ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

குமரிமுனை பங்கு கள அனுபவம்

வரவேற்பு
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கரையில் களப்பணி அனுபவம் பெற மூன்றாமாண்டு இறையியல் மாணவர்கள் நாங்கள் கால் பதித்த நாள் 17.09.2011 இரவு 10.30.  உச்சிவானை தொட்டுவிட்டதோ என எண்ணத்தூண்டுமளவுக்கு உயர்ந்து நின்ற தூய அலங்கார உபகார அன்னையின் ஆலயக்கோபுரம் பங்கு மக்களின் இறைநம்பிக்கைக்கு சான்று பகர்ந்து எம்மை பல எதிர்பார்ப்புகளுக்கு இட்டுச்சென்றது.  பங்குப் பணியாளர் அருட்பணி. லியோ கென்சன் மற்றும் இணைப் பங்குப்பணியாளர் அருட்பணி. அமல்ராஜ் மற்றும் பங்கு மக்கள் சிலர் அன்புடன் எம்மை வரவேற்றனர்.

முதல் நாள்
18.09.2011 ஞாயிரன்று காலைத் திருப்பலியில் பங்குப் பணியாளர் எம்மை இன்சொல் கொண்டு வரவேற்று எமது இருத்தலின் நோக்கத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்தினார்.  குமூகப் பகுப்பாய்வின் அடிப்படையில் பங்கில் பணித்திட்டம் உருவாக்க உதவும் இந்த கள அனுபவத்தின் தொடக்கமே உயிர்த்துடிப்புடன் அமைந்திருந்தது.

இருபது ஆண்டுகளாக வலுத்துவந்த கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டம் மக்கள் போராக வெடித்த நிகழ்வுதான் இடிந்தகரை என்னும் இடத்தில் 127 மக்கள் ஐந்து நாட்களாக இருந்த தொடர் உண்ணாவிரதம்.  இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணமும,; தங்களது எதிர்ப்பையும் காட்டும் வண்ணமும் கன்னியாகுமரி பங்கு மக்கள் இதை ஒட்டுமொத்த தமிழனின் வாழ்வாதாரப் பிரச்சனையாகப் பார்த்து போராட்டக் களத்தில் இறங்கினர்

முன்னதாக நடைபெற்ற தயாரிப்புக் கூட்டம் எமக்குத் தந்த அனுபவங்கள் பல.  பங்குப் பணியாளரும் மக்களும் இணைந்து சிந்தித்து, விவாதித்து, திட்டமிட்டு செயல்பட்ட விதம் கூட்டுத் தலைமைத்துவத்தையும், வழிபாடு கடந்து வாழ்க்கைப் போராட்டங்களுக்காக துணிவுடன் போராடுகின்ற வளர்ச்சியையும் படம் பிடித்துக் காட்டியது.  'மக்களோடு மக்களாய்' போராட்ட உணர்வை நாங்களும் பெற்று கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றோம்.  அன்றிரவு அன்பிய வழிகாட்டிகள் கூட்டப்பட்டு ஒரு அன்பிய வழிகாட்டிக்கு இரு மாணவர்கள் என்ற முறையில் பிரிக்கப்பட்டு அவர்களின் இல்லங்களுக்கு சென்று வந்தோம்.

மேதா பட்கர்
29.09.2011 திங்களன்று காலையில் முரண்பாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் கொண்டுள்ள சமூகத்தைப் பகுப்பாய்வு செய்ய உதவும் வண்ணம் அமைந்திருந்தது அருட்பணி. வில்சன் அவர்களின் கருத்துரை. நண்பகலில் மீண்டும் போராட்டத்தில் பங்கேற்றோம். போராட்டத்தின் முத்தாய்ப்பாய் சமூக ஆர்வலர் மேத்தா பட்கரின் வருகையும், உரையும் எம்மை மேலும் உற்சாகப்படுத்தியது. மாலையில் சுனாமி காலனிக்கு 9 மாணவர்களும் அஞ்சுக்கூட்டுவிளை கிளைப்பங்கிற்கு 5 மாணவர்களுமாகப் பிரிந்து சென்று 4 சமூகப் பகுப்பாய்வு செய்தோம்.

பங்கேற்பு
20.09.2011 இன்று போராட்டத் தீ கொழுந்துவிட்டு எரிய சமயம் கடந்து போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களோடு சமூக ஆர்வலர்களுடன் இறையியல் மாணவர்கள் நாங்களும் முழுமையாகப் பங்கேற்றோம். சிற்றுரை ஆற்றி, விழிப்புணர்வுப் பாடல்பாடி மக்களை உற்சாகப்படுத்தினோம். 

தரவுகள்  
22.09.2011 முதல் Ransom Town மற்றும் அஞ்சுக்கூட்டுவிளை பகுதிகளில் குமூகப் பகுப்பாய்வின் மூலம் மக்களின் சமய, அரசியல் சமூக, பொருளாதார நிலையைப் பற்றிய தரவுகளை சேகரித்தோம்.  மீண்டும் 25.09.2011 அன்று மாலை குழுவாக சேர்ந்து அருட்பணி. வில்சன், பங்குப்பணியாளர் மற்றும் அருட்பணி. ராஜா முன்னிலையில் தரவுகளின் அறிக்கையை சமர்ப்பித்தோம். இருவேறு இடங்களில் நடைபெற்ற ஆய்வின் அறிக்கை இயல்பாகவே வேறுபாடுகளைக் கொண்டிருந்தது

சகோதரர்களின் பகிர்விலிருந்து....
அஞ்சுக்கூட்டுவிளை கிளைப்பங்கு  
1875ல் புலம் பெயர்ந்த 5 குடும்பங்களால் உருவானதுதான் இக்கிராமம்.  சிறிய எண்ணிக்கையில் இருந்த இவர்கள் அருகிலிருந்த நிலங்களை விலைக்கு வாங்கி உருவாக்கப்பட்டதுதான் இக்கிராமம்.
மக்கள் தொகை     :  
தொழில்           :  கடைகள், உணவுவிடுதிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள்                                          தங்குகின்ற விடுதிகள் நடத்துதல். 
கட்சி; சார்பு     :  
சாதியம்            :  பெரும்பாலானோர் நாடார் சமூகம்.
கல்வி நிலை    :  மக்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்களாகவும், அரசு வேலையை நோக்கமாகக் கொண்டு படிப்பவர்களாகவும் உள்ளனர்
அடிப்படை வசதிகள்   : பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பதால் அடிப்படைத் வசதிகள் இருக்கின்றன.
வாழ்வாதாரம்  :  கடின உழைப்பும், சிறப்பான திட்டமிடலும்
சமயம்                : பெரும்பான்மையானோர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். தற்போது பெந்தகோஸ்து சபையின் தாக்கம் பெருமளவில் இருக்கின்றது. பிற சமூகத்தை சார்ந்தவர்களிடம் இவர்கள் வரி வாங்குவது இல்லை. அன்பியங்களில் அவர்களை சேர்த்துக் கொள்வதும் இல்லை. ஒரு சில குடும்பங்கள் இணைந்து பிறரை ஒடுக்குகின்ற சூழலும் உள்ளது. 

Ransom Town
2004 ஆம் ஆண்டு சுனாமி பாதிப்பிற்குப் பின்னர் பாதிப்பிற்குள்ளான 34 வீடுகள் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டன.  பங்குத் தந்தையின் அரிய முயற்சியினாலும் புனித அன்னாள் சபைக் கன்னியர்கள் மற்றும் Salvation Army  போன்ற தொண்டு நிறுவனங்களால் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உருவானதுதான் இப்பகுதி.
  • மக்கள் தொகை :  
  • தொழில்              : மீன்பிடித்தல் மற்றும் அவை சார்ந்த தொழில்கள் 
  • கட்சி சார்பு        : அ.இ.அ.தி.மு.க. அ.தி.மு.க. மற்றும் தே.தி.மு.க. இந்தப்பகுதிக்கென்ற சட்டமன்ற உறுப்பினர் இல்லை.தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில்தான் போட்டியிடுகின்றனர்.  மேலும்            இப்பகுதியானது  பஞ்சாயத்தை சார்ந்தது.
  • சாதியம்           :   பறவர், முக்குவர் மற்றும் நாவிதர்.
  • கல்வி நிலை  :  பெரியவர்கள் கல்வியறிவு குறைந்தவர்களாக இருந்தாலும் பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும் என்ற நோக்குடன் தரமான கல்வி பெறச் செய்கின்றனர்
  • அடிப்படை வசதிகள் :   குடிநீர் வசதி குறைவாகவே உள்ளது.  குப்பைத்       தொட்டிகள் இல்லாததால் ஊர் முழுவதும் நெகிழிக்குப்பைகளால் நிறைந்துள்ளது. அனைத்து     அடிப்படை வசதிகளுக்கும் கன்னியாகுமரியை சார்ந்துள்ளனர்.
  • சமயம்             : அனைவரும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள்.
இறைநம்பிக்கை
23.09.2011 அன்று காலை அருட்பணி. சகாயராஜ் மக்களின் இறைநம்பிக்கையை மதிப்பீடு செய்ய வழிகாட்டினார்.  சுனாமி எனும் பேரழிவை சந்தித்திருந்தாலும் மக்களின் இறைநம்பிக்கையானது வளர்ந்துள்ளதேயன்றி தளர்ச்சியுறவில்லை என்பதும் வியப்பிற்குரியதாகவே இருந்தது.  இறைமக்களின் ஈடுபாடு ஆலய வழிபாட்டில் மட்டுமில்லாமல் ஊரின் வளர்ச்சிப்பணிகளிலும்  இருக்கின்றது.  அன்பியங்கள் அவர்களின் உறவை வலுப்படுத்துபவையாகவும் அவர்களை ஒருங்கிணைக்கும் சிறந்த ஊடகமாகவும் திகழ்கின்றன.  மரபு ரீதியாக பெற்றுக்கொண்ட புரிதலுடன் புதிய இறையியல் புரிதல்களையும் உள்வாங்கிக்கொண்டு வாழும் இவர்களின் வாழ்வு எமக்கும் தூண்டுதலாக அமைந்தது.

பங்குப் பணியாளர்களின் பகிர்வு
27.09.2011 அன்று மாலையும் 28.09.2011 காலையும் அருட்பணி. லியோ கென்சன் மற்றும் இணைப்பங்குப் பணியாளர் அருட்பணி. அமல்ராஜ் இருவரும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.  தனது பத்தாண்டுகால அயராத உழைப்பாலும் இறைவனின் உடனிருப்பாலும் அமைதிப் பூங்காவாக இன்று கன்னியாகுமரி மாறியிருக்கிறது என்பதையும் அதற்கு முன்னதாக இப்பங்கில் இருந்த பல்வேறு ஆதிக்க சக்திகள், அரசியல்கள், போராட்டங்கள், பொருளாதார சிக்கல்கள் போன்றவற்றையும் அதை மாற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் போன்றவற்றையும் பகிர்ந்து கொண்டார்கள். இன்று பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளநிகழ்வுகளை மகிழ்வுடன் மக்களும் பகிர்ந்து கொண்டார்கள். இன்று பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டுள்ள நிகழ்வகளை மகிழ்வுடன் மக்களும் மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்கள். ஊரைப்பற்றிய தெளிவான புரிதலின் பின்னணியில் மக்களோடு இணைந்து வரைந்த ஆண்டுத்திட்டம், மறையுரை, அரசின் திட்டங்களை முறைப்படிப் பெற்று மக்களுக்கு வழங்கியது போன்றவற்றின் மூலமாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய அருட்பணியாளரை மக்கள் நன்றியுடன் நினைவுகூர்கின்றனர்.
மேலும் மக்களின் கல்வி, சமய ஈடுபாடு, மற்ற சமயத்தவரோடு கொண்டுள்ள உறவு மற்றும் வளர்ச்சிகள் பற்றிய புரிதல்களை ஆழப்படுத்தும் வண்ணம் அமைந்திருந்தது அமர்வு. 

சிறப்பு அழைப்பாளர்களின் பகிர்விலிருந்து :
  • திரு. ராசையா நாடார் மற்றும் இஸ்லாமிய நண்பர்
சுனாமி குடியிருப்பு பகுதிக்கான நிலம் இவர்களால் மனமுவந்து அளிக்கப்பட்டது. ஆடிதடி, வன்முறை என்றிருந்த இப்பகுதி தற்போதைய அருட்பணியாளர் லியோ கென்சனின் சிறப்பான பணிகளால் அமைதியான நிலையை அடைந்துள்ளதை பகிர்ந்து கொண்டார். இந்து, இஸ்லாம், கிறித்தவ மக்கள் உறவு நல்ல முறையில் அமைந்துள்ளது என்றும் மார்வாடிகள் இந்துத்துவாவின் செயல்பாடுகள் அப்பகுதி வாழ் இந்து மக்களுக்கே விருப்பமில்லாத ஒன்றாக உள்ளதை பகிர்ந்து கொண்டார்கள்.
  • கிராம அலுவலர் மற்றும் பள்ளி ஆசிரியர்
மக்கள் வாழ்நது வந்த அரை கிலோமீட்டர் பகுதி இன்று 5 கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது. எல்லாவற்றிலும் வளர்ந்துள்ளனர். பள்ளியில் அயரா உழை;பபம் அர்ப்பண உணர்வும் கொண்டவர்களாக ஆசிரியர்கள் உள்ளனர். தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தரமான கல்வி அனைவருக்;கும் வழங்கப்படுகிறது. சிறப்பு வகுப்புகள், தனித்திறமைகள் நல்லொழுக்கம் போன்றவை மாணவர்களை சிறப்பாக உருவாக்குகின்றன.
  • பக்த சபைகள்
பொது நிலையினர் அதிகமான ஈடுபாட்டுடன் செயல்படுகின்றனர். சிறப்பாக, புதுமையாக, செம்மையாக அனைத்து வழிபாடுகளும் நடைபெறுகிறது. ஆண்களும், பெண்களும் பல பொறுப்புகளை வகித்தாலும் பங்குப் பேரவையில் பெண்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படாத நிலையும் உள்ளது. தொழில் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் இடம் என்பதால் பெண்களுக்கு பங்குப்பேரவை உறுப்பினராகும் தேவை எழவில்லை என்ற காரணம் முன் வைக்கப்படுகிறது.

