சனி, 1 அக்டோபர், 2022

Bible Reading in 98 Days: From the feast of St.Therese of Lisieux to the Solemnity of the Epiphany

BIBLE READING IN 98 DAYS

October 1 to January 6

DATE

CHAPTERS

1-10-2022

Gen 1-5

Psalm 1-3

Mathew 1-2

2-10-2022

Gen 6-10

Psalm 4-6

MT 3-4

3-10-2022

Gen 11-15

Psalm 7-9

MT 5-6

4-10-2022

Gen 16-20

Psalm 10-12

MT 7,8

5-10-2022

Gen 21-25

Psalm 13-15

MT 9,10

6-10-2022

Gen 26-30

Psalm 16-18

MT 11,12

7-10-2022

Gen 31-35

Psalm 19-21

MT 13,14

8-10-2022

Gen 36-40

Psalm 21-24

MT 15,16

9-10-2022

Gen 41-45

Psalm 25-27

Mt 17,18

10-10-2022

Gen 46-50

Psalm 28-30

MT 19,20

11-10-2022

Exodus 1-6

Psalm 31-33

MT 21,22

12-10-2022

EX 7-11

Psalm 34-36

MT 23,24

13-10-2022

EX 12-17

Psalm 37-39

MT 25,26

14-10-2022

EX 18-24

Psalm 40-42

MT 27,28

15-10-2022

EX 25-30

Psalm 43-45

Mark 1,2

16-10-2022

EX31-35

Psalm 46-48

MARK 3,4

17-10-2022

EX 36-40

Psalm 49-51

MARK 5,6

18-10-2022

Levi 1-6

Psalm 52-54

MARK 7,8

19-10-2022

Levi 7-11

Psalm 55-57

MARK 9,10

20-10-2022

Levi 12-16

Psalm 58-60

MARK 11,12

21-10-2022

Levi 17-21

Psalm 61-63

MARK 13,14

22-10-2022

Levi 22-27

Psalm 63-65

MARK 15,16

23-10-2022

Num 1-6

Psalm 66-68

LUKE 1,2

24-10-2022

Num 7-14

Psalm 69-71

LUKE 3,4

25-10-2022

Num 15-21

Psalm 72-74

LUKE 5,6

26-10-2022

Num22-29

Psalm 75-77

LUKE 7,8

27-10-2022

Num 30-36

Psalm 78-80

LUKE 9,10

28-10-2022

Deut 1-6

Psalm 81-83

LUKE 11,12

29-10-2022

Duet 7-11

Psalm 84-86

LUKE 13,14

30-10-2022

Duet 12-17

Psalm 87-89

LUKE 15,16

31-10-2022

Duet 18-25

Psalm 90-93

LUKE 17,18

1-11-2022

Duet 26-30

PS 94-96

Luke 19,20

2-11-2022

Duet 31-34

PS 97-100

Luke 21,22

3-11-2022

Joshua 1-5

PS 101-103

Luke 23,24

4-11-2022

Josh 6-11

PS 104-106

John 1,2

5-11-2022

Josh 12-19

PS 107-109

John 3,4

6-11-2022

Josh 20-24

PS 110-112

John 5,6

7-11-2022

Judges 1-9

PS 113-115

John 7,8

8-11-2022

Ju 10-21

PS 116-118

John 9,10

9-11-2022

Ruth 1-4

PS 119

John 11,12

10-11-2022

1 Sam 1-7

PS 120-123

john 13,14

11-11-2022

1 Sam 8-14

PS 124-126

John 15,16

12-11-2022

1 Sam 15-23

PS 127-130

John 17,18

13-11-2022

1 Sam 24-31

PS 131-133

John 19-21

14-11-2022

2 Sam 1-7

PS 134-136

Acts 1,2

15-11-2022

2 Sam 8-15

PS 137-140

Acts 3,4

16-11-2022

2 Sam 16-24

PS 141-143

Acts 5,6

17-11-2022

1 kings 1-10

PS 144-147

Acts 7,8

18-11-2022

1 KI 11-17

PS 148-150

Acts 9,10

19-11-2022

1 KI 18-22

Proverb 1-4

Acts 11,12

20-11-2022

2 KINGS 1-8

Proverb 5-7

Acts 13,14

21-11-2022

2 KI 9-17

Pro 8-10

Acts 15,16

22-11-2022

2 KI 18-25

Pro 11-13

Acts 17,18

23-11-2022

1 Chr 1-8

Prov 14-16

Acts 19,20

24-11-2022

1 Chr 9-17

Prov 17-19

Acts 21,22

25-11-2022

1 Chr 18-29

Prov 20-22

Acts 23,24

26-11-2022

2 Chr 1-9

Prov 23-25

Acts 25,26

27-11-2022

2 Chr 10-17

Prov 26-28

Acts 27,28

28-11-2022

2 Chr 18-23

Prov 29-31

Romans 1,2

29-11-2022

2 Chr 24-30

Eccle 1-3

Romans 3,4

30-11-2022

2 Chr 31-36

Ecc 4-6

Roman 5,6

1-12-2022

Ezra 1-10

Ecc 7-9

Roman 7,8

2-12-2022

Nehe 1-13

Ecc 10-12

Rom 9,10

3-12-2022

Tobit 1-14

Song 1-3

Ro 11,12

4-12-2022

Judith 1-8

Song 4-8

Ro 13,14

5-12-2022

Jud 9-16

Wis 1-3

Ro15,16

6-12-2022

Esth 1-10

Wis 4-6

1 chor1,2

7-12-2022

1 Mac 1-7

Wis 7-9

1 chor 3,4

8-12-2022

1Mac 8-16

Wis 10-12

1 chor 5,6

9-12-2022

2 Mac 1-7

Wis 13-15

1 chor 7,8

10-12-22

2Mac 8-15

Wis 16-19

1 Chor 9,10

11-12-22

Job 1-10

Sir 1,2

1cho 11,12

12-12-22

Job 11-22

Sir 3,4

1Cho 13,14

13-12-22

Job 23-42

Sir 5,6

1cho 15,16

14-12-22

Isaiah 1-11

Sir 7,8

2 chor 1,2

15-12-22

Is 12-27

Sir 9,10

2 chor 3,4

16-12-22

Is 28-40

Sir 11,12

2 chor 5,6

17-12-22

Is 41-51

Sir 13,14

2 chor 7,8

18-12-22

Is 52-66

Sir 15,16

2 chor 9,10

19-12-22

Jer 1-12

Sir 17,18

2cho 11-13

20-12-22

Jer 13-27

Sir 19,20

Gal 1-6

21-12-22

Jer 28-39

Sir 21,22

Eph 1-6

22-12-22

Jer 40-52

Sir 23,24

Phillip 1-4

23-12-22

Lam1-5

Sir 25,26

Col 1-4

24-12-22

Baruk 1-6

Sir 27,28

1 Thes 1-5

+2 Theso 1-3

25-12-22

Eze 1-14

Sir 29,30

1 Thim 1-6

+2 Thi 1-5

26-12-22

Ez 15-23

Sir 31,32

Titus 1-3

+Philemon 1

27-12-22

Ezek 24-36

Sir 33,34

Heb 1-13

28-12-22

Ezek 37-48

Sir 35,36

James 1-5

29-12-22

Dan 1-14

Sir 37,38

1 peter 1-5

+2 peter 1-3

30-12-22

Hose 1-14

Sir 39

+1 john 1-5

31-12-22

Joel 1-3

Sir 40

Rev 1-4

1-1-2023

Amos 1-9

Sir 41,42

Reve 5-7

2-1-2023

Obadiah 1

Jonah 1-4

Sir 43,44

+Rev 8-11

3-1-2023

Micah 1-7

Sir45,46

+Rev 12-14

4-1-2023

Nahum 1-3

Hab 1-3

Sir 47,48

+Rev 15,16

5-1-2023

Zeph 1-3

Haggai 1-2

Sir 49

+Rev 17-18

6-1-2023

Zec 1-14

Malachi 1-4

Sir 50

+Rev 19,21


ஞாயிறு, 18 அக்டோபர், 2020

சங்கிகள், தம்பிகள் மற்றும் பெந்தகோஸ்து பிரதர்கள்

தெருவில் விளையாடிய மூன்று சிறுவர்கள் ஒரு மரப்பொந்தில் மூன்று முட்டைகளைப் பார்க்கின்றனர். காவி, பச்சை, வெள்ளை என்று ஒவ்வொன்றும் ஒரு நிறம். அடித்துப்பிடித்து ஒவ்வொருவனும் ஒரு முட்டையை எடுத்துக்கொள்கின்றனர். உடனே உடைத்து வாயில் விட்ட பிறகுதான் தெரிந்தது மூன்றும் கூமுட்டைகள் என்று. நிறம் மட்டும் தான் வேறாகவும், குணம் எல்லாம் ஒன்றாகவும் இருக்கும் மூன்று தரப்பினரைப் பற்றியது தான் இக்கட்டுரை. 

சிறுவயதிலிருந்தே ஒரு நபரைத் தெரியும். ஒரு இந்து நண்பராகத்தான் அறிமுகம்.  ஆனால் மிகுந்த கால இடைவெளியில் தான் அவரை சந்திப்பதுண்டு. குருமடத்திலிருந்து விடுமுறைக்கு வரும்போது எங்கு பார்த்தாலும் நின்று பேசாமல் செல்ல மாட்டார். எப்போதும் ஒருவித ஆச்சர்யத்தோடும், தயக்கத்தோடும் நிறைய கேள்விகள் கேட்பார். அவரது பணிவான உடல்மொழியாலும், நம்மை வானதூதர் அளவுக்கு வைத்துப் பேசுவதையும் தாங்க முடியாமல் அவரைக் கண்டாலே ஓடிவிடுவதுதான் வாடிக்கையாக இருந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கும் போது அவரிடம் ஒரு தன்னம்பிக்கை ஒளி தென்பட்டதைக் கவனித்தேன். பழைய சமஸ்கிருதம் - தமிழ் கலந்த (தேவ பாசை) பைபிள் மொழியில் நிறைய வசனங்களைக் கூறி விளக்கம் கேட்டார். எந்தப் பதிலிலும் ஒரு திருப்தியற்று, சரி அதை விடுங்கள், என்று அடுத்தக் கேள்விக்குத் தாவினார். தப்பித்துப் பிழைத்தேன் என்று தான் ஞாபகம். கடந்த வருடம் இன்னும் மாறிவிட்டிருந்தார். வழியில் நிறுத்தி, தம்பி கொஞ்சம் நில்லுங்கள்! கர்த்தர் உங்களை அழைக்கிறார். நீங்கள் உடனே கிறிஸ்தவராக மாறவேண்டும் என்றார். ஒருமாதிரி முழித்தேன். கர்த்தருக்குள் நீங்கள் முழுக்கு ஞானஸ்நானம் பெற வேண்டும். சிலை வழிபாட்டை விட வேண்டும். சாத்தானின் பாதையிலிருந்து விலகி ஆவிக்குள் வர வேண்டும் என்றார். முற்றிலும் மூளைச்சலவை செய்யப்பட்டு வேறொரு ஆளாக நிற்கும்  அந்த மனிதரின் பரிணாம வளர்ச்சியைப் பார்த்து வியந்துவிட்டேன். 

இதே மாற்றத்தை சீமானின் தம்பிகளாக மாறியிருக்கும் சில நண்பர்களிடம் பார்க்கிறேன். எல்லோருக்கும் ஒரு அரசியல் தரப்பு பிடித்தமானதாக இருக்கலாம். எனக்கு திராவிட முன்னேற்றக் கழகம் இருப்பது போல. ஆனால் நாம் தமிழர் கட்சி மட்டும்தான் தமிழ் இனத்தின் கட்சி என்றும், மற்றவை எல்லாம் வந்தேறிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மராத்தியர்கள் கட்சி என்று சொல்வதையும் எப்படி ஏற்றுக் கொள்வது? தமிழகத்திலிருந்து சென்றிருக்கும் 30 எம்.பி.க்களில் 39 பேர் தமிழர் அல்லாதவர் என்று ஒரு படித்த அண்ணன் சொன்னார். தங்கமான மனிதர். தேடிப்போனால் அவரே சமைத்து சாப்பாடு போடாமல் விடமாட்டார். ஏதாவது ஒரு ப்ரூப் காட்டுங்க என்று சீரியசான முகத்தோடு கேட்டேன். வாட்ஸ்-அப்பைத் திறந்து ஒரு அகல விரித்த கையோடு மைக் முன் நிற்கும் சீமானின் முகம் கொண்ட ஒரு மீம் எடுத்துக் காட்டினார். இப்போது அடக்க முடியாமல் சிரித்துவிட்டேன். அவர் முகம் சட்டென்று மாறிவிட்டது. அவரது அரசியல் நிலைப்பாடு நன்றாகத் தெரியும் என்பதால் அவரோடு விவாதிப்பதில்லை என்று முடிவெடுத்திருந்தும் சில வேளைகளில் காமெடியாகிப் போய்விடுகிறது. 

இன்னொரு சொந்தக் கார மனிதரும் சில நாட்களாக முகநூலில் சீமானிசத்தில் திளைத்திருப்பதைக் கவனித்தேன். ஒரு நாள் அவர் பகிர்ந்த ஒரு உணர்ச்சிகர மீம்-க்கு கீழே சீமானைச் சிரிதாகக் கலாய்த்துவிட்டேன். வாட்சப்பில் பத்து மெசேஜ் அனுப்பினாலும் வேலைப்பளுவால் பதிலே வராது. ஆனால் அந்தக் கமெண்டுக்கு ஒரு பத்து முழத்திற்கு உணர்ச்சியைக் கொட்டியிருந்தார். அதோடு விட்டிருக்கலாம். நமக்கு சனி. அடுத்த நாளும் சீமானின் இன்னொரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில் சீமான் தன் தம்பிகளுக்கு உணர்ச்சிப் பாலூட்டிக்கொண்டிருந்தார். ஒரே இரவில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த மோடி அவர்களால் (மிகுந்த மரியாதையோடு) ஏன் ஒரே இரவில் சாதி இல்லை என்று அறிவிக்க முடியாது என்பது தான் சாரம். நான் கமென்டில் அது எப்படிங்க சாத்தியம்? வாயைத் திறந்தா பொய்! என்று எழுதினேன். (பிரபாகரன் அனுப்பிய 29 கிலோ ஆமைக்கறி, சீமானின் விருப்ப சாப்பாட்டைத் தெரிந்துகொள்ள பிரபாகரனால் நியமிக்கப்பட்ட ஒரு தனிச்செயலாளர் விடுதலைப் புலி- ஒளிஞ்சி இருந்து பாப்பாரு போல, காளிமுத்து காளிமுத்து-னு கூவும் ஆஸ்திரேலிய கிளி, அரிசி கப்பலைச் சுட்டு சுடப் பழகியது - சத்தியமாக இது எதுவும் எழுதவேயில்லை). கடைசியாக வாய்நிறைய வாங்கிக் கட்டிக் கொண்டது திமுக தலைவர் ஸ்டாலின் தான். சாரி சார். என்னால தானே எல்லாம்!

சீமானின் அரசியல் வரலாறே பத்து சொச்சம் ஆண்டுகள் தான். இதுவரையில் தமிழகத்தில் அவர் அடைந்திருக்கும் அரசியல் வெற்றி ஒரு வார்டு மெம்பர் மட்டுமே. ஆனால் அவர்தான் நாளையத் தமிழகத்தின் விடிவெள்ளி என்ற நம்பிக்கைக்கு ஒரு நபர் வர முடிகிறது என்றால் அதற்கு பின்னால் என்ன இருக்கிறது? உணர்ச்சியைத் தூண்ட வேண்டும். கூசாமல் பொய் சொல்ல வேண்டும்.  

பின்குறிப்பு: சங்கிகளைப் பற்றி நான் புதிதாக எழுத என்ன இருக்கிறது? நீங்களே கனெக்ட் பண்ணிக்கோங்க! 

(அடுத்தக் கட்டுரை - சீமானிசம் என்னும் பொய்க்குவியல்)


புதன், 14 அக்டோபர், 2020

கொஞ்சம் அரசியல் பேசலாமென்று...

ஒவ்வொரு நாளும் எத்தனை பிரச்சனைகள் வந்து நம் தலைமேல் விடிகின்றன. யோசித்துப் பாருங்கள்! ம்! பெருமூச்சு விடுவீர்கள். கடந்த பத்தாண்டுகளாகவே நம் இந்திய அரசியல் நிலவரம் ஒரே கலவரமாகவே (களேபரம்?) இருக்கிறது. காங்கிரஸின் கடைசி ஆண்டுகளில் தொடங்கி இன்று வரை ஒரு டைம்-லேப்ஸ் வீடியோ செய்தால் எத்தனை எத்தனை கன்டென்டுகள் கிட்டும்! ஊழல்-ஊழல் என்று அன்னா கசாரே போட்ட கூச்சலில் ஆட்சிக் கட்டிலுக்கு காவி நிறமடிக்கப்பட்டது. கமிஷன் முடிந்ததும் கசாரே கரை ஒதுங்கிவிட்டார். கூடச் சேர்ந்து கூவிய கெசுரிவால் தலைநகரின் தலைவரானார். 2002 இல் நடந்த குஜராத் கலவத்தின் மோடி மாடலை 2020 இல் டில்லியில் பரிசோதித்துப் பார்த்த நல்லவர். உத்திரபிரதேச பூர்வக்குடிச் சிறுமி கழுத்தெலும்பு முறிக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு, பெற்றோருக்கு உடலைக்கூடக் காட்டாமல் உ.பி. அரசு ஏவலர்களால் எரிக்கப்பட்ட நிலையில், ஆறுதல் சொல்லப்போன காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு "இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்" என்று அறிவுரை கூறுகிறார். 

காய்ச்சலா? தலைவலியா? எயிட்ஸா? கொரோனாவா? இருக்கவே இருக்கு சர்வரோக நிவாரணி மாட்டு மூத்திரம் என்று உலக அரங்கில் இந்தியான்னா ரெண்டு கொம்பாக்கும் என்று மாடு தட்டி அறிவித்தது இந்த அரசு. அது மட்டுமா? சாட்டிலைட்டில் பிரச்சனை என்று சர்வதேசமும் சஞ்சலமடைந்தாலும் நாம் பாபா ராம் தேவின் கோமணாசனா பொசிசனில் அமர்ந்து சளைக்காமல் சொன்னோம் 'சாணியே மருந்து?. கதிர்வீச்சு என்றால் காளைச்சாணி. கடலுக்கு அந்தப் பக்கம் கோமாதாவின் கறியை ஏற்றுமதி செய்து காசுபார்த்துவிட்டு, உள்ளுர் காரனின் அடுப்பங்கரையில் மாட்டுக்கறி இருந்தது என்று சொல்லி அவனை இழுத்து தெருவில் போட்டு அடித்துக்கொன்றார்கள். அதன் பிறகு இறைச்சிக்கு நடத்தப்பட்ட டி.என்.ஏ பரிசோதனையில் அது அந்தக் கறி "மே..மே.." என்று கத்தியது. அடப்பாவிகளா! 

கறுப்புப் பணத்தைப் பிடிக்கப்போறேன்னு கௌம்பி பெரிய பெரிய பணமான ஆயிரம், ஐநூறு தாள்களை எல்லாம் பிடிங்கிட்டு, கலர் கலரா 2000 நோட்டு அடிச்சி கொடுத்து ஒரு ட்விஸ்ட் வச்சாங்க பாருங்க! வரலாற்றின் சுவர்களில் கறிக்கொட்டையால் எழுதப்பட வேண்டிய அவமானம். காந்தி மகான் கண்ட கண்ணிய பூமியிதுன்னுதான் நமக்கு சொல்லிக்கொடுத்தாங்க! அப்படியே உல்டாவா அவரைக் கொன்ன கோட்சேவுக்கு கோவில் கட்டிட்டாங்க! மாட்டுக்கறி, மூத்திரம், சாணம் பாகிஸ்தான், தேசத் துரோகம், சீனா இப்படி உணர்ச்சியத் தூண்டித் தூண்டியே ஜாலியா பாயிங்களோட பக்ரைன் உட்பட 60 நாடுகளில் போயி  அது-இது-எது மாதிரியான படத்துணுக்குகளில் பெர்பாமன்ஸ் பண்ணிட்டு வந்துட்டார் நம்ம ஜீ. கொரானாவால 8500 கோடிக்கு வாங்குன விமான டயரில் வச்ச லெமன் இன்னும் நசுங்காமலே இருக்கு. சோகத்துல அந்து ஆளு தாடி வச்சிக்கிட்டு அலையுறாரு. அறச்சினத்துல பொங்கி நம்ம மீடியா காரங்க ராகுல் காந்திய பிடிச்சி கேட்டாங்க பாருங்க ஒரு கேள்வி: டிராக்டருக்கு எதுக்கு குசன் வச்சீங்க?

தொடரும்...

திங்கள், 5 அக்டோபர், 2020

யாவரும் கேளிர்!


கடந்த வாரம் புதன் கிழமை! ரோமிலிருந்து செரினோலா வந்து கொண்டிருந்தேன். மாடிப்பேருந்தின் மேல் பகுதியில் இடதுபுறம் ஒரு சன்னலோர இருக்கை எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மதியம் 4 மணிக்கு பேருந்து திபுர்த்தினா நிலையத்திலிருந்து ஆமை தன் வீட்டைச் சுமந்துகொண்டு செல்வது போல அசைந்து நகரத் தொடங்கியது. கொரோனா காலம் என்பதால் பயணிகள் அமர வேண்டிய இருக்கையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் வெண்ணிற உறையிட்டிருந்தார்கள். பக்கத்து இருக்கையைக் காலியாக விட்டிருந்தார்கள். 

பேருந்து அவ்வப்போது பெருமூச்சு விட்டுக்கொண்டு முன்னோக்கி விரைந்துகொண்டிருந்தது. அப்பொழுதுதான் கவனித்தேன். எனது முன் இருக்கையில் ஒரு நபர் தொடர்ந்து இருமிக்கொண்டிருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட உறையிடப்பட்ட இருக்கையில் அமராமல் சன்னலோரத்தில் சாய்ந்து கொண்டு, இருமும் போது மட்டும் அந்த இடுக்கில் முகத்தை என் பக்கம் திருப்பிக்கொள்வார். பார்ப்பதற்கு பங்களாதேசி போலிருந்தார். அவரிடம் மெதுவாக "ஸ்கூசி, ஸ்கூசி" (மன்னிக்கவும்! மன்னிக்கவும்) என்று பவ்யமாகக் கூப்பிட்டு, வலது பக்கத்தில் உறையிடப்பட்ட இருக்கையில் இருக்குமாறு கூறினேன். முதலில் நான் சொல்வது காதில் விழாதது போல அப்படியே இருந்தார். பிறகு வேகமாக ஒரு யூ-டர்ன் போட்டுத் திரும்பி, "உன் வேலையைப் பார்த்துக்கொண்டு இரு" என்றார். "இல்லை தாங்கள் செய்வது தவறு! நடத்துனர் பார்த்தால் திட்டுவார்" என்றேன். அவர் கண்டுகொள்ளவே இல்லை. 

கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் கூட விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் அது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று என்னுள் ஒரு சினம் எழுந்தது. நடத்துனரிடம் சென்று முறையிடப்போவதாச் சொன்னேன். யாரிடமும் சொல் என்னும் தொனியில் ஒரு சூயிங்கத்தைச் "சவுக், சவுக்"கென்று சவைத்துக்கொண்டே ஒரு ஏளனப்பார்வை பார்த்தார். எழுந்து சென்று படியிறங்கி, கீழே ஓட்டுநரிடம் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்த நடத்துனரை இடைமறித்து விவரத்தை சொன்னேன். அவரும் வந்தார். அந்த நபரிடம் கடுமையானக் குரலில் இருக்கையை மாற்றி அமருமாரு கூறினார். அதற்கு அவர், "நீங்கள்தான் எனக்கு கட்டளையிட வேண்டும்! அவனல்ல!" என்று திரும்பத் திரும்பக் கூறினார். நடத்துனர் கடுப்பாகி "அவர் செய்தது மிகச்சரி. நீ உடனடியாக இருக்கையை மாற்று! அல்லது இறக்கிவிடப்படுவாய்" என்றார். 

வேறுவழியில்லாமல் இடம் மாறி அமர்ந்துவிட்டு, "இப்ப உனக்கு மகிழ்ச்சியா? நாப்பொலியில் பார்த்துக்கொள்கிறேன்!" என்றார். நாங்கள் நாப்பொலி என்னுமிடத்தில் இறங்கி வேறு பேருந்து மாறவேண்டியிருந்தது. திருட்டு, மிரட்டி பணம் பறித்தல், ரவுடியிசம் போன்றவற்றிற்கு பெயர் போன ஊர் நாப்பொலி. உடனடியாக இரண்டு மூன்று போன் பேசினார். கொஞ்சம் பயம் வந்துவிட்டது. எனது கைப்பையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டேன். மணி பர்ஸ் மற்றும் பிற டாக்குமென்டஸ் எல்லாம் லக்கேஜில் இருந்தது. நினைவுபடுத்திக்கொண்டேன்.

சிறிது நேர பயணத்திற்குப் பிறகு திரும்பி என்னிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். "எந்த நாடு" என்றார். நான் பதில் சொல்லவில்லை. "போனில் தமிழில் பேசினாய் என்று நினைக்கிறேன். இலங்கையா?" என்றார். பயத்திலும், பதில் சொல்ல விரும்பாமலும் "ஆமாம்" என்றேன். உடனே அவர் "நானும் இலங்கைதான். ஆனால் தமிழ் இல்லை. நீ இலங்கையில் எந்த இடம்?" என்றார். நான் "கொழும்பு" என்றேன். அவர் ஏதோ ஒரு ஊர் பெயர் சொன்னார். நான் மிகவும் குழம்பிவிட்டேன். பின் "இத்தாலியில் எந்த இடத்தில் இருக்கிறாய்?" என்றார். நான் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து "உங்களிடம் என் தனிப்பட்ட விசயங்களைச் சொல்ல விரும்பவில்லை" என்றேன். அவர் "பயப்படாதே! பழையதை மறந்துவிடு! நாம் இருவரும் ஒரே நாட்டினர். அதனால்தான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். என்ன வேலை செய்கிறாய்?" என்றார். "நான் சொல்ல விரும்பவில்லை. உன்னிடம் பணிவாகத்தான் சொன்னேன். ஆனால் உனக்குக் கட்டளையிட்டதாகப் புரிந்துகொண்டு தகராறு பண்ணினாய். ஆகவே உன்னிடம் பேச விரும்பவில்லை" என்றேன். பத்துநிமிடம் பேருந்து ஒரு தேநீர் விடுதியில் நிற்கும் என்று நடத்துனர் அறிவித்தார். 

கீழே இறங்கியதும் வாசலில் எனக்காக அந்த நபர் காத்திருந்தார். "காபி குடிக்கிறாயா?" என்றார். நான் காபி குடிப்பதில்லை என்று முறித்துப் பதில் சொன்னேன். கழிப்பறை பயன்படுத்திவிட்டு வருவதைப் பார்த்து அந்த நபர் "பேருந்திலேயே கழிப்பறை இருக்கிறதே" என்றார். "நான் இல்லை விடுதியில் சுத்தமாக இருக்கும்" என்றேன். அவர் ஆயிரம் பேர் பயன்படுத்தும் இடமா சுத்தமாக இருக்கும்? என்று ஏதேதோ பேச்சிழுத்துக்கொண்டே இருந்தார். நான் முகம் கொடுக்காமல் எனது இருக்கைக்கு வந்தமர்ந்தேன். 

நாப்பொலியில் பேருந்து மாறவேண்டும். கைப்பையை பலமுறை செக் செய்து தோளில் மாட்டிக்கொண்டேன். பேருந்தின் வயிறு திறந்திருந்தது. மறக்காமல் எனது லக்கேஜை எடுத்து, ஸிப் எல்லாம் சரியாக மூடியிருக்கிறதா? என்று செக் செய்து கொண்டு விறுவறுவென்று நடக்க ஆரம்பித்தேன். அந்த நபரும் என் பின்னாலேயே வந்தார். அடுத்த பேருந்தில் கீழறையில் லக்கேஜை வைத்துவிட்டு எனது இருக்கையில் வந்தமர்ந்தேன். இன்னும் இரண்டு மணி நேரப் பயணம். இரவு 9.10 மணிக்கு செரினோலா வந்தடைந்தது. 

மென் துயிலில் திளைத்துக்கொண்டிருந்த என்னை நடத்துனரின் கரகர குரல் எழுப்பிவிட்டது. இரண்டு மூன்று பேர்கள் மட்டும் தான் இந்த நிறுத்தத்தில் இறங்க வேண்டியிருந்தது. சாலையில் மறுபக்கம் என்னை அழைத்துச்செல்ல சகோதரர் லூயிஜி நின்றுகொண்டு, என்னைப் பார்த்துவிட்டார் என்ற அர்த்தத்தில் கையசைத்துக்கொண்டிருந்தார். வேகமாக எழுந்து கைப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கினேன். அந்த நபரிடம் நான் விடைபெறவில்லை. ஒருவித அலட்சியத்தோடும், எரிச்சலோடும் முகத்தைத் திருப்பிக்கொண்டு பிசியான அந்த சாலையை சட்டென்று கடந்து காரில் ஏறிக்கொண்டேன். 

கார் கிளம்பவும் தான் நெஞ்சே அடைத்துவிடும் படி திக்கென்று நினைவுக்கு வந்தது. லக்கேஜ் எடுக்கவில்லை. லூயிஜி காரை நிறுத்தினான். தூரத்தில் பேருந்து இன்னும் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து கொஞ்சம் நிம்மதியோடும், மறதியை நினைத்து வெட்கத்தோடும் ஓடினேன். அங்கு பேருந்து எனக்காக காத்திருந்தது. அந்த நபருக்கும், நடத்துனருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. "இது என் சகோதரனின் பை. அவன் எப்படியும் வந்துவிடுவான். ஒரு நிமிடம் காத்திருங்கள்" என்று சொல்லிக்கொண்டிருந்தான் அந்த பெயர் தெரியாத சகோதரன். 


செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம்- Part 2


படம் 1: திருத்தந்தை பிரான்சிஸ் தெற்கு சூடான் அரசு தலைவர் பாதத்தை முத்தமிட்டு போரினைக் கைவிட்டு அமைதி ஏற்படுத்த வலியுறுத்திய போது
 படம் 2: பெரிய வியாழனன்று இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ புலம் பெயர் அகதிகளின் பாதங்களைக் கழுவி முத்தமிட்ட போது

கத்தோலிக்கர்கள் ஏன் தங்கள் அருட்பணியாளர்களை தந்தை என்று அழைக்கின்றனர்? என்று வெறுமனே கேட்டிருந்தால், முதல் கட்டுரையில் கூறப்பட்ட இறைவார்த்தை, திருச்சபை மரபு போன்றவற்றைப் பற்றிய நீண்ட விளக்கம் தேவைப்பட்டிருக்காது. நேரடியாக பதில் அளித்திருக்கலாம். ஆனால் கேள்வி, மத்தேயு நற்செய்தியில் இயேசு தம் சீடர்களிடம் 'உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்' என்று கூறும்போது, கத்தோலிக்கர்கள் ஏன் அருட்பணியாளர்களை தந்தை என்று அழைக்கின்றனர்? என்பதாகும்.

ஆகவே விவிலியத்தை நாம் சரியாக வாசிக்கவும், புரிந்துகொள்ளவும் பயிற்சி பெற வேண்டியது அவசியமாகிறது. திருத்தூதர் பணிகள் 8, 30-31 இல் 'பிலிப்பு ஓடிச் சென்று, அவர் எசாயாவின் இறைவாக்கு நூலை வாசிப்பதைக் கேட்டு, நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா? என்று கேட்டார். அதற்கு அவர், யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்? என்று கூறித்தேரில் ஏறித் தன்னோடு அமருமாறு பிலிப்பை அழைத்தார்.' ஆகவே பொருள்பட வாசித்து விளக்க வேண்டுமென்றால் அதற்கு நிச்சயமாக பயிற்சி தேவைப்படுகிறது. இல்லையென்றால் ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, தங்களை நியாயப்படுத்துவதற்காக விவிலிய வார்த்தைகளை தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. வரலாற்றில் இன மேட்டிமை, அடிமை முறை போன்ற அநீதிகள் சில விவிலிய வார்த்தைகளை மேற்கோள் காட்டி நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது. இது நிச்சயம் கத்தோலிக்கத் திருச்சபையினருக்கும் பொருந்தும். ஆகவேதான் திருப்பலி போன்ற பொது வழிபாடுகளில் திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட இறையியல் கல்லூரியில் பயிற்சி பெற்ற திருநிலையினர் மட்டுமே விவிலியத்திற்கு விளக்கம் அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விவிலியம் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில், இறைத்தூண்டுதலால் ஏவப்பட்ட பல்வேறு மனிதர்களால் எழுதப்பட்ட பல நூல்களின் தொகுப்பே ஆகும். இந்நூல்கள் அவற்றின் மொழியால், அரசியல் சூழலால், இலக்கிய வடிவத்தால் நாம் வாழும் சூழலிருந்து தொலைவிலிருக்கிறது. இவையனைத்தையும் பற்றிய கூர் உணர்வோடு வாசிக்கும் போதுதான் விவிலியத்தை புரிந்துகொள்ளவும், அவை இன்றைய நமது வாழ்க்கைச் சூழலுக்கு அவை என்ன கூறுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளவும் முடியும்.

பொறுமையைச் சோதிப்பது போல் இருந்தாலும் விவிலித்தை எல்லோரும் ஆழமாக வேரூன்றி வாசிக்கவும், அதன் முழுச்சுவையையும் பெற்றுப் பயனடையவும் ஆர்வம் கொள்ளவேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.

நம் கேள்விக்கு வருவோம். இயேசு அவ்வாறு மத்தேயு நற்செய்தியில் கூறும் போது அக்காலத்தில் மக்களை சட்டத்தின் பெயரால் அடக்கி ஆண்ட, ஏழைகளைச் சுரண்டி வாழ்ந்த சதுசேயர்கள், பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் போன்றோரின் வெளிவேடத்தைத் துகிலுரிக்கிறார். அவர்கள் போதிப்பது ஒன்றாகவும், கடைபிடிப்பது வேறொன்றாகவும் இருக்கின்றது என்று சாடுகின்றார். அவர்கள் இறைவனுக்குப் பணிபுரியவும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களிடம் தாழ்ச்சியுடனும், தாராள உள்ளத்துடனும்  நடந்துகொள்ளவும் அழைக்கப்பட்டுள்ளதை மறந்து பொது இடங்களில் மரியாதையும், முன்னுரிமையும் பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளதைக் கடுமையாகச் சாடுகின்றார்.

இந்தச் சூழலில் தான் இயேசு கடவுளுக்குரிய பண்புகளாகிய தந்தை, போதகர், ஆசிரியர் போன்ற பெயர்களால், அவற்றிற்கு முரணாக, தங்கள் அதிகாரத்தை ஏழை, எளியோர் மேல் செலுத்துவோரை அழைக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்.

(நண்பர் இந்தக் கேள்வியை எழுப்பியது நல்லது தான் என்று தோன்றுகிறது. நாம் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.)

ஆகவே இந்த பின்னணியைப் பற்றி எந்த அக்கறையும் இன்றி, குறிப்பிட்ட ஒரு இறைவார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு வரிக்கு வரி பொருள் கொண்டோமென்றால் அது மிகவும் சிறிதான குழப்பத்தையோ, அல்லது பெரிய ஆபத்தையோ ஏற்படுத்திவிடும். எப்படியென்றால்...

1. மேற்குறிப்பிட்ட இறைவார்த்தையின் படி, நாம் பள்ளியில் கற்பித்தல் பணி செய்பவர்களை ஆசிரியர் என்று அழைக்க முடியாது.

2. அது ஏன்? நம்மைப் பெற்றத் தந்தையைக் கூட அப்பா என்று அழைக்க முடியாது.

3. ஆயினும் அழைக்கிறோம். அப்படித்தானே! ஏன் அழைக்கிறோம் என்றால் அவர்கள் இயேசு கூறியது போல விண்ணகத் தந்தையின் பண்புகளைச் செய்வதற்கு அழைக்கப்பட்டுள்ளனர். விண்ணகத் தந்தை ஒருவரே! அவரே தந்தைகளுக்கெல்லாம் தந்தை. ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர்.

4. இதே தர்க்கத்தின் அடிப்படையில் தான் கத்தோலிக்கத் திருச்சபையின் அருட்பணியாளர்களை தந்தை என்று அழைக்கின்றோம். வெளிப்படையாக அப்படி அழைக்கப்படுவதற்கு தங்கள் திருநிலைப்பாட்டால் அவர்கள் தகுதி பெற்றாலும், அவர்கள் உண்மையிலேயே உள்ளார்ந்த தகுதி பெறுவது அவர்கள் வாழ்க்கை முறையால் தான்.

5. இந்த தகுதி எல்லா தந்தைகளுக்கும் பொருந்தும். பிள்ளை பெறுவதால் ஒருவர் தந்தை என்ற தகுதி பெற்றாலும், பொறுப்பற்ற வாழ்வால், குழந்தைகளை வளர்ப்பதில் அக்கறையின்மையால், குடிப் பழக்கத்தால், தவறான நடத்தையால் அவர்கள் அத்தகுதிக்கு களங்கம் விளைவிக்கின்றனர். 'நீயெல்லாம் ஒரு அப்பனா?' என்று கேட்கும் பிள்ளைகளின் ஓலத்தை தினசரி கேட்கின்றோம்.

6. இதுபோலத்தான் 'நீயெல்லாம் ஒரு சாமியார் போலவா நடந்துக்கிற!' என்று கேட்கும் இறைமக்களின் குரலையும் கேட்க முடிகின்றது.

7. ஆகவே தந்தைகள், ஆசிரியர்கள், போதகர்கள் என்ற தகுதிப் பெயர்களெல்லாம் அவர்கள் எந்த அளவிற்கு தந்தையாம் கடவுளைப் பிரதிபலிக்கின்றனர் என்பதைப் பொறுத்துதான் அளவிடப்படுகின்றது. அந்த அடிப்படையில் நிறைய புனித குருக்களின் தியாகத்தால், அர்ப்பணிப்பால், அநீதியைச் சாடும் இறைவாக்கினர் பண்பால், மன்னிப்பு வழங்கி குணப்படுத்தும் பண்பால், வீழ்ச்சியுற்றாலும் தாங்கிக் கொள்ளும் உடனிருப்பால், மந்தையில் தொலைந்த ஆடுகளைத் தேடும் பாசத்தால், மறைபரப்பும் வேட்கையால், அருளடையாளங்களை செயல்படுத்தும் ஆர்வத்தால், ஒட்டுமொத்த திருச்சபையும் தந்தையாம் கடவுளின் கருணை மிகுந்த முகத்தினைக் கண்டு மகிழ்கின்றது. இன்று குருக்களின் பாதுகாவலராகிய புனித ஜான் மரிய வியான்னியின் திருவிழா! முக்கியமானக் கேள்வி! இன்று உங்கள் அருட்பணியாளர்களுக்காக செபித்தீர்களா? 
'இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கின்றோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை. அது கடவுளுக்கே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது.' (2 கொரிந்தியர் 4, 7)

 
பின்குறிப்பு:

1. கேள்வியை எழுப்பிய நண்பன் பாஸ்டர் பிரவினுக்கு முதற்கண் நன்றி.

2. என்னை என் பெயர் மட்டும் சொல்லி அழைத்தாலே மிகவும் மகிழ்ச்சி அடைவேன். உண்மையில் பெரும்பாலான மக்கள் தந்தை என்று உணர்ந்து அன்புடன் தான் அழைக்கின்றனர். வெகு சிலர்தான் அதை ஒரு பழக்க தோஷத்தால் பெயரளவுக்கு அழைக்கின்றனர். இன்னும் சிலர் கடமைக்கு! நிறைய அருட்பணியாளர்கள், திருத்தந்தை உட்பட இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

3. அருட்பணியாளராக விரும்புபவர்கள் நம்மால் எப்படி இயலும் என்று நினைத்தே நாளைக் கடத்தாமல் உடனே செயலில் இறங்குங்கள். கடவுளால் எல்லாம் இயலும்.


Related Articles