வெள்ளி, 16 டிசம்பர், 2011

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு (A MODERN EVIL CALLED FDI)

காடு கழனிகளிலிருந்து
மாடுகளை அனுப்பிவிடுங்கள்
வெள்ளைக்கார மாடுகள்
மேய வருகின்றன
உங்கள் வயிறுகள்
காய வருகின்றன

சில்லறை வணிகத்தில்
அந்நிய முதலீடு
ஆனை கட்டி போரடித்து
போரடித்து விட்டது
இனி அம்பானி பார்த்துக்கொள்வான்

"யூதரென்றும், கிரேக்கரென்றும் இல்லை"
சாத்தான்களுக்கு இதைச் சொன்னது யாரோ?
தின்று கொழுத்த அமெரிக்கனென்றோ
மண்ணைத் தின்னும் சோமாலியனென்றோ
செரிக்க நடக்கும் வெள்ளையனென்றோ
சேரியில் சாகும் சாமானியனென்றோ
பிரிவுக் கொடுமை இனியும் இல்லையாம்!!!
உலகக் கிராமத்தில் நீயும் நானும் ஒண்ணு
 நம்பும் உன் வாயில் மண்ணு!

அரசின் அடிமையாக சில காலம்
அரசியின் அடிமையாக இன்னும் சில காலம்
இன்று அமெரிக்க அடிமையாகிப் போன
ஒரு தலைவன் வெட்கமின்றி சொல்கிறான்:
'வால்மார்ட்' வருக! வருக!
'மெகா' உங்கள் சகா!
'டெஸ்கோ', 'கேரிப்போர்'
நமக்குள் என்ன சொற்போர்?
கொள்வார் இருக்க
கடைவிரிக்க தடைவிதியேன்!

பசிலிக் கீரையும்
சிட்டுக்குருவி லேகியமும்
இனி காந்தி மார்க்கெட்டில் கிடைப்பதில்லை
காந்திக்கே இங்கு மார்க்கெட் இல்லை
என்ன சரக்கோ
வா! வால்மார்ட்டுக்கு!

 வெள்ளையன் துணியை
வீதியில் எரிப்போம்
அந்நியப் பொருளை
ஆழியில் வீசுவோம்
சொந்தச் சந்தையை
தூக்கி நிறுத்த
சுதந்திரப் போரில் ஒன்றுபடு
சுதேசியாக வென்றுவிடு

'சுதேசி! சுதேசி! என்று
சொன்னவன் செத்தான்
மற்றவன் அதனை மறந்துவிட்டான்!
அரை மீட்டர் கொடி காக்க
அடிப்ட்டு செத்தான் ஒருத்தன்
செக்கிழுத்து மாண்டான் மடையன்
கதர்! கதர்! என்று
கதற கதற கத்தினான் கிழவன்
தண்டி வரை நடந்தானாம்
உப்பு காய்ச்சி விளையாட!

எல்லாம் தப்பாகி விட்டது
தலைவர்களே! தியாகிகளே!
உங்கள் இரத்தத்தை
நாங்கள் அடமானம் வைத்துவிட்டோம்
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டோம்
கவலை உனக்கில்லை என்பதை மட்டும்
இந்த நாட்டில் ஒத்துக்கொள்ள முடியவில்லை
குறுதி ஊற்றி விளைத்த பொருளை
விற்பனை செய்வது
கற்பனை தானோ?
கண்ணீருடன் சொல்கிறேன்
அந்நிய முதலீட்டை
அனுமதித்துவிட்டால்
கதியொன்றுமில்லை - நாம்
கரை சேர்வதில்லை

அந்நிய முதலீட்டை அனுமதிப்பதும்
என் மனைவியை கொஞ்ச நாள்
நீ வைத்துக்கொள் என்று
அமெரிக்கனிடம் விடுவதற்கும்
பெரிதாக எந்த
வித்தியாசமும் இல்லை

இலஞ்ச ஊழல் பெருச்சாளிகளின்
பண முதலைகளின்
அராஜக, மக்கள் விரோத
கொடுங்கோல் காங்கிரஸ்
ஒழிந்து போக!
சேர்ந்து சபிப்போம்.

திங்கள், 14 நவம்பர், 2011

தீமை எரிக்க...வாழ்க்கை விளக்க

எதையோ ஒன்றை
சுட்டுவதாய்
உன் விழிச்சுடர்!
சுடுபடு பொருள் அறியேன்...
தெளிந்த உன் கண்களே
என்னைக் குழப்புகின்றன

எந்த சூட்சுமத்திலும்
பிடிபடவில்லை
உன் அடையாளம்
ஆணோ, பெண்ணோ
அறுதியிட இயலாது
நீயே நிற்கிறாய்
ஏதோ ஒன்றின் அடையாளமாய்!

உலக உலையில்
வெந்து தணிந்த முதுமை
உரித்துபோட்ட பாம்பின் சட்டையாக
வாழ்வு என்னும் புதிர் வட்டத்திலிருந்து
உன்னைக் களற்றி விட்டது யாரோ?
உன் குருதியை உறிஞ்சிய
மழைக்காலத்து அட்டைப் பூச்சிகள்
மகனோ? மகளோ?

இன்னும் என்ன
புனிதம் கிடக்கிறதென
தொப்பியில் காட்டுகிறாய்
பச்சைக்கொடி
கண்தானம் செய்வாயோ?
தசைதானம் செய்வாயோ?

மின்னும் விளக்கென
வீர விழிகள்
உனக்குப் பின்னும் தேவை
தீமை எரிக்க
வாழ்க்கை விளக்க
பார்வை கொடு பூமிக்கு
தாயே! தந்தையே!

புதன், 9 நவம்பர், 2011

என் அடையாளங்களை
நான் வெறுக்கிறேன்
அவை என்னைச் சுட்டுவதில்லை
என்றோ எவனோ
கட்டியக் கதைகளை
யாரைக் கேட்டு சூட்டுகிறீர்கள்
என் மீது!
இந்தியனாம்! தமிழனாம்!
சத்தியமாய் நான் விரும்பவில்லை
கேவலம்! குமட்டுகிறது

இந்த நாட்டில் ஓட்டு போடுவதற்கம்
தற்கொலை செய்வதற்கும்
எந்த வேறுபாடும் இல்லை!
என் தலைமையின் செயல்பாடுகள்
என் மீது எச்சிலை உமிழ்கின்றன
நான் போடும் ஓட்டுக்கள்
இதற்கான என் அனுமதிப் பத்திரங்கள்

நீ பிச்சை கேள்
போடுகிறேன்
பிழைத்துக்கொள்
அறிவற்ற உனக்கு
மிக மிகக் கேவலமான உனக்கு
ஏழைகளின் எச்சிலுக்கம் விலைபெறாத உனக்கு
எதற்கு ஓட்டு

பார்ப்பன நாய் குரைத்து விளையாட
கேட்கிறது என் எலும்புகளை
பல்லை இளித்துக்கொண்டு
பல்லக்குத் தூக்கும்
அறியாமைக் கூட்டத்துக்கு
ஒரு பெயர் தமிழனாம்
அதில் நானும் ஒருவனாம்

பெரும்பான்மை முட்டாள்களால்
போதி மரத்தில் விறகு வெட்டும்
ஒருத்தி தலைவியாகிறாள்
அவள் எனக்கும் தலைவியாம்?
தலைவலி...

ஐந்து ஆண்டுகளுக்கேனும்
இப்பகுதிக்குப் புதியப் பெயரிடுவோம்
நரகம் என்று...


                                                                                                  கோபம் தொடரும்.
                                                                                                                      நன்றி.

வெள்ளி, 4 நவம்பர், 2011

OUR TAMILNADU

தமிழகத்தை சில காலம் ஒரு சிறுக்கியும்,
இன்னும் பிற காலங்களில் ஒரு பொறுக்கியும்
ஆட்சி செய்கின்றனர். என் கருத்து சரிதானா?
உங்கள் கருத்து என்ன?