மதிப்பீடு
30.09.11 இன்று ஒருசிறிய மதிப்பீடு குழுவில் நடைபெற்றது. 14 நாட்கள் கடந்த நிலையில் யாம் பெற்ற அனுபவங்களை திருப்பிப்பார்த்தோம். அனுபவ பகிர்விற்கு அருட்பணி சந்தியாகு ராசா மற்றும் அருட்பணி நார்பர்ட் தாமஸ் வந்திருந்தார்கள். அடுத்த வருடத்திற்கானப் பரிந்துரையாக பணியாளர் வில்சன் அவர்களின் வகுப்பினையும் பணியாளர் ஜஸ்டஸ் அவர்களே எடுத்தால் இன்னும் சிறப்பாக அமையும் என்றக் கருத்தினைப் பதிவு செய்தோம். அவ்வாறு செய்யும் போது பாடமும், பணியும் இன்னும் சிறப்பாக ஒன்றிப்போகும் வாய்ப்பு உள்ளதாகக் கருதினோம்.

கலை இரவு
1-10-11 அன்று மாலையில் உபகார அன்னைத்திடல் நிரம்பி வழிய பறை முழக்கத்துடன் தொடங்கிய கலை நிகழ்ச்சியின் மையக் கருத்தாக சுற்றுப்புறத்தூய்மை என்பது அமைந்தது அனைவரின் அடிமனதிலும் ஓர் மாற்றத்தை உருவாக்கியது. கலைகள் யாவும் வாழ்வோடு பின்னிப்பிணைந்து கிடப்பவை என்பதால் கலை நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அமைந்திருந்தது அடுத்த நாள் நிகழ்வு.

மரம் வளர்ப்போம் மனம் வளர்ப்போம் 
2-10-11 இன்று காலை Ransom town பகுதியைச் சுற்றி ஆக்கிரமித்திருந்த நெகிழிக்குப்பகைள் மற்றும் கழிவுகளை மாணவர்களுடம் இணைந்து மக்களம் சுத்தம் செய்தனர். அன்பியத்திற்கு ஒரு மரக்கன்று என ஒவ்வொரு அன்பியத்திலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. மக்கள் அக்கன்றுகளைச் சுற்றி வேலியமைத்து ஊற்;றிய நீர் எங்கள் இதயங்களையும் குளிர்விக்க மாற்றத்திற்கான வித்தை இட்ட மகிழ்வோடும், புதிய பல அனுவங்களை எதிர்காலப் பணிக்கான முன்சுiவையைப் பெற்றுவிட்ட நிறைவோடும் மாலையில் அவரவர் இல்லங்களுக்குத் திரும்பினோம்.

இறுதியாக
கடற்கரை பகுதிவாழ் மக்களின் மத்தியில் வாழ்ந்து பணியாற்றிய அனுபவம் புதியதும், புதுமையானதுமாகக் கருதுகிறோம். இந்த அரிய வாய்ப்பை வழங்கிய கல்லூரிக்கும், வழிகாட்டியாக மட்டுமில்லமால், உடன் வழிநடப்பவராக உற்ற நண்பனாக எங்கள் எல்லாத் தேவைகளிலும் தந்தைக்குரிய வாஞ்சையோடு ஒவ்வொரு நாளும் எங்களை உடனிருந்து உற்சாகப் படுத்திய தந்தை சந்தியாகு ராசா அவர்களுக்கும் எங்கள் நன்றிகள் சமர்ப்பணம். மேலும் அவருக்கு உதவியாக இருந்த ஏனைய அருட்பணியாளர்களான நார்பர்ட் தாமஸ் மற்றும் ஜான்சன் அவர்களுக்கும் எங்கள இதயப்பூர்வமான நன்றிகள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக