன்னும் இந்த வாழ்க்கையில் ஏதேனும் மிச்சம் இருக்கிறதா? என்று சோர்ந்து போகும் உள்ளங்களில் தங்கும் ஆண்டவரே! இந்த நொடி நான் வாழ்கிறேன் என்றால் அதுவே உமது கொடை என்னும் நன்றியுணர்வும், செயல்படும் உள்ளமும் தந்து வழிநடத்தும் இறைவா! உம் பாதம் சரணம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